Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Wednesday, 10 May 2017

ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?



மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இறப்பு என்னும் பெரும் புதிரின் நடுவே  இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன என அறியாமல் மாறிமாறி உழன்று, முடிந்து போகின்ற வாழ்வு பற்றிய அச்சுறுத்தலில் இருந்து நாம் பெறமுடியும்.

Saturday, 6 May 2017

அந்தக்கால ஆண்களின் சிகை அலங்காரங்கள்.


இது என்னடா முடி பற்றிய ஆராய்ச்சியா என்று கேட்டால் ஆம் அது பற்றியும் ஆராயத் தமிழில் நிறைய இடமுண்டு என்பதுதான் பதில்.

Wednesday, 3 May 2017

ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3


பல மாதங்களுக்கு முன் எழுதத் தொடங்கிய ஒரு தொடர்பதிவை, நீண்ட இடைவெளிக்கும் வேறுவேறு பதிவுகளுக்கும் பின் தொடரும்போது சில சங்கடங்கள் இருக்கின்றன.

Monday, 1 May 2017

அட! இப்படியும் எழுதலாமா?


தேர்வினைக் கண்காணித்தல் என்பது சற்றுச் சுமையான அனுபவம்தான். மூன்று மணி நேரம் போவது மாணவர்க்குத் தெரியாது. ஆனால், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியருக்கு மூன்றுமணி நேரம் நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருப்பது சற்றுச் சிரமமான பணிதான்.

Sunday, 30 April 2017

ஆசீவகம் – 3 : நெருப்பினுள் இருக்கலாம்!


ஆசீவகர் தாழிகளுக்குள் அமர்ந்து தவம் செய்வது  பற்றி, ஆசீவகம் – 2: தாழியுள் கொதிக்கும் உணர்வுகள் என்னும் பதிவில் கண்டோம். அப்பதிவின் இறுதி, ஆசீவகர் மேற்கொண்ட நான்குவகைத் தவமுயற்சிகள் எத்தகு கொடுமையானவை என்பது குறித்து அடுத்த பதிவில் காணலாம் என்பதாக முடிந்திருந்தது.

Friday, 28 April 2017

இருநூறாவது பதிவு – யார் இந்த ஊமைக்கனவுகள்?


வலைத்தளம் ஓர் ஊமையைப் பேச வைத்திருக்கிறது. தனிமை அடைகாத்த கனத்த கூட்டினுள் வெற்று வாசிப்புடன் முடங்கிக் கிடந்த என்னாலும் எழுத முடிகிறது என்கிற நம்பிக்கையை, நானெழுதுவதையும் வாசிக்கிறார்கள் என்ற மகிழ்வை இந்த வலையுலகின் வழி நான் அடைந்திருக்கிறேன்.

Thursday, 13 April 2017

ஒரு கொடூர மரணம்!


கொன்ற ஒருவரின் சடலத்தை எவ்வளவு சிதைக்க முடியும்? அப்படிச் சிதைக்க வேண்டுமானால் அவர்மேல் எவ்வளவு வெறி இருக்கும்?

Tuesday, 11 April 2017

குடுமியான்மலை – சிரிக்கும் கல்வெட்டு.


குடுமியான்மலை இசைக்கல்வெட்டுகள் குறித்துக் கேள்விப்பட்டிப்பீர்கள். அங்கிருக்கும் ஈசனுக்குக் குடுமி வந்தது பற்றியும் புராணக்கதை உண்டு. ஆனால் இந்தப் பதிவு, அங்கிருந்து சிரிக்கும் கல்வெட்டுப் பற்றியது.

Sunday, 9 April 2017

கொலை தூண்டும் கற்கள்!



ஒருவரைக் கொல்லவோ அல்லது தன்னுயிரைப் போக்கிக்கொள்ளவோ சாதாரண நிலையில் மனிதன் விரும்புவதில்லை. ஆனால் சில சூழ்நிலைகளில் இச்செயல்களை மனிதன் மேற்கொள்ள நேர்கிறது.

Tuesday, 25 October 2016

ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்


ஆசீவகர் பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது? என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.

Sunday, 23 October 2016

தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ்.

