Sunday, 31 August 2014
Thursday, 28 August 2014
Monday, 25 August 2014
Thursday, 21 August 2014
Monday, 18 August 2014
Saturday, 16 August 2014
Monday, 11 August 2014
சொல் வேட்டை!
பழைய இலக்கியங்களைப் பனையோலையில் இருந்து
பிரதி எடுக்கும் போது சில சொற்கள் அழிந்திருக்கும். சில எழுத்துக்கள் தெளிவில்லாமல்
இருக்கும்.
சில நேரங்களில் இடையே இருக்க வேண்டிய ஓலைச்சுவடிகள்
சில இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட இலக்கியங்களுக்கு வேறு பிரதி இருந்தால் ஒப்பு
நோக்கித் திருத்தம் செய்யலாம். அந்தப் பாடல்கள் எங்காவது யாராவது மேற்கோளாக எடுத்துக்
காட்டி இருந்தால் அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவ்வளவுதான்!
Friday, 8 August 2014
Wednesday, 6 August 2014
படைப்பின் உயிர். (2 )- முறைவைப்பு.
மெய்ப்பாட்டுச் சுவைகளின் வரிசை முறைக்குக் காரணம் உள்ளது என்பது பற்றிச் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை முதலில் பார்த்து விடுவோம்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் ( எட்டே) மெய்ப்பாடென்ப“
( தொல்-மெய்.3.)
எனத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் இந்த வரிசை முறையில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
Monday, 4 August 2014
கேள்விக்கு என்ன பதில்?
Sunday, 3 August 2014
இமைக்கும் நொடி.
Friday, 1 August 2014
படைப்பின் உயிர்.
படைப்பாளியான நீங்கள் உங்கள் படைப்பின் வழியே படிப்பவருக்குள் நுழைந்து அவர்கள் மனத்தை
உருக்க வேண்டுமா? மகிழ்வூட்ட வேண்டுமா? சிரிக்கச் செய்ய வேண்டுமா? கண்ணீர் விடச்
செய்ய வேண்டுமா? உங்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அப்படிப் படைப்பொன்றினை ஆக்கத்
தமிழ் இலக்கணம் வழிசொல்லித் தருகிறது. படைப்பாளி எப்படித் தன்
படைப்பை வாசகனுடைய மனதை இடமாகக் கொண்டு இதை நிகழ்த்த இயலும்? தன் அனுபவத்தைப் படைப்பின் வாயிலாகப் படிப்போனின் மனத்தில் இறக்கி வைப்பது எப்படி? திரைப்படங்களில், நாடகங்களில் இது
சாத்தியப்படும். சில
உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்புகள் பாதிக்கப்பட்டவரால் பகிரப்படும் போது
நம் மனதில் கலக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால்
எழுத்து வழியாக
இதை எப்படிக் கொண்டு
செல்வது? தானுணர்ந்த அனுபவத்தை எப்படித் தன் எழுத்தில் இறக்கி வைப்பது? படிப்பவரின் மனம் படிந்து அவர்களின் உணர்வுகளை எப்படித் தொட்டெழுப்புவது? அதற்கென்றே வடிவமைக்கப் பட்டதுதான் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல்.
Saturday, 19 July 2014
Wednesday, 16 July 2014
நீயல்லால் வேறொரு காட்சியில்லை!
பாதம்
அழுந்திய நின்தடங்கள் – எங்கும்
பசுமையாய் என்றும் நினைவிருக்க
ஏதும்
அறியாமல் நீயிருப்பாய்! – உனை
என்றும் அறிந்திட நானிருப்பேன்!
Tuesday, 15 July 2014
Sunday, 13 July 2014
Friday, 11 July 2014
Tuesday, 8 July 2014
அறிவினாவும் ஐய விடைகளும்!
முத்துநிலவன் அய்யாவின் வலைப்பக்கத்தில் இருபத்தைந்து கேள்விகள் இன்று காலை கணினியைத் திறந்ததும் கண்பட்டன. சுவாரசியமானவை.
தெரிந்த விடைகளுக்கு விடையளித்துக் கொண்டே படித்தால் கடைசியில் என் பெயரும் ......!
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டும் என்பதில்லை!
கூறும் விடையாவும் சரியாக இருக்க வேண்டுவதும் இல்லை. தவறினைத் திருத்தவும் தெரியாதனவற்றைத் தெளிவுபடுத்தவும் யாவரும் வருக!
திருத்திப் பின்னூட்டமிட முத்துநிலவன் அய்யாவையே அழைக்கிறேன்.
தெரிந்த விடைகளுக்கு விடையளித்துக் கொண்டே படித்தால் கடைசியில் என் பெயரும் ......!
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டும் என்பதில்லை!
கூறும் விடையாவும் சரியாக இருக்க வேண்டுவதும் இல்லை. தவறினைத் திருத்தவும் தெரியாதனவற்றைத் தெளிவுபடுத்தவும் யாவரும் வருக!
திருத்திப் பின்னூட்டமிட முத்துநிலவன் அய்யாவையே அழைக்கிறேன்.
Monday, 7 July 2014
Friday, 4 July 2014
Subscribe to:
Posts (Atom)

