Saturday 19 July 2014

உலகில் நீ மாத்திரம்!



அறிவை முடமாக்கி அன்புப் பெருந்தீயால்
     அணைத்த என்தேவியே! – உயிர்
முறிதல் காணாயோ? மூர்க்கம் தீராயோ?
     முடங்கு தென்னாவியே!

Wednesday 16 July 2014

நீயல்லால் வேறொரு காட்சியில்லை!




 








பாதம் அழுந்திய நின்தடங்கள் – எங்கும்
     பசுமையாய் என்றும் நினைவிருக்க
ஏதும் அறியாமல் நீயிருப்பாய்! – உனை
     என்றும் அறிந்திட நானிருப்பேன்!

Tuesday 15 July 2014

மதி வென்ற கதிர்!





முடிந்த கதைகளைத் தொடங்கெனவே – தினம்
     மூர்க்கமாய்த் தாக்குமென் மனவிலங்கைக்
கடிந்(து) அடக்கவோர் வழியிலையே! – ஐயோ
     கடித்துக் குதறினும் பொறுப்பதன்றி!
விடிந்தன இரவுகள்! வெளிச்ச மில்லை!! – மதி
     வென்றிடத் தண்கதிர் விரும்பவில்லை!

Sunday 13 July 2014

உயிர் திரும்பும்!





கரைகள் தகர்க்கும் ஆறெனநீ! – அவ்
     வாற்றைத் தடுக்கும் அணையென நான்!
நுரைகள் திரட்டி நீவருவாய்! – உனை
     நிரப்பி நிரம்பி நான்வழிவேன்!

Friday 11 July 2014

“உள்ளங்கவர் களவன்“




உங்களில் பலரும் இதை உள்ளங்கவர் கள்வன் என்றே வாசித்திருப்பீர்கள். என் மேல் அக்கறை உள்ள ஒரு சிலர், “தலைப்பையே எழுத்துப் பிழையோடு எழுதிவிட்டான் உடனே  திருத்துமாறு சொல்ல வேண்டும்“ என்று மனதிற்குள்ளாவது நினைத்திருப்பீர்கள். மன்னிக்க வேண்டும். நான் சொல்ல வந்தது உள்ளங் கவர் களவனைப் பற்றித்தான்!

Tuesday 8 July 2014

அறிவினாவும் ஐய விடைகளும்!

முத்துநிலவன் அய்யாவின் வலைப்பக்கத்தில் இருபத்தைந்து கேள்விகள் இன்று காலை கணினியைத் திறந்ததும் கண்பட்டன. சுவாரசியமானவை.
தெரிந்த விடைகளுக்கு விடையளித்துக் கொண்டே படித்தால் கடைசியில் என் பெயரும் ......!
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டும் என்பதில்லை!
கூறும் விடையாவும் சரியாக இருக்க வேண்டுவதும் இல்லை. தவறினைத் திருத்தவும் தெரியாதனவற்றைத் தெளிவுபடுத்தவும் யாவரும் வருக!
திருத்திப் பின்னூட்டமிட முத்துநிலவன் அய்யாவையே அழைக்கிறேன்.

Monday 7 July 2014

வீழ்ந்து விட்டேன்!






மூடிக் கிடந்த கதவினுளே – பெரும்
     மோனத் தமிழ்ந்(து) இருந்த எனைத்
தேடிப் பிடித்துன் நினைவலையால் – நிதந்
     தேடிக் கனவிலுந் தெருட்டுவையோ?

Friday 4 July 2014

பதங்கமாதல்




கண்ணிகளை
உறவுகள்மேல் விரித்து
என்னைப் பிடித்த பின்