Wednesday 30 December 2015

ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?



நம் தொன்மரபின் தொடர்ச்சி நம் தலைமுறையோடு முடிந்துவிடுமோ என்ற கவலையுடன் கட்சி வேறுபாடின்றித் தமிழகமெங்கும் உரத்தொலிக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்குரல்களைப் பார்வையாளனாக இருந்து பார்த்த என்னை, மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசம் ஐயாவின் இருபதிவுகளும் தற்போது அவர் எனக்கு இது குறித்துத் தனியே விடுத்திருந்த மின்னஞ்சலும் இப்பதிவினை எழுத என்னை இழுத்து வந்திருக்கின்றன.

Friday 18 December 2015

எது கவிதை?


‘தமிழகத்தில் மக்கள் தொகையை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்’ என்பதாக என்றோ வாசித்த துணுக்கொன்று இப்போது நினைவுக்கு வருகிறது. இணையத்தில் இயங்கத்தொடங்கிய இந்தக் குறுகிய காலத்தில், எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் கவிஞர்களாய்த் தெரிகிறார்கள். ஒருவேளை ‘காமாலைக்காரன் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ என்று கூறுவதுபோல என் கண்களுக்குத்தான் இப்படிப்படுகிறதோ என்னமோ?

Tuesday 15 December 2015

சமணம் – 6; குளிரும் சூரியனும் கொதிக்கும் வெண்ணிலாவும்!



சமணம் பற்றிய தொடர்பதிவின் ஐந்தாம் பகுதியை எழுதி ஐந்து மாதத்திற்குப் பிறகு இதன் தொடச்சியை எழுதுவதால் ஒரு பருந்துப்பார்வையில் இதற்கு முன் சமணம் பற்றிய இடுகைகளில் கூறப்பட்ட செய்திகளைத் தொகுத்துப் பார்த்துவிடலாம்.

Sunday 13 December 2015

ரக்ஷிதாவின் கண்களில் இருந்து.....!


வெள்ளம்
வாசம் பிடித்து வருகின்ற வேட்டை நாயைப்போல
எங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது,

Monday 7 December 2015

கங்கங்கங்கங்கங்கங்கம்; தமிழ்தாங்க! இதன் பொருள் தெரிகிறதா?


கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. தட்டச்சுப் பழகுபவர்கள் அடித்துப் பழகும் எழுத்துகளைப் போலத்தான் முதற்பார்வைக்குத் தோன்றுகிறது.

Wednesday 2 December 2015

எங்கிருந்தாலும் வாழ்க.

ஈரமுலர்ந்த  மணல்வீடொன்றின் கலைந்துதிரும் ஆயிரமாயிரம் துகள்களின்  மிச்சமிருந்தன, வனைந்த கரங்களால் இணைந்த கனவுகள். அலை ஆரத்தழுவி அத்தனையும் உட்செரித்த  பேராழங்களில் உவர்மண்ணாய்க் கிடந்தவோர் நாளில் திடீரென நினைவு வந்தது,…. அன்று அவனை அறியாமல் அகன்றுபோன அவளது பிறந்தநாள்…….!

Monday 30 November 2015

காதல் நிறைவேறுமா என்பதை அறியப் பழந்தமிழ்ப்பெண்கள் செய்த சோதனை!


பெண்கள் தங்கள் மனதில் உள்ள காதலை முதலில் வெளிப்படுத்தி ஓர் ஆண் தன்னை விரும்புகிறானா இல்லையா என்பதை அறிவதற்கான வாய்ப்புகள் இன்றும் கூட, நம் சமூகத்தில் குறைவுதான். ஓர் ஆண் என்றால் தன் காதலை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ புலப்படுத்தித் தான் காதலிக்கும் பெண்ணின் நிலைப்பாட்டை அறிய அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

Saturday 28 November 2015

உன் பணம் பணம் என் பணம்.


ஊரிலேயே பெரிய பணக்காரன் அவன். பொன்னும் முத்தும் வைர வைடூரியங்களும் கொட்டிக் கிடக்கின்ற கருவூலம் அவன் வீட்டில் இருந்தது. ஆனால், சேர்த்த செல்வத்தைக் கொண்டு சுகமாக வாழ்வோம் என்ற எண்ணமோ, அது தேவைப்படுவோர்க்குக் கொடுத்து உதவுவோம் என்ற எண்ணமோ அவனிடம் ஒரு சிறிதும் இல்லை. தன் சேமிப்பைப் பார்த்து, ‘இவ்வளவு செல்வமும் என்னுடையது என்னுடையது’ என்று எண்ணிக்கொண்டிருப்பதில் அலாதி மகிழ்ச்சி அவனுக்கு.

