Sunday 28 June 2015

வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றவனின் வேதனை அனுபவம்!


சுற்றுலாவிற்கென அயல்நாடு செல்லுதலைப் போன்றதன்று பணம் சம்பாதிக்க அயல்நாடு செல்லுதல். அதுவும் திருமணம் ஆன புதிதில் மனைவியை விட்டுச் செல்லுதல் என்பது இன்னும் கடினம். மனைவியைப் பிரிந்து  பொருள் தேடி வேற்று நாட்டிற்குச் சென்றவனின் வேதனைகள் பல நாம் அறிந்ததும் அனுபவித்ததுமாக இன்று இருக்கலாம். ஆனால் நான் சொல்லப்போவது தோராயமாக இரண்டாயிரம் ஆண்டிற்கு முன் வாழந்தவனின் அனுபவம்.

Thursday 25 June 2015

விடுகதை தெரியும்! அதென்ன விடுகவி?-;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-(10)




சமணத் தத்துவத்தில் முக்கியமான ஒன்று அநேகாந்தவாதம் என்பது. உண்மை அதன் இன்மைகளாலும் ஆனது என்பது அதன் அடிப்படை. சற்று விளக்க வேண்டும் என்றால், ஒரு பொருளில் உள்ள குணங்கள் மட்டுமே அப்பொருளைத் தீர்மானிப்பதில்லை. அதில் இல்லாத குணங்களும் அப்பொருளினைத் தீர்மானிக்கும் காரணிகளாகின்றன என்பர் சமணர்.

முதலிலேயே குழப்புகிறேனா..?!

Tuesday 23 June 2015

காதலுக்குப் பலியான தோழி!



அவன் அவளுடன் கொண்ட  உறவை ஊர் அறிந்தது. அவளது உறவினர்களும் அறிந்துவிட்டனர். “ இனி இவன் நம் ஊர் எல்லையில் கால் வைக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் வீட்டுப்பெண்ணை நீங்கள் பத்திரமாய் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என ஊர் அவளது பெற்றோர்க்கு அறிவுரை வழங்கிற்று.

Friday 19 June 2015

பிறவிக் கோளாறுகளின் வகைகள்! – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (9)


பழந்தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடன் பிறந்துவிடவில்லை. சில குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்தன. பிறப்பில் ஏற்படும் கோளாறுகளைத் தமிழர்கள் எண்வகையாகப் பிரித்திருந்தனர்.

Tuesday 16 June 2015

பாம்புகள் பூக்கின்ற குளம்.




இரவு. நீர்நிறைந்த குளம். நெளிந்து அலையும் நிலவொளி. ஆர்ப்பரிக்கும் தவளைகளின் குரல். குளம்  நடுவே சிறுதிட்டு. அதில் நிலையாமையை எப்போதும்  உணர்த்திக்கொண்டு சிறுமண் பற்றி நிற்கும் கொஞ்சம் தாவரங்கள். அடர்ந்திருக்கும் அதன் இடைவெளி பின்னிச் செய்த சிறு கூடு.

Friday 12 June 2015

அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் அந்தக்கால டெக்னிக்.


பண்டைய அரசர்கள், அவர்களின் அரசவை, கோட்டை கொத்தளங்கள் பற்றியெல்லாம் பழைமையின் கற்பனை நம்மிடத்தில்  நிறைய உண்டு. அவர்களது அரசவையின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்க என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதைப் பற்றியதே இந்தப் பதிவு.

Wednesday 10 June 2015

மானங் கெட்டவன் மன்னன் ஆகலாம்! - வள்ளுவர் சொல்கிறார்!


மன்னன் மட்டும் அல்ல,  முதலமைச்சராக ஏன் பிரதமராகக் கூட ஆகலாம். மானங் கெட்டால் மட்டும் போதாது இன்னும் சிலவற்றைக் கூறி , அவையும் கெட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறதா?

Monday 8 June 2015

சமணம் (2) – கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் உண்டு!


உயிரின் பெருக்கமும் சுருக்கமும் பற்றிச் சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்கான  சமணரின் விளக்கத்துடன் இப்பதிவைத் தொடர்வோம்.

Sunday 7 June 2015

நோயற்ற வாழ்க்கைக்கு உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படும் தமிழ் மருந்து.

இன்றைய சூழலில் சர்க்கரை, இதயநோய், போன்ற பல வியாதிகள் வந்தவர்களுக்கும், வராமல் தடுக்க நினைப்பவர்களுக்கும் மருத்துவர்கள் சொல்லும் தாரக மந்திரம், உணவுக் கட்டுப்பாடு மற்றும்  உடற்பயிற்சி .

Wednesday 3 June 2015

சமணம் – உயிரின் எடை.



ஒருகாலத்தில் கல்வியையும் மருத்துவத்தையும் இருகைகளில் ஏந்தி, உயிர்களை அன்பு செய்யுங்கள் என்ற கோட்பாட்டைத் தலையில் சுமந்து நாடெங்கும் அலைந்தவர்கள் சமணர்கள்.
அகிம்சை என்றால் உயிர்களைக் கொல்லாமை என்று நாம் கூறுகிறோம்.
சமணர்களின் கருத்துப்படி உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் அகிம்சை அல்ல. அவ்வுயிருக்கு நன்மை செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.

Tuesday 2 June 2015

எங்கள் நீதி இப்படித்தான் சொல்கிறது கனம் நீதிபதி அவர்களே!



சட்டங்கள், வளைக்கும் வலிமை உள்ளவன் வளைக்கவும், நீதிமன்றங்கள் பணபலத்தின், அதிகாரத்தின், குவிமையத்தில் மண்டியிடவும் செய்கின்ற இந்தப் புன்மைச் சூழலில், எது அறம், எது வழக்கு, எது தண்டனை எனப் பழந்தமிழில் ஏதேனும் இருக்கிறதா என அறியும் ஆர்வம் இயல்பானதுதான்.

அப்படி ஒரு உரை நூலில் இருந்து எடுக்கப்பட்டதன் சாரம் தான் இப்பதிவு.