Thursday 14 January 2016

மன்னியுங்கள்! இது ஒரு வலி மிகுந்த பதிவு!


பிரபல வலைப்பதிவரும் நண்பருமான இதழியலாளர், திரு. எஸ். பி . செந்தில்குமார் அவர்கள் எனது பதிவின் பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்த கேள்வியும் அதற்கான பதிலும்தான் இந்தப் பதிவின் சாரம். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் என் மனம் விரும்பாத பதிவு எது என்றால்  அந்தப் பதிவினைத்தான் சொல்வேன்.

Tuesday 12 January 2016

சொல்லாத சொல்லுக்கும் பொருள் உண்டு; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-17


தொடர்பதிவுகளை இடைவெளிவிட்டுத் தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நான் கடந்த சில பதிவுகளாகக் கலித்தொகைப் பாடலொன்றைத் இடைவெளியின்றிப் பதிந்து போனேன். இன்னும் அந்த ஒருபாடலே முடிவு பெறவில்லை. சரி…., நீண்ட பதிவிற்கு ஓர் இடைவெளிவிட்டுச் சிறிய பதிவொன்றை இடலாமே என்று இதனைத் தொடர்கிறேன்.

Saturday 9 January 2016

உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1. 2




ஏறுதழுவுதல் தொடங்கிவிட்டது. வேகமாகச் சீறிப்பாயும் காளையை அடக்க வீரன் ஒருவன் களமிறங்கிவிட்டான். அது தொழுவில் இறங்கி நிதானமாக நின்று தன்முன் சிறுபதரென நிற்கும் அவனையே ஊன்றிப் பார்க்கிறது.

Saturday 2 January 2016

பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் ; பகுதி 1




அவள் இடையர் குலத்தைச் சார்ந்தவள். அதென்ன இடையர் குலம்? தமிழ் நிலங்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப் பிரிக்கப்பட்ட போது, குறிஞ்சி நிலமாகிய காட்டிற்கும் மருதநிலமான வயல்வெளிக்கும் இடைப்பட்டிருந்த காடுகளால் ஆன நிலமான முல்லை இடைநிலம் என அழைக்கப்பட்டது. அந்த இடைநிலத்தில் வாழ்ந்ததனால் அவர் குலம் இடையர் குலம் எனப்பட்டது.