Wednesday 18 November 2015

தகனம்.




கொதிக்கும் நினைவென்னை வடிக்கின்றது! – வெந்து
     கிடக்கும் கனவின்னும் துடிக்கின்றது!
விதிக்கும் விளையாட்டுப் பிடிக்கின்றது! – நாட்கள்
     விடிந்தும் விழிமூடிக் கிடக்கின்றது!

Saturday 14 November 2015

நான்கே அடிகளில் இராமாயணம்

பெருங்கதைகளை மிகச் சுருக்கமாகச் சில வரிகளில் சொல்லிவிடும் தமிழ்ப்பாடல்கள் உண்டு. சிலப்பதிகாரக்கதையை ஒரு வெண்பாவில் சொல்லிப்போகும் பாடலை இதற்கு முன் பதிவொன்றில் கண்டிருக்கிறோம்.

Thursday 12 November 2015

படைப்புகளுக்குத் தலைப்பிடுதல்; உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்-16


நாம் எழுதும் பதிவுகள் அல்லது படைப்புகளுக்குத் தலைப்பிடுவது என்பது நம் பதிவுகளைவிட முக்கியமானதாய் இருக்கிறது என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதுவே வாசகரை நம் பதிவுகளின் உள்நுழைய வரவேற்கும் தோரணவாயில்.

Saturday 7 November 2015

பாம்பு




விழித்துக் கொண்டது பாம்பு!
விடத்தைத் துப்ப இடமில்லாமல்
விழுங்கிக் கொண்டது தன்னுள்!
விதையில்லாத மரங்களில் ஏறி
விரட்டிச் சாய்க்குது என்னை!

Friday 30 October 2015

தன் உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டிப்பலி கொடுத்தவனது கல்வெட்டு.




நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்திற்கென ஆட்களைத் திரட்டிப் பயிற்சி அளித்து, ஜப்பானியப் படைத்தலைவனை அணுகி, அவர்களது படையோடு இணைந்து ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய மண்ணை விட்டு அகற்ற உதவிகோருகிறார்.

Wednesday 28 October 2015

அது போதும்.


இடியெடுத்துவெளி மழையுதிர்த்துவளர் கடல்கலக்கவருந் தும்பியை
   இரையெடுத்துநுரை பறையொலித்துமலர் கரைதெளிக்கவரு வெள்ளலை!
படமெடுக்கஒளி வடிவெடுத்தபகல் நொடியுகுத்தகுறு மின்னலைப்
    பரிந்தெடுத்துமுடி இழைபிரித்ததலை செறிவுறுத்துமிருள் வெண்ணிலா!

Saturday 17 October 2015

அத்தான் வருவதே இன்பம்!


ஆசிரியப் பயிற்சியின் போது  மாணவ ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய பல நெறிமுறைகள் சொல்லித்தரப்பட்டதுண்டு. அவை அச்சிடப்பட்ட எந்தப் பாடப்புத்தகங்களில் காணக்கிடையாதன. கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தோ அல்லது சக ஆசிரியர்களின் அனுபவத்தில் இருந்தோ அறிந்து பகிர்வன.

Monday 12 October 2015

யானை எழுதிய சாசனம்.

யானையின் பிடியில் உடல் முறிந்து.

யானைகள் எப்போதும் பிரமிப்புத் தருபவை. சாந்தமும் மூர்க்கமும் ஒருங்கே கொண்ட இயற்கையின் படைப்பு அவை. பண்டைய போர்க்களங்களில் அதன் ஆவேசம், மனிதனுக்காக மனிதனால் உருவேற்றப்படும் அதன் போர்வெறி, போர்க்களத்தில் வீறுகொண்டெழும் அதன் பேராற்றல், அதனை எதிர்த்துக் களமாடும் மனிதத் தறுகண், இவையெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை கற்பனை செய்திருக்கிறேன்.

