Friday 2 October 2015

ஒரு துளி சேரப் பெருங்கடல்.

உலகம் யாவையும் ஒருகுடைக் கீழாய்
ஒடுக்கும் அறிவியல் நடக்கும் பாதையில்
முடங்கும் தமிழின் முதுமை களைந்து
தடங்கள் பதிக்கும் தமிழ்வலைப் பூக்கள்!
கரங்கள் ஆயிரம் விரித்துப் பதிவர்
களங்கள் காணுவர்! கதிர்தமிழ் ஒன்றாய்க்
காணும் முயற்சியில் புதுகை மாநகர்
கட்டி யெழுப்பும் பதிவர் திருவிழா!
அழைப்பிதழ் காண்க! அனைவரும் வருக!
உழைப்பவர் உள்ளம் மகிழ
ஒருதுளி  எனவே இணைய(க்) கடலே!





நன்றி - கவிஞர். ந. முத்துநிலவன்.
               கவிஞர். வைகறை.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

42 comments:

  1. வணக்கம், ஐயா,
    அழைப்புக் கவி அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் முதற்கருத்திற்கும் நன்றி பேராசிரியரே!

      Delete
    2. வாழ்த்துக்கள் ஐயா

      Delete
  2. அன்புள்ள அய்யா,

    ஒரு துளி சேரச் சேரப் பெருங்கடல் ஆகிப்
    புதுகை வலைப்பதிவர் அலை வீசட்டும்...!
    தமிழெழுச்சி எங்கும் பொங்கட்டும்...!
    கவிதையில் அழைப்பு கண்டு களித்தேன்.

    நன்றி.
    த.ம. 3.


    ReplyDelete
    Replies
    1. கவிதைப் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா.

      Delete
  3. சந்திப்போம் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    நிகழ்வுசிறக்க எனது வாழ்த்துக்கள்.த.ம 5
    நிகழ்வில் எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் அறிமுகம் ஆகிறது.. வேண்டி படித்து விமர்சனம் எழுதுங்கள்...
    எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் காண வாருங்கள்
    Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. ஆகா
    தங்களின் அழைப்பேஅற்புதம்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்! விழா சிறக்கட்டும்!

    ReplyDelete
  7. அழகான கவிதையுடன் கூடிய அழைப்பிதழ் கண்டென். மிக்க மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
  8. கவிதையிலேயே இனிய வரவேற்பு நன்றி நன்றி ! மிக்க மகிழ்ச்சி.!
    விழா சிறக்க வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  9. பதிவர்கள் ஒன்று கூடி மகிழ்ந்திட விட்ட அழைப்பிதழ் அருமை ! அருமை !
    வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்கள் இங்கு ஒன்று கூடி மகிழட்டும் .

    ReplyDelete
  10. அருமை ஐயா!

    விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வணக்கம் பாவலரே !

    அழகான கவிதைக்கு ஆயிரம் நன்றிகள் விழா சிறக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
    தம +!

    ReplyDelete
  13. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
    தம +1

    ReplyDelete
  14. கடல் அலையில் காலை நனைக்க நானும் தயாராகி விட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. தைரியமாய்ச் செல்லுங்கள்.

      அடித்துக் கொண்டுபோகாமல் காப்பாற்ற கரையில் நின்று கொண்டிருக்கிறேன் ;)

      நன்றி ஜி.

      Delete
  15. நமக்காக நாம் விடுக்கும் அழைப்பு. கவிதை அழகு. சந்திப்போம்.

    ReplyDelete
  16. அட! சகோதரரே! என்ன அருமையான அழைப்பு! கவிநயத்துடன் உங்கள் நடையில்!!! தனிவழி!!!

    வருவீர்கள் தானே?!! சந்திக்கும் ஆவலுடன்.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆசானே.

      உறுதியில்லை.

      முயல்கிறேன்.

      நன்றி.

      Delete
  17. மீண்டும் வாசித்தோம்!! அட்டகாசம்! முடிலைப்பா...ஹஹஹ்!!

    ReplyDelete
  18. ஆஹா மிக்க நன்றி சகோ....காத்திருக்கின்றோம்..உங்களைக்காண....விழாவில்....

    ReplyDelete
  19. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.

    ReplyDelete
  20. அழைப்புக் கவிதை நன்று!

    ReplyDelete
  21. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

    பணம்அறம்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      தளம் மாறி வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது.

      :(

      Delete

  22. வணக்கம்!

    வலைப்பதிவர் நட்பை வரவேற்ற பாடல்
    கலைச்சுவையைக் காட்டும் கமழ்ந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. கமழும் தமிழ்ப்பாகின் கற்கண்டுச் சாற்றில்
      அமிழும்பின் னூட்ட மழகு

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

      Delete