Tuesday 30 September 2014

தமிழ்க் கைம்மா நல்லா இருக்குமா?


பண் இசைத்துப் பாடுபவன் பாணன். அவன் மனைவி பாணி. பாட்டுப்பாடி கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதுதான் அவர்கள் தொழில்.
அவர்களை வாழவைத்த தர்மப்பிரபுக்களும் அன்று இருந்திருக்கிறார்கள்.
தன் வறுமையைப் போக்க ராமன் என்கிற வள்ளலைப் பார்த்துப் பரிசில் பெற்று  வீட்டுக்குள் வருகிறான் அந்தப் பாணன்.
பாணி தன் கணவன் என்ன வாங்கி வந்திருப்பான் என்ற ஆவலில் அவனிடம் கேட்கிறாள்.

Friday 26 September 2014

காலக்கணிதம்.



கணிதம் பற்றிய பதிவுகளைச் சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் தளத்திலும் நண்பர் அ பாண்டியன் அவர்கள் தளத்திலும் காண நேர்ந்த போது கணக்கதிகாரம் என்றொரு நூலும், தமிழில் காளமேகத்தின் பின்னம் பற்றிய பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்தன. தமிழில் உள்ள நான்கு கவிகளில் ஆசுகவி என்போர் ஏதேனும் எழுத்தையோ சொல்லையோ பொருளையோ கொடுத்தால் உடனடியாகப் பாடும் வல்லமை பெற்றவர்கள். அதற்கான சோதனையும் அவைக்களங்களில் நடப்பதுண்டு.
அப்படிக் காளமேகத்திடம்,முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்னும் எட்டு அளவைச் சொற்களும் அமையுமாறு கச்சியில் உறையும் ஏகாம்பரநாதர் மேல் ஒரு வெண்பா பாடுமாறு கேட்கப்பட்டதாகக் கூறுவர். காளமேகம் பாடிய பாடலைக்

Tuesday 23 September 2014

சொல் விளையாட்டு



புலவர்களும் வறுமையும் உடன்பிறந்தவைதான். அந்தக்காலப் புலவர்களுக்கு எழுதுவதுதான் தொழில். அவர்களது தேவைகளை அரசு கவனித்துக் கொள்ளும். அல்லது அவர்களின் தரமறிந்து கொடுக்கும் மனம் கொண்டு ஆதரிப்போர் கவனித்துக் கொள்வர். புலவர்களும் புலமைச் செருக்கோடுதான் வலம் வந்துள்ளனர்.
ஔவை பாடியதில் எனக்குப் பிடித்த வரிகள் இவை.
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
       விரைந்தழைப்பார் யாவருமிங் கில்லை

Monday 22 September 2014

துன்பக் கேணி.


 இராமச்சந்திர கவிராயர் என்றொரு கவிஞர் மிகச்சுவையான பாடல்களை எழுதியிருக்கிறார். நகைச்சுவையும் அவலமும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல்களாய் அவை இருக்கின்றன.   ஒருவனுக்குத் துன்பம் எப்படி அடுக்கடுக்காய் வரமுடியும் என்பதற்கு இவர் எழுதிய

Monday 15 September 2014

கவிஞர்.கி.பாரதிதாசன் கண்ணன்விடு தூது


                        






                                    


                               


      
 















                                  காப்பு 

பண்ணில் தமிழ்பாடும் பாரதி தாசர்மேல்

கண்ணன் விடுதூது கட்டுரைத்துக் - கொண்டுசெல

மாலைவரு மாலைதிரு மாலைபெற மாலடியார்

காலைதொழுங் காலையவர் காப்பு.


( ஈற்றிரண்டடிகள் மடக்கு. . இதன் பொருள் : மாலைவரு மாலை -மாலை வேளை வரும் திருமாலை, திருமாலை பெற - மேன்மைபொருந்திய மாலையைப் பெற்றுவரத் தூதாய் அனுப்ப, மாலடியார்  - மாலடியார்களாகிய ஆழ்வார்களின், காலை தொழுங்காலை -  திருவடிகளைப் பணியுங்காலை, அவர்காப்பு -  அவர்களே இந்நூலினைக் காத்தமைவர்)

Tuesday 9 September 2014

பூக்கள் நோகும்.


தெளிவிற்கும் மனதில்‘உன் தெளியாத நினைவிற்கும்
     தேக்கங்கள் என்றும் இல்லை! – என்றன்
ஒளிவிற்கும் நான்செய்த ஓராயிரம் கவிக்கும்
     ஒளிசேர்க்க நீயும் இல்லை!

Wednesday 3 September 2014

மலைத்தேன்.

 
வண்டோடு மலர்பேச வானோடு மரம்பேச
       வளர்ந்தோங்கு கொல்லி மலைமேல்
     வருகின்ற இருள்கொல்லும் வாள்தன்னைக் கரமேந்தி
        விடியலினை உலகு நல்கக்
கொண்டாடும் ஒளியோடு கொல்லிமலை கீழ்திசையில்
        கதிரோனும் உதய மானான்!
      குயில்கூவ மயிலாடக் கண்திறந் திவ்வுலகத்
        துயில்நீங்கத் தேரில் வந்தான்!