Friday 9 October 2015

இன்புற வழிகள் ஏழு;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-15

முதலில் இவை ஓர் அரசனின் நன்மைக்காய்ப் புலவர்களால் சொல்லப்பட்ட வழிமுறைகள் என்பதைச் சொல்லிவிடுகிறேன். நமக்கும் பயன்படும் கருத்துகள் இதில் இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Wednesday 7 October 2015

கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.




சித்ரா அக்கா எங்கள் தெருவின் தேர்ந்த கதைசொல்லி. நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே அவருக்கு வயது முப்பதற்கு மேல் இருந்திருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செய்து கொள்ளவில்லை என்பதை விட அவரையாரும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மையென இப்போது தோன்றுகிறது. ஒடிசலான உடல்வாகு. கருப்பென்றாலும் களைமிகுந்த கண்கள்.

Monday 5 October 2015

பழமைக்குத் திரும்புகிறேன்!



வலைப்பதிவர் படைப்பூக்கப் போட்டிகள் முடிந்தன. இனி மதிப்பீடுகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நெடுநாள் கழித்துக் கவிதை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட வரையறைகளில் எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்தது. போட்டி என்பதைக் காட்டிலும் பங்கேற்றல் என்பதே அதன் நோக்கம். போட்டியில்தான் எத்துணை எழுத்தாளுமைகள், தொழில்நுட்பப் பதிவர்கள்,  சமூகச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள், நிச்சயம்  இன்னும் மெருகேறி தமிழ் வாழும் என்கிற நம்பிக்கை என்னுள் வலுவாக வேரூன்றி உள்ளது. போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பதிவர்களின் பதிவுகளையும் படித்தவன் என்கிற முறையில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும்  வணக்கங்களும்..!

Friday 2 October 2015

ஒரு துளி சேரப் பெருங்கடல்.

உலகம் யாவையும் ஒருகுடைக் கீழாய்
ஒடுக்கும் அறிவியல் நடக்கும் பாதையில்
முடங்கும் தமிழின் முதுமை களைந்து
தடங்கள் பதிக்கும் தமிழ்வலைப் பூக்கள்!

Wednesday 30 September 2015

எங்கள் தமிழென்று சொல்!


வித்தின் அகத்துறை வீரியமே! – சிறை
     விட்டுப் புறம்வருக! – தடை
எத்திப் புறப்படும் ஏறெனவே – புகழ்
    ஏட்டில் இடம்பெறுக! – வெறும்

நிம்மதியோடிரு!


பீடுகளால் புனிதப்படுத்தப்பட்ட
ஆண்டைகளின் அரியாசனங்களின் கீழ்
நசுக்கப்பட்டுக் கிடக்கும் விரல்கள் நமதானதில்லை! -  நிம்மதியோடிரு!

Tuesday 29 September 2015

பூனை நடனம்.


நிலத்தையும் மரத்தையும் விலங்கையும் புள்ளையும் கொண்டு திணை வகுத்தோர் தமிழர் என்பது நமது பண்டைய பெருமிதம். உலகம் சிறுபறையெனத் தன்னை நம்மிடம் கையளித்திட்ட பிறகு, ஓர் எறும்பு ஊர்தலின் போது ஏற்படும் அதிர்வையும் அதன் இன்னொரு பகுதியில் இருந்து நாம் உணர வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால் யானைகளின் அசுர ஓட்டத்தைக் கூடக் கேட்க மறுக்கின்ற செவிடர்களாய் நம்மிற் பெரும்பான்மையோர் இருக்கிறோம் என்பதே யதார்த்தம்.

Monday 28 September 2015

இறக்க உயிர்வாழ வேண்டாம்!




கிளியின் குலம்வாழும் காட்டை – உடல்
    கொழுக்கக் கரும்பூனை காக்கின்ற தென்றால்
ஒளிரும் அறிவுள்ள தம்பி! – மனம்
    ஒப்பும் கதையாமோ? உண்மைகள் கூறித்
தெளிவை இனம்காணச் செய்வோம்! – நமைத்
    தேக்கும் பிரிவினைத் தேளை நசுக்க
அளி’உன் உயிரென்று சொன்னால்  -அதற்
    காகவே  ஆயிரம் சென்மம் எடுப்போம்!

Sunday 27 September 2015

யாது ஊர்? யாவர் கேளிர்??




உலகளாவிய மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் - 2015. 
வகை - 4 : முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை.

