Monday 30 November 2015

காதல் நிறைவேறுமா என்பதை அறியப் பழந்தமிழ்ப்பெண்கள் செய்த சோதனை!


பெண்கள் தங்கள் மனதில் உள்ள காதலை முதலில் வெளிப்படுத்தி ஓர் ஆண் தன்னை விரும்புகிறானா இல்லையா என்பதை அறிவதற்கான வாய்ப்புகள் இன்றும் கூட, நம் சமூகத்தில் குறைவுதான். ஓர் ஆண் என்றால் தன் காதலை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ புலப்படுத்தித் தான் காதலிக்கும் பெண்ணின் நிலைப்பாட்டை அறிய அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

Saturday 28 November 2015

உன் பணம் பணம் என் பணம்.


ஊரிலேயே பெரிய பணக்காரன் அவன். பொன்னும் முத்தும் வைர வைடூரியங்களும் கொட்டிக் கிடக்கின்ற கருவூலம் அவன் வீட்டில் இருந்தது. ஆனால், சேர்த்த செல்வத்தைக் கொண்டு சுகமாக வாழ்வோம் என்ற எண்ணமோ, அது தேவைப்படுவோர்க்குக் கொடுத்து உதவுவோம் என்ற எண்ணமோ அவனிடம் ஒரு சிறிதும் இல்லை. தன் சேமிப்பைப் பார்த்து, ‘இவ்வளவு செல்வமும் என்னுடையது என்னுடையது’ என்று எண்ணிக்கொண்டிருப்பதில் அலாதி மகிழ்ச்சி அவனுக்கு.

Wednesday 18 November 2015

தகனம்.




கொதிக்கும் நினைவென்னை வடிக்கின்றது! – வெந்து
     கிடக்கும் கனவின்னும் துடிக்கின்றது!
விதிக்கும் விளையாட்டுப் பிடிக்கின்றது! – நாட்கள்
     விடிந்தும் விழிமூடிக் கிடக்கின்றது!

Saturday 14 November 2015

நான்கே அடிகளில் இராமாயணம்

பெருங்கதைகளை மிகச் சுருக்கமாகச் சில வரிகளில் சொல்லிவிடும் தமிழ்ப்பாடல்கள் உண்டு. சிலப்பதிகாரக்கதையை ஒரு வெண்பாவில் சொல்லிப்போகும் பாடலை இதற்கு முன் பதிவொன்றில் கண்டிருக்கிறோம்.

Thursday 12 November 2015

படைப்புகளுக்குத் தலைப்பிடுதல்; உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்-16


நாம் எழுதும் பதிவுகள் அல்லது படைப்புகளுக்குத் தலைப்பிடுவது என்பது நம் பதிவுகளைவிட முக்கியமானதாய் இருக்கிறது என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதுவே வாசகரை நம் பதிவுகளின் உள்நுழைய வரவேற்கும் தோரணவாயில்.

Saturday 7 November 2015

பாம்பு




விழித்துக் கொண்டது பாம்பு!
விடத்தைத் துப்ப இடமில்லாமல்
விழுங்கிக் கொண்டது தன்னுள்!
விதையில்லாத மரங்களில் ஏறி
விரட்டிச் சாய்க்குது என்னை!