Monday 29 December 2014

‘ங்‘ சொல்வது என்ன?


ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது ஆசிரியப் பயிற்சி மாணவிகள் எங்கள் வகுப்பிற்குப் பாடம் நடத்த வந்திருந்தார்கள். மூன்று விஷயங்களால் அவர்கள் வருகை எங்களுக்குச் சுவாரசியமாய் இருக்கும். 

ஒன்று பார்த்துச் சலித்த முகத்திற்குப் பதில் ஒரு புதுமுகம்.

இரண்டாவது நாங்கள் என்ன கேட்டாலும் என்ன செய்தாலும் அவர்கள் எங்களை அடிக்கவோ திட்டவோ மாட்டார்கள்.

முக்கியமானது, பாடம் நடத்தும்போது இடையிடையே, நிறையப் படங்கள், மாதிரிகள் எனக் காட்டுவார்கள். பாடத்தைவிட அதைப்பார்ப்பது மிகச் சுவாரசியமாய் இருக்கும்.
சுருட்டப்பட்ட சார்ட்டுகளில் என்ன இருக்கிறது என்பதும், மூடிவைக்கப்பட்ட பைகளில் இருந்து என்ன எடுத்துக் காட்டப்போகிறார்கள் என்பதும்தான் பாடத்தை விட எங்களுக்கு பேரார்வமாய் இருப்பவை.

Thursday 25 December 2014

திருக்குறள் கற்பிதங்கள் – புனைவு எண். 1


திருவள்ளுர் தினத்தைத் தேசியவிழாவாக வடமாநிலங்களிலும் கொண்டாட வேண்டும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளதுதிருக்குறளையும் வட மாநிலப் பள்ளிகளில் பாடமாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது  என்ற தேன் வந்து பாயும் செய்திகள் நம் காதுகளில் வந்து விழுகின்ற அதே நேரம் திருக்குறளின் பெருமையென பல்வேறு அறிஞர்கள் சொல்லும்,
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் என்கிற தகவல் பற்றிய மாற்றுப் பார்வை ஒன்றை முன்வைக்கத்தான் இந்தப் பதிவு.

Thursday 18 December 2014

உயிர் அகல்


வெள்ளம் பெருகிவர வீழ்மரமாய் உன்கரையில்

உள்ளம் நடுங்க உடல்தரித்தேன்! – கொள்ளும்

மனமுண்டேல் கொள்வாய்! தினமுண்டு போகும்

அனல்கொண்டு சாகும் அகம்!

Sunday 14 December 2014

நான்தான் இல்லை!




காரிருள் நெஞ்சில் வந்த

    பேரொளிப் பெண்ணே! அன்பு

சேரிடம் உன்னில் தானோ?

     யாரிதைச் சொல்வார், நானோ

பாரினைக் கிழிக்கும் அந்த

      ஏரினைப் போலே நெஞ்சம்

Thursday 11 December 2014

யாப்புச் சூக்குமம்-III [ விருத்தத்தின் எலும்புக்கூடு ]



  விருத்தத்தின் எலும்புக்கூடு என்னும் இந்தப்பதிவை படிக்கும்முன் நீங்கள் யாப்புச்சூக்குமம் பற்றிய முதலிரு பதிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
மரபுக்கவிதைகளைக் கட்டமைத்தல் குறித்த எனது புரிதல் பற்றியது என்பதால் பொதுவாசகர்களுக்கும் மரபின் நுணுக்கங்களை மரபின் வழியில் படித்தோருக்கும் இந்தப் பதிவு ஒரு சிறிதும் பயன்படாது என்பதால் இதைக் கடந்துவிடலாம்.

Sunday 7 December 2014

கவிதைகள் விற்பனைக்கு!


என்னில் நிறைந்த‘உன் எண்ணம் எழுதுவது
‘தன்னில் தனையுணரும்‘ தன்மையின் – மின்னல்
கிழிப்பதுபோல் என்நெஞ்சைக் கீறி அதனுள்ளில்
விழிப்பதுநீ செய்யும் வினை!