கசாப்புக் கடையொன்றில் தொங்க விடப்பட்டுள்ள
தோலுரிக்கப்பட்ட என் உடலை
நிலைகுத்திய விழிகளோடு பார்த்துக் கொண்டிருக்கிறது
வெட்டப்பட்ட எனது தலை..!

Saturday 26 September 2015

புறப்படு வரிப்புலியே!




கண்ணிற் சிறுபொறி! மின்னும் அறிவுடன் கையிற் பெருவலியும்
   கரையுற் றிடுகடல் திரைகற் றிடும்படி காத்திர முயற்சிகளும்
விண்ணிற் கனவுகள் வெல்லும் மனதினுள் வீரத் தினவுடனே
    வாளிற் றிடும்வளர் தோளிற் றமிழினும் வாழ நடையிடுவாய்!!

Tuesday 18 August 2015

பின்னோக்கிய ஓர் ஓட்டம்


தமிழின்  மரபார்ந்த அறிவோடு அனாயாசமாக இயங்கும் தமிழாளுமைகளை இணையத்துக் காணுந்தோறும், வாசிப்பின் தொடக்கப்புள்ளியில் வாய்பிளந்து நிற்கும் சிறுபிள்ளையாய் என்னைக் கற்பனை செய்து கொள்வேன்.

Saturday 15 August 2015

கிளிப்பாம்பு


கொஞ்சு மனக்கிளிகள் கூவு மொருபெயராய்க்
     கோடை மழைப்பெருக்கின் கோப முகக்குறியாய்ப்
பிஞ்சு உயிர்துடிக்கப் பேணு பிறைமடியாய்ப்
     பித்த னெனைப்பிடித்துப் போனவுன் மாயமென்ன?

Thursday 13 August 2015

இதென்னடா குரங்கிற்கு வந்த சோதனை?


குரங்கு செய்யும் சேட்டைகளைப் பார்ப்பது என்பது சுவாரசியமானது. ஒரு குரங்கின் ஒட்டுமொத்த சேட்டைகளையும் ஒருசேரக் காணும் தருணம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வாய்ப்பதில்லை. நடக்கக் கூடியதோ இல்லையோ, குரங்கு செய்யும் பல சேட்டைகளைப்  புலவன் கற்பனை செய்து அழகாக்கிக் தரும்போது நம்  ரசனைக்குரியதாக அந்தச் சேட்டைகள் மாறிவிடுகின்றன.

Wednesday 12 August 2015

உயிர் ஓலம்




ஒடித்துக் கண்சிறை உருக்கிக் கொண்டெனை
     ஒறுத்துக் கொன்றிடா துடைக்க ஐம்புலன்
இடித்து நெஞ்சிடம் இறுக்கி என்கரை
     இறைக்கும் உன்முகம் இனிக்க என்‘உலை

Sunday 9 August 2015

பறவை வேட்டை (2)



பறவை வேட்டை தொடர்ச்சி..தங்களுக்கு வரப்போகும் எந்த ஆபத்தையும் உணராமல் இரு குருவிகளும் கூடைக்குக் கீழே இறைக்கப்பட்டிருந்த தானியப் பரப்பைக் கொத்திக் கொண்டிருந்தன. ‘இன்னும் எதற்காக இவன் காத்திருக்கிறான்?’ மெதுவாக அவன் கைகளில் இடித்தேன். அவன் சிலையைப் போல அசையாமல் இருந்தான்.

Saturday 8 August 2015

பறவை வேட்டை






படிக்கும் காலத்தில் எனக்கொரு நண்பன் இருந்தான். பெயர் சசிகுமார். ஆறாம் வகுப்பில் அறிமுகமானவன். நான் முட்டாள்தனமாக என்ன சொன்னாலும் செய்தாலும் என்னை விரும்பி எப்பொழுதுமே வெறுத்திடாத மனது அவனுக்கு. அதனாலோ என்னமோ எங்கள் நட்பு நீடித்திருந்தது.

Tuesday 4 August 2015

இரவில் தன்அறைக்கு வந்த திருடனைத் தனியே பிடித்த தமிழ்ப்பெண்.




திருடனைப் பிடிப்பது என்பது கொஞ்சம் பயமும் பதற்றமும் நிறைந்த அனுபவமாகத்தான் இருக்கும். அதுவும் இருட்டு நேரமென்றால் கேட்கவே வேண்டாம். யாரும் இல்லாத நேரத்தில் தனியே படுத்திருக்கும் ஒரு பெண்ணிடம் திருட வந்தவனாய் இருந்தால்..? அது இன்னும் கொடுமை!

