Tuesday 31 March 2015

அவன் ‘ கொம்பன் ‘ ஆன கதை!


அவளைப் பார்த்த அவன் நிலையைக் காமத்தின் பத்துப் படிநிலைகளில் கண்டாயிற்று. அவன் மீண்டும் மீண்டும் அவள் இருக்கும் இடத்திற்கு வருகிறான். இருவரும் பார்க்கின்றனர். அவ்வளவுதான். கண்ணோடு கண்ணொக்க, வாய்ச்சொற்கள் எந்தப் பயனும் இல்லாத நோக்கு. எப்படிச் சொல்வது என்று அவனும், அவன் எண்ணம் அறிந்தவளாய் அவளும்  இருக்கக் காலத்தை சாட்சி வைத்து  நீளும் மௌன நாடகம்.

Saturday 28 March 2015

காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்கள் – இது சங்க காலம்.



கண்டதும் காதல் வரும்போது அது இருவருக்கு இடையே பொருத்தம் பார்த்தா வரும்..? நிச்சயிக்கப்படும் திருமணம் என்றாலாவது ஆள் பொருத்தமோ ஜாதகப்பொருத்தமோ பார்க்க முடியும். காதலில் மனதிற்குப் பிடித்திருந்தால் போதாதா பொருத்தம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது.

Monday 23 March 2015

மறைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து…. (2)



 எனும்முந்தைய பதிவின் தொடர்ச்சி.

இருவில்லும் இல்லை கொடுவாளும் இல்லை
     இதயத்தின் உள்ளே இறங்க
ஒருபார்வை போதும் தடுமாறுந் தாளம்
     உடல்மேளம் கொட்டி முழங்கும்!

Saturday 21 March 2015

காமத்தின் பத்துப் படிநிலைகள் - இது சங்க காலம்.



அவனுக்கு ‘முருகன்‘ என்பது பெயர் என்னும் பதிவின் தொடர்ச்சி

 மலை நிறையும் குளிர்.

கணப்பாய் மாறிய உடல்.

கவலைகள் அற்று அதுவரை உறங்கிய அவளது உறக்கம் முதல் முறையாகத் தொலைவது அப்பொழுதுதான்.

இன்னொருபுறம்,

அவளது முகத்தை நினைவிற்குக் கொண்டுவர முயல்கிறான் அவன்.
மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறான்.

அவனுக்கு முதலில் தோன்றுவது அவளது அந்தப் பார்வைதான்.

முதற்பார்வையில் அந்தக் கண்கள் அவனோடு புரிந்த போர்.

Thursday 19 March 2015

மறைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து……!

( ஒரேயடியா சீரியஸா போய்க்கொண்டிருந்தா எப்படி…… என்பதால் இறந்தகாலத்தில் இருந்தெழும் இந்த  இடைநிரப்பிப் பதிவுகள்…!  )





களிகொண்டு துள்ளும் கயல்வண் டிரண்டும்

         கணையொன்றில் என்றன் நிழலை

வெளிகொண்டு வந்து வெறிகொண்ட அன்பு

         வினையாலே என்னை இறுக்கி

Monday 16 March 2015

பெருமாள் முருகனின் ஆலவாயன்.



“ போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக்கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுந்தியது. மேலே பார்த்தான். பூவரசங்கிளைகள் வானில் விரிந்து பரவியிருந்தன “ என்ற வரிகளுடன் முடிந்திருக்கும் பெருமாள் முருகனின் மாதொருபாகன், காளியின்  தற்கொலை மனவோட்டத்தைக் காட்டுவதாய் முடிந்திருந்தது.

காளி தற்கொலை செய்து கொண்டானா ? இல்லையா ? பொன்னாவின் நிலை என்ன?  என்ற கேள்விகளைப் படிப்போரின் யூகத்திற்கு விட்டபடி நாவலை முடித்திருப்பார் பெருமாள் முருகன். சிறு வயதில் கதைகளைப் படிக்கும்போதும் பின்பு சிறுபிள்ளைத்தனமான கதைகளை எழுதியபோதும் கதை உணர்த்தும் நீதி என்ன என்பதைச் சொல்ல  வேண்டியிருந்தது. வாசிப்பின் பரப்பு விரிவடைந்த போது  நீதி போதனை, பிரச்சாரம் இவற்றைச் செய்வற்காக ஆக்கப்பட்டவை புனைவுகள் இல்லை என்பது புரிந்தது.

Thursday 12 March 2015

அவனுக்கு ‘முருகன் ‘ என்பது பெயர்.


அந்தக் காலத்து அகமரபில் தலைவனது பெயரையோ தலைவியது பெயரையோ சுட்டிச் சொல்லும் வழக்கம் இல்லை. அகப்பாடல்கள் எங்கும் அவர்கள் பெயரற்றே உலவுகிறார்கள்.

செவிலி, நற்றாய், பாங்கன் (தோழன்), பாங்கி ( தோழி ) இப்படிப் பொதுப்பெயர்களால் மட்டுமே அவர்கள் சுட்டப்படுகிறார்கள்.

Tuesday 10 March 2015

திருமணத்திற்கு முன் ஒரு தேனிலவு – இது சங்க காலம்.




அவர் என்னுடன் பணியாற்றுபவர். தன் மகளுக்குப் பெரும் பொருட்செலவில் திருமணம் முடித்து வைத்திருந்தார். விடுப்பு முடிந்து பணியில் சேர வந்தததன் பின் பேச்செல்லாம் மருமகனைப் பற்றியும் திருமணம் பற்றியுமாய்த்தான் இருந்தது.

அடுத்து மணமக்களுக்கு ஹனிமூன் ஏற்பாடு செய்ய  வேண்டும் ஊட்டி கொடைக்கானல் என்று போனால் நல்லாயிருக்காது என்றார். வேறெங்கு அனுப்பலாம் என்று கேட்டார்.

ஒருவர் மூனாறு என்றார். இன்னொருவர் டாப்சிலிப் நன்றாக இருக்கும். ரிசாட் எல்லாம் இருக்கிறது என்றார்.

மணவை ஜேம்ஸ் அய்யா, தடாலடியாக “ அப்பப் பேசாம சுவிட்சர்லாந்த் அனுப்பி வைச்சுருங்களேன் சார் “ என்று போட்டார் ஒரு போடு.

Friday 6 March 2015

அவன் - அவள் - ‘ அது ‘ -- இது சங்க காலம்.


அவள் பின்னே பலமுறை அலைந்தவன் அவன்.
அவள் அன்பைப் பெறுவதற்காகப் பலநாள் காத்திருந்தவன்.
நாளடைவில் அவள் மனம் கனிகிறது.
அவளும் அவன்மேல் அன்பு கொள்கிறாள்.
சாட்சிகள் எவரும் இன்றி யாருமற்ற தனிமையில் அவளை அவன் திருமணம் செய்து கொள்கிறான்.
“இதேபோல் ஒருநாள் உன்னைப் பெண்கேட்டு வந்து உன் உற்றாரும்  பெற்றோரும் சூழத் திருமணம்செய்து கொள்வேன்“ என்று உறுதி கூறுகிறான் .