Tuesday 18 August 2015

பின்னோக்கிய ஓர் ஓட்டம்


தமிழின்  மரபார்ந்த அறிவோடு அனாயாசமாக இயங்கும் தமிழாளுமைகளை இணையத்துக் காணுந்தோறும், வாசிப்பின் தொடக்கப்புள்ளியில் வாய்பிளந்து நிற்கும் சிறுபிள்ளையாய் என்னைக் கற்பனை செய்து கொள்வேன்.

Saturday 15 August 2015

கிளிப்பாம்பு


கொஞ்சு மனக்கிளிகள் கூவு மொருபெயராய்க்
     கோடை மழைப்பெருக்கின் கோப முகக்குறியாய்ப்
பிஞ்சு உயிர்துடிக்கப் பேணு பிறைமடியாய்ப்
     பித்த னெனைப்பிடித்துப் போனவுன் மாயமென்ன?

Thursday 13 August 2015

இதென்னடா குரங்கிற்கு வந்த சோதனை?


குரங்கு செய்யும் சேட்டைகளைப் பார்ப்பது என்பது சுவாரசியமானது. ஒரு குரங்கின் ஒட்டுமொத்த சேட்டைகளையும் ஒருசேரக் காணும் தருணம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வாய்ப்பதில்லை. நடக்கக் கூடியதோ இல்லையோ, குரங்கு செய்யும் பல சேட்டைகளைப்  புலவன் கற்பனை செய்து அழகாக்கிக் தரும்போது நம்  ரசனைக்குரியதாக அந்தச் சேட்டைகள் மாறிவிடுகின்றன.

Wednesday 12 August 2015

உயிர் ஓலம்




ஒடித்துக் கண்சிறை உருக்கிக் கொண்டெனை
     ஒறுத்துக் கொன்றிடா துடைக்க ஐம்புலன்
இடித்து நெஞ்சிடம் இறுக்கி என்கரை
     இறைக்கும் உன்முகம் இனிக்க என்‘உலை

Sunday 9 August 2015

பறவை வேட்டை (2)



பறவை வேட்டை தொடர்ச்சி..தங்களுக்கு வரப்போகும் எந்த ஆபத்தையும் உணராமல் இரு குருவிகளும் கூடைக்குக் கீழே இறைக்கப்பட்டிருந்த தானியப் பரப்பைக் கொத்திக் கொண்டிருந்தன. ‘இன்னும் எதற்காக இவன் காத்திருக்கிறான்?’ மெதுவாக அவன் கைகளில் இடித்தேன். அவன் சிலையைப் போல அசையாமல் இருந்தான்.

Saturday 8 August 2015

பறவை வேட்டை






படிக்கும் காலத்தில் எனக்கொரு நண்பன் இருந்தான். பெயர் சசிகுமார். ஆறாம் வகுப்பில் அறிமுகமானவன். நான் முட்டாள்தனமாக என்ன சொன்னாலும் செய்தாலும் என்னை விரும்பி எப்பொழுதுமே வெறுத்திடாத மனது அவனுக்கு. அதனாலோ என்னமோ எங்கள் நட்பு நீடித்திருந்தது.

Tuesday 4 August 2015

இரவில் தன்அறைக்கு வந்த திருடனைத் தனியே பிடித்த தமிழ்ப்பெண்.




திருடனைப் பிடிப்பது என்பது கொஞ்சம் பயமும் பதற்றமும் நிறைந்த அனுபவமாகத்தான் இருக்கும். அதுவும் இருட்டு நேரமென்றால் கேட்கவே வேண்டாம். யாரும் இல்லாத நேரத்தில் தனியே படுத்திருக்கும் ஒரு பெண்ணிடம் திருட வந்தவனாய் இருந்தால்..? அது இன்னும் கொடுமை!

Monday 3 August 2015

தூக்கமும் ஒரு கனவும்.


நல்ல கனவுகள் தொடர வேண்டும் என்றும் கெட்ட கனவுகள் கலைந்து எழுந்தால் போதுமென்றும் நினைப்பது மனித இயல்புதான். இன்னொரு புறம் தூங்காத ஒருவருக்குத் தூக்கமென்பதே கனவுதான்.

Saturday 1 August 2015

சொற்கள் சொல்லாத பொருளை அறிதல்;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (14)


‘சொல்லாத சொல்லுக்குப் பொருளில்லை’ என்பார்கள். ஆனால் சொல்லுகிற சொல்லுக்கும் சொல்லின் பொருளன்றி  வேறு பொருள் இருக்கிறது என்றால் நாம் என்ன செய்வது? இன்றைய பதிவு இதைப் பற்றியதுதான்.