Monday 3 August 2015

தூக்கமும் ஒரு கனவும்.


நல்ல கனவுகள் தொடர வேண்டும் என்றும் கெட்ட கனவுகள் கலைந்து எழுந்தால் போதுமென்றும் நினைப்பது மனித இயல்புதான். இன்னொரு புறம் தூங்காத ஒருவருக்குத் தூக்கமென்பதே கனவுதான்.

Saturday 1 August 2015

சொற்கள் சொல்லாத பொருளை அறிதல்;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (14)


‘சொல்லாத சொல்லுக்குப் பொருளில்லை’ என்பார்கள். ஆனால் சொல்லுகிற சொல்லுக்கும் சொல்லின் பொருளன்றி  வேறு பொருள் இருக்கிறது என்றால் நாம் என்ன செய்வது? இன்றைய பதிவு இதைப் பற்றியதுதான்.

Friday 31 July 2015

ஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.




‘ஆனந்த யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன். இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்து இட்டதில்லை. ஆனால் இந்தப்பாடலின் கருத்தோட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதால் தொடர்ந்து இடவேண்டியதாயிற்று. இப்பதிவுடன் அவ்வளவுதான் இப்பாடலின் பொருள் வேட்டை என்னளவில் நிறைவுற்றது.

Tuesday 28 July 2015

ஒரு பாடலும் சில அர்த்தங்களும்.



மணமாகிச் சில நாட்களிலேயே அவனைப் பிரிய வேண்டிய நிர்பந்தம். அவளுக்கு அவனைப் பிரிய மனமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அப்படி.. இங்கிருந்து நாம் சேர்க்கும் பொருள் வாய்க்கும் வயிற்றிற்குமே போதாது. மழைதொடங்கும் காலத்திற்குள் நாம் வாழக் கொஞ்சம் பொருள் திரட்டி வந்துவிடுவேன் என்கிறான் அவன். அவளுக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. பொருள் என்ன பெரிய பொருள்? அவனுடன் இருப்பதைவிட வேறென்ன தனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியும்?

Sunday 26 July 2015

ஒரு பாடலும் சில நினைவுகளும்.


நாம் இரசித்த மிகச்சில பாடல்கள் இறந்தகாலத்தின் அந்தப் பாடலை அனுபவித்த  சுகமான தருணங்களைச் சட்டென மீட்டெடுக்க வல்லவை.
இரை வைக்கப்பட்ட தூண்டிலாய் ஒவ்வொருமுறையும் எங்கிருந்தேனும் வீசப்படும் அவை நம்மைச் சிக்கெனப்பிடித்து இறப்பின் கரைகளில் வீசியெறியும்.

Friday 24 July 2015

நான்.


என் பால்யத்தின் சிறுபிள்ளைத்தனமான வாசிப்பில் எல்லாவற்றையும் நிறைய அறிந்ததாக எண்ணி, ஏதோ ஒரு பெரிய ஒளிவட்டம் என் தலைக்குப் பின்னே இருப்பதான செருக்கில் ஒரு கிணற்றுத் தவளையில் வெற்றுத் தலைக்கனத்தோடு அலைந்து கொண்டிருந்த காலம் அது.

Thursday 23 July 2015

இந்த அளவு போதை தரும் சரக்கு டாஸ்மாக்கில் கிடைக்குமா?



குடிப்பது தீங்கானது. தமிழகத்தில் மதுவைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, திடீரென்று பெரிய போதை தரும் சரக்கைப் பழைய தமிழ் இலக்கியத்தில் இருந்து  கண்டுபிடித்து, ‘இதெல்லாம் அப்பவே நாங்க கண்டுபிடிச்சிட்டோம்’ என்று தோளுயர்த்திச் சொல்லுவதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை.

Tuesday 21 July 2015

சமணம் ( 5 ) – தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?



உலகத்தின் தோற்றத்திற்கு அணுக்கள் ஒன்றிணைந்து அதனோடு, காலம் ஆகாயம் எனுமிவை சேரவேண்டும் என்றும் அதே நேரம் இவையன்றி வேறு சிலவும் வேண்டுமென்பது சமணர் கருத்து என்றும் சமணம் பற்றிய சென்ற பதிவில் முடித்திருந்தோம்.

