Friday 30 May 2014

நான் போகிறேன்!




 
உதவாத ஒருகோடிப் பாடல்களை – இன்னும்
     உருவாக்க எருவாக நான் வாழவோ?
கதவற்ற வெறும்வீட்டில் நான்மட்டுமே – நிற்கக்
     காலற்றும் நடக்கின்றேன் உனைநோக்கியே!

Tuesday 27 May 2014

மெய்யாய் ஒரு பொய்.



சிற்றின்பக் கனவோடு சிந்தைதடு மாறிதினஞ்
           சிதைந்தின்பம் வேண்டு வேனோ?
     சிதறுமனம் அலையுலகைச் சதமென்று நினையாது
           சிந்திக்கத் தூண்டு வேனோ?

உரைச்சுத்தியில் உடைபடும் சொற்கள்.

   
           

 பண்டைய இலக்கண இலக்கியக் கருவூலத்தின் திறவுகோல்களாய் விளங்குவன உரைகள். மூலநூலுக்கும் நமக்கும் இடையே உள்ள பன்னூறாண்டுக்கால இடைவெளியை நாம் கடத்தற்குப் பாலமாய் விளங்குவன உரைகள் என்றாலும் கூட அவை எழுதப்பட்ட காலத்திற்கும் இன்றைக்குமான இடைவெளியை இட்டு நிரப்பிடப் பெருமளவிற்கு விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் கூட அவற்றின்கண் இடம் பெற்றுள்ள இலக்கணக் கூறுகள் பொருட்படுத்தப்படாமையும் பயன்பாட்டுக்கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படாமையும் பெருவழக்காக உள்ளது.

Monday 26 May 2014

நீ + நான் = நீ




கவிதைக்கு அழகூட்டும் கலைவாணி நீ! – என்
     கைவெட்டும் உளியானால் சிலையாக நீ!
செவிமொய்க்கும் ஒலிக்கூட்டில் இசையாக நீ! – மெய்
     செயல்யாவும் முடியச்செய் விசையாக நீ!

Saturday 24 May 2014

முள்மீது நிற்குதடி ஆவி!








என்னென்று சொல்வேனோ தோழி? – என்
    எண்ணங்கள் அங்கிங்கு அலைபாயு தேடி!
அன்றென்றன் நெஞசிலவன் வந்தான்! – காதல்