நாஸ்டர்டாமஸ்- எதிர்காலத்தைக் கணித்து எழுதிய குறிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர். அவரது காலத்திற்குப் பின் நடந்தனவற்றை அவர் எழுதிய குறிப்புகளோடு பொருத்தி, உலகம் முழுவதும் நடக்க இருப்பதை அன்றே கணித்துச் சொன்னவர் என்ற புகழுக்குச்சொந்தக்காரர்.

Monday, 17 October 2016

வசைகவி – கொஞ்சம் காதைப் பொத்திக் கொள்ளுங்கள்!


புலவர்கள், கவிஞர்கள் வாழ்த்திப் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவன் எப்படியெல்லாம் நாசமாகப் போகவேண்டுமென அவருள் எவரேனும் பாடியதைக் கேட்டிருக்கிறீர்களா?

Sunday, 16 October 2016

இந்தப் பழைய தமிழ் உரையாடலில் உள்ள இரகசியம் – உங்களுக்குத் தெரிகிறதா?


பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இருவர் பேசிய உரையாடலின் எழுத்துப்பதிவு இது. இவர்கள் உரையாடலுள் ஓர் இரகசியம் இருக்கிறது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Thursday, 13 October 2016

இல்லாளிடம் இல்லாதது எது?:உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-18


நாடாளும் மன்னராய் இருந்தாலும் இல்லத்தின் ஆட்சி என்னவோ மனைவியிடம்தான். அவளிடம் இல்லாதது இருக்கிறதா? இருக்கிறது.

Tuesday, 11 October 2016

100 வயது வரை பல்விழாமல் தடுக்கும் பற்பொடி! -1898ஆம் ஆண்டு விளம்பரப்படம்.

1898ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூலின் இறுதிப்பக்கத்தில் வந்த விளம்பரம் இது.

Monday, 10 October 2016

இவளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? – கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசாம்!


உங்களில் சிலர் நிச்சயம் இவளைப் பார்த்திருக்கக் கூடும். கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு என்று வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tuesday, 12 January 2016

சொல்லாத சொல்லுக்கும் பொருள் உண்டு; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-17


தொடர்பதிவுகளை இடைவெளிவிட்டுத் தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நான் கடந்த சில பதிவுகளாகக் கலித்தொகைப் பாடலொன்றைத் இடைவெளியின்றிப் பதிந்து போனேன். இன்னும் அந்த ஒருபாடலே முடிவு பெறவில்லை. சரி…., நீண்ட பதிவிற்கு ஓர் இடைவெளிவிட்டுச் சிறிய பதிவொன்றை இடலாமே என்று இதனைத் தொடர்கிறேன்.

Saturday, 9 January 2016

உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1. 2




ஏறுதழுவுதல் தொடங்கிவிட்டது. வேகமாகச் சீறிப்பாயும் காளையை அடக்க வீரன் ஒருவன் களமிறங்கிவிட்டான். அது தொழுவில் இறங்கி நிதானமாக நின்று தன்முன் சிறுபதரென நிற்கும் அவனையே ஊன்றிப் பார்க்கிறது.

Saturday, 2 January 2016

பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் ; பகுதி 1




அவள் இடையர் குலத்தைச் சார்ந்தவள். அதென்ன இடையர் குலம்? தமிழ் நிலங்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப் பிரிக்கப்பட்ட போது, குறிஞ்சி நிலமாகிய காட்டிற்கும் மருதநிலமான வயல்வெளிக்கும் இடைப்பட்டிருந்த காடுகளால் ஆன நிலமான முல்லை இடைநிலம் என அழைக்கப்பட்டது. அந்த இடைநிலத்தில் வாழ்ந்ததனால் அவர் குலம் இடையர் குலம் எனப்பட்டது.

Wednesday, 30 December 2015

ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?



நம் தொன்மரபின் தொடர்ச்சி நம் தலைமுறையோடு முடிந்துவிடுமோ என்ற கவலையுடன் கட்சி வேறுபாடின்றித் தமிழகமெங்கும் உரத்தொலிக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்குரல்களைப் பார்வையாளனாக இருந்து பார்த்த என்னை, மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசம் ஐயாவின் இருபதிவுகளும் தற்போது அவர் எனக்கு இது குறித்துத் தனியே விடுத்திருந்த மின்னஞ்சலும் இப்பதிவினை எழுத என்னை இழுத்து வந்திருக்கின்றன.