Tuesday 25 October 2016

ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்


ஆசீவகர் பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது? என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.

Sunday 23 October 2016

தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ்.

நாஸ்டர்டாமஸ்- எதிர்காலத்தைக் கணித்து எழுதிய குறிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர். அவரது காலத்திற்குப் பின் நடந்தனவற்றை அவர் எழுதிய குறிப்புகளோடு பொருத்தி, உலகம் முழுவதும் நடக்க இருப்பதை அன்றே கணித்துச் சொன்னவர் என்ற புகழுக்குச்சொந்தக்காரர்.

Friday 21 October 2016

நாம் பேசும் சொற்களா இவை?:உங்கள் தமிழைத்தெரிந்து கொள்ளுங்கள்-19


நாம் அன்றாடம் பேசிட எழுதிட எத்தனையோ சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு நாம் குறிக்க விரும்பும் பொருளன்றி வேறு பொருளும் இருக்கலாம்.  அல்லது நாம்  குறிப்பிட்ட சொல்லுக்கு உரிய பொருளை அறியாமல் அதனைப் பயன்படுத்தவும் செய்யலாம். சில சொற்கள்  நாளடைவில் தம் நுண்ணிய பொருள் வேறுபாடு மறைந்து ஒரே பொருளாய்ப் போய்விடலாம்.

பயன்பாட்டில் உள்ள மொழியின் தன்மை இது.

பேசுதல் என்கிற பொருளைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உண்டு.

அறைதல், இயம்புதல், இசைத்தல், உரைத்தல், கூறுதல், சாற்றுதல், நவிலுதல், நுதலுதல், பகர்தல், பறைதல், பன்னுதல், புகலுதல், புலம்புதல், மாறுதல், மொழிதல், என்பன அவற்றுள் சில.

ஆனால் பேசுதலுக்கும் அதற்கு இணையாக வழங்கப்படுகின்ற இச்சொற்களுக்கும் நுண்ணிய வேறுபாடுண்டு எனக் காட்டுகிறார் தேவநேயப்பாவாணார்.

இதோ அவர்தரும் பொருள்:

பேசுதல் –  ஒருமொழியிற் சொல்லுதல்.
அறைதல் – ஓங்கிப் பேசுதல், வன்மையாகச் சொல்லுதல்
இயம்புதல் – இனிமையாகச் சொல்லுதல், இசைக்கருவி இயக்கிச்                      சொல்லுதல்
இசைத்தல் – கோவையாகச் சொல்லுதல்
உரைத்தல் – நூலுக்கு உரைகூறுதல், விளக்கிச்சொல்லுதல்
கூறுதல் – பாகுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல் – பலரறிய நல்லுரை கூறுதல்
நவிலுதல் – நாவினால் ஒலித்துப் பயிலுதல்
நுதலுதல் – சொல்லித் தொடங்குதல்
நுவலுதல் – நூலுரைத்தல், நுண்பொருள் கூறுதல்.
பகர்தல் – பண்டங்களின் விலை கூறுதல்.
பறைதல் – உரத்துச் சொல்லுதல்.
பன்னுதல் – பணிக்காய் ( விவரமாய் )ச் சொல்லுதல்.
புகலுதல் – விரும்பிச் சொல்லுதல்
புலம்புதல் – தனிமையிற் சொல்லுதல்.
மாறுதல் – திருப்பிச் சொல்லுதல்., மறுமொழி கூறுதல்.
மொழிதல் – சொற்களை நன்றாய்ப் பலுக்கிச் சொல்லுதல்.

( பக்.33., சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு )

வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.

(  பேரறிஞர்களின் பேருழைப்பால் தொகுக்கப்பட்ட தமிழ்லெக்சிகனில் உள்ள குறைகளைச் சான்றாதாரங்களுடன் பட்டியலிட்ட பாவாணரின் தமிழறிவும், அதனைப் பொருட்படுத்தாமல்  அலட்சியம் செய்த அந்நாள் தமிழறிஞர்களும் பற்றிய அவலச்சுவை மிகுந்த முன்னுரை ஒன்று இந்நூலில் உண்டு. குறைந்தபட்சம்  தமிழார்வம் மிக்கவர்களேனும் பார்க்க வேண்டும் என்பது என் பரிந்துரை )

படஉதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images

Wednesday 19 October 2016

ஆசீவகம். – காமம் எப்படித் தோன்றுகிறது?



ஆரியர்களின் வருகைக்குமுன் இந்தியப்பெருநிலத்தில் இருந்த சமயங்கள் மூன்று. அவை, ஆசீவகம், சமணம், பௌத்தம் என்பன.

Monday 17 October 2016

வசைகவி – கொஞ்சம் காதைப் பொத்திக் கொள்ளுங்கள்!


புலவர்கள், கவிஞர்கள் வாழ்த்திப் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவன் எப்படியெல்லாம் நாசமாகப் போகவேண்டுமென அவருள் எவரேனும் பாடியதைக் கேட்டிருக்கிறீர்களா?

Sunday 16 October 2016

இந்தப் பழைய தமிழ் உரையாடலில் உள்ள இரகசியம் – உங்களுக்குத் தெரிகிறதா?


பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இருவர் பேசிய உரையாடலின் எழுத்துப்பதிவு இது. இவர்கள் உரையாடலுள் ஓர் இரகசியம் இருக்கிறது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Thursday 13 October 2016

இல்லாளிடம் இல்லாதது எது?:உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-18


நாடாளும் மன்னராய் இருந்தாலும் இல்லத்தின் ஆட்சி என்னவோ மனைவியிடம்தான். அவளிடம் இல்லாதது இருக்கிறதா? இருக்கிறது.

Wednesday 12 October 2016

சமணம் – சில அனுபவங்கள்..!



தமிழகத்தில் வழக்கிலிருந்த தொல்சமயங்களைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆவல் எனக்கு இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தபோது தோன்றியது.

Tuesday 11 October 2016

100 வயது வரை பல்விழாமல் தடுக்கும் பற்பொடி! -1898ஆம் ஆண்டு விளம்பரப்படம்.

1898ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூலின் இறுதிப்பக்கத்தில் வந்த விளம்பரம் இது.

Monday 10 October 2016

இவளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? – கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசாம்!


உங்களில் சிலர் நிச்சயம் இவளைப் பார்த்திருக்கக் கூடும். கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு என்று வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Saturday 8 October 2016

சமணம் – 7. தெய்வமாவது எப்படி?



மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சமணம் பற்றிய இத்தொடர் இடுகை அதன் நிறைவுப் பகுதிக்கு வருகிறது.

Wednesday 5 October 2016

அம்மா பெரிதென்று….!

பதிவுலகில் நுழைந்த புதிதில் பல்வேறு தளங்களுக்கும் சென்று பலருடைய பதிவுகளையும் வாசித்து மனதிற்பட்டதைப் பட்டவாறே பின்னூட்டம் இட்டு வந்திருக்கிறேன். சில இடங்களில் மூக்குடைந்து போனதும் உண்டு.

Tuesday 4 October 2016

மாண்டவன் நாட்குறிப்பு - 1



கசப்பின் நெடிபடர்ந்த எழுத்துகளை
அமுதசுனையூறும்
உன் எரியோடைக்குத்தான் கொண்டுவருகிறேன்  இப்போதும்….!