Wednesday 30 September 2015

எங்கள் தமிழென்று சொல்!


வித்தின் அகத்துறை வீரியமே! – சிறை
     விட்டுப் புறம்வருக! – தடை
எத்திப் புறப்படும் ஏறெனவே – புகழ்
    ஏட்டில் இடம்பெறுக! – வெறும்

நிம்மதியோடிரு!


பீடுகளால் புனிதப்படுத்தப்பட்ட
ஆண்டைகளின் அரியாசனங்களின் கீழ்
நசுக்கப்பட்டுக் கிடக்கும் விரல்கள் நமதானதில்லை! -  நிம்மதியோடிரு!

Tuesday 29 September 2015

பூனை நடனம்.


நிலத்தையும் மரத்தையும் விலங்கையும் புள்ளையும் கொண்டு திணை வகுத்தோர் தமிழர் என்பது நமது பண்டைய பெருமிதம். உலகம் சிறுபறையெனத் தன்னை நம்மிடம் கையளித்திட்ட பிறகு, ஓர் எறும்பு ஊர்தலின் போது ஏற்படும் அதிர்வையும் அதன் இன்னொரு பகுதியில் இருந்து நாம் உணர வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால் யானைகளின் அசுர ஓட்டத்தைக் கூடக் கேட்க மறுக்கின்ற செவிடர்களாய் நம்மிற் பெரும்பான்மையோர் இருக்கிறோம் என்பதே யதார்த்தம்.

Monday 28 September 2015

இறக்க உயிர்வாழ வேண்டாம்!




கிளியின் குலம்வாழும் காட்டை – உடல்
    கொழுக்கக் கரும்பூனை காக்கின்ற தென்றால்
ஒளிரும் அறிவுள்ள தம்பி! – மனம்
    ஒப்பும் கதையாமோ? உண்மைகள் கூறித்
தெளிவை இனம்காணச் செய்வோம்! – நமைத்
    தேக்கும் பிரிவினைத் தேளை நசுக்க
அளி’உன் உயிரென்று சொன்னால்  -அதற்
    காகவே  ஆயிரம் சென்மம் எடுப்போம்!

Sunday 27 September 2015

யாது ஊர்? யாவர் கேளிர்??




உலகளாவிய மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் - 2015. 
வகை - 4 : முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை.

கசாப்புக் கடையொன்றில் தொங்க விடப்பட்டுள்ள
தோலுரிக்கப்பட்ட என் உடலை
நிலைகுத்திய விழிகளோடு பார்த்துக் கொண்டிருக்கிறது
வெட்டப்பட்ட எனது தலை..!

Saturday 26 September 2015

புறப்படு வரிப்புலியே!




கண்ணிற் சிறுபொறி! மின்னும் அறிவுடன் கையிற் பெருவலியும்
   கரையுற் றிடுகடல் திரைகற் றிடும்படி காத்திர முயற்சிகளும்
விண்ணிற் கனவுகள் வெல்லும் மனதினுள் வீரத் தினவுடனே
    வாளிற் றிடும்வளர் தோளிற் றமிழினும் வாழ நடையிடுவாய்!!