இப்பதிவு அணுக்கள், காலம் ஆகாயம் என்பதோடு உலகின் தோற்றத்திற்குச் சமணம் சொல்லும் மேலும் இரு கூறுகளைப் பற்றியது. 

Sunday 19 July 2015

தோசையின் வரலாறு.


ஆம். நாம் சாப்பிடும் தோசையின் வரலாறு தான். எனக்குச் செய்யத் தெரிந்த ஒரே உணவு வகை. இன்று காலை அம்மையுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சமையல் பற்றிய பேச்சினிடையே ரொம்பப் பெருமிதமாக ‘எனக்குத் தோசை சுடத்தெரியும்.’ என்று சொல்லிவிட்டேன்.

Saturday 18 July 2015

தமிழ்ச் சித்திர எழுத்துக்கள் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (13)



தமிழில் எழுத்துகளே தேவை இல்லை. ஆங்கிலத்தை வைத்தோ அல்லது வேறு சில குறியீடுகளை வைத்தோ தமிழை எழுதியும் படித்தும் கொள்ளலாம் என்கின்ற குரல் மெத்தப் படித்தவரிடையே ஒலித்துக்  கொண்டிருக்கும் போது, நாம் தற்போது எழுதும் இந்தத் தமிழ் நெடுங்கணக்கு அல்லாமல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென நம்மிடையே இருந்து, இன்று இல்லாமல் போய்விட்ட சில எழுத்துக்களைப் பற்றிப் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம்.

Thursday 16 July 2015

கொஞ்சம் அருவருப்புத்தான்.


இளகிய மனம் கொண்டவர்கள்  இதனைப் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் கூடிய காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவற்றைப் பார்க்காமல் நம்மில் சிலர் தவிர்த்திருப்போம். நகைச்சுவை, வீரச்சுவை, காதல், என எத்தனையோ சுவைகளைக் கொஞ்சமாவது இலக்கியத்தில் படித்துக் கடந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு ஓர் அருவருப்பு உணர்ச்சியை இதற்கு முன் எந்தப்பாடலும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.

Wednesday 15 July 2015

காமத்திற்குக் கண் இல்லை என்கிறார்கள் - ஏன்?


பொதுவாக இன்றைய ஊடகங்களில்  பாலியல் சார்ந்த, முறை தவறிய- சமூக மரபுகளுக்கு மாறான உறவுகள் குறித்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கான அடிப்படையாகக் குறிப்பிடப்படுவது காமம்.

Monday 13 July 2015

அம்மணமும் சம்மணமும் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள். (12)


ஆடையற்ற உடலை அம்மணம் என்பதும்  உட்கார்ந்த நிலையில் காலை ஒன்றன்மேல் ஒன்றாக மடித்திடுவதைச் சம்மணம் என்பதும் நாம் இன்றும் வழங்கும் வழக்கு. சம்மணம் என்பதைச் சம்மணங்கால், சம்மணப் பூட்டு என்றும் வழங்குகிறோம்.

Sunday 12 July 2015

புதிருக்கு விடை கண்ட கதை.


காளிதாசனைப் பற்றிய கதை எல்லாருக்கும் நினைவிருக்கும். காளிதாசன் எனக் காளியின் தாசனாய் மாறுவதற்கு முன்னால் ஒன்றும் அறியாதவனாய், இளவரசியை மணமுடிக்கப் போய்,  அவள் மௌனமாய்க் கேட்கும் கேள்விகளுக்கு, மனம் போன போக்கில், 1, 2, என விரல்களைக் காட்டிப் பதிலளிக்க, அது தனது கேள்விகளுக்கான தத்துவார்த்தமான பதில் என்று இளவரசி அவனை மணம் முடித்துக் கொள்வாள்.

Saturday 11 July 2015

மனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்.


பொருளுக்குச் சுவையூட்டுவது பற்றிய சென்ற பதிவின் தொடர்ச்சியாக அமையும் இந்தப் பதிவிற்கும் இதன் தலைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலில் வருவது கொஞ்சம் தலைப்பிற்குத் தொடர்பில்லாத செய்தி என்பதால் நேரத்தை வீணாக்க விரும்பாதவர்கள் நேராக இதன் இரண்டாம் பகுதிக்குச் சென்றுவிடலாம்.