Saturday, 19 July 2014

உலகில் நீ மாத்திரம்!



அறிவை முடமாக்கி அன்புப் பெருந்தீயால்
     அணைத்த என்தேவியே! – உயிர்
முறிதல் காணாயோ? மூர்க்கம் தீராயோ?
     முடங்கு தென்னாவியே!

Wednesday, 16 July 2014

நீயல்லால் வேறொரு காட்சியில்லை!




 








பாதம் அழுந்திய நின்தடங்கள் – எங்கும்
     பசுமையாய் என்றும் நினைவிருக்க
ஏதும் அறியாமல் நீயிருப்பாய்! – உனை
     என்றும் அறிந்திட நானிருப்பேன்!

Tuesday, 15 July 2014

மதி வென்ற கதிர்!





முடிந்த கதைகளைத் தொடங்கெனவே – தினம்
     மூர்க்கமாய்த் தாக்குமென் மனவிலங்கைக்
கடிந்(து) அடக்கவோர் வழியிலையே! – ஐயோ
     கடித்துக் குதறினும் பொறுப்பதன்றி!
விடிந்தன இரவுகள்! வெளிச்ச மில்லை!! – மதி
     வென்றிடத் தண்கதிர் விரும்பவில்லை!

Sunday, 13 July 2014

உயிர் திரும்பும்!





கரைகள் தகர்க்கும் ஆறெனநீ! – அவ்
     வாற்றைத் தடுக்கும் அணையென நான்!
நுரைகள் திரட்டி நீவருவாய்! – உனை
     நிரப்பி நிரம்பி நான்வழிவேன்!

Friday, 11 July 2014

“உள்ளங்கவர் களவன்“




உங்களில் பலரும் இதை உள்ளங்கவர் கள்வன் என்றே வாசித்திருப்பீர்கள். என் மேல் அக்கறை உள்ள ஒரு சிலர், “தலைப்பையே எழுத்துப் பிழையோடு எழுதிவிட்டான் உடனே  திருத்துமாறு சொல்ல வேண்டும்“ என்று மனதிற்குள்ளாவது நினைத்திருப்பீர்கள். மன்னிக்க வேண்டும். நான் சொல்ல வந்தது உள்ளங் கவர் களவனைப் பற்றித்தான்!

Tuesday, 8 July 2014

அறிவினாவும் ஐய விடைகளும்!

முத்துநிலவன் அய்யாவின் வலைப்பக்கத்தில் இருபத்தைந்து கேள்விகள் இன்று காலை கணினியைத் திறந்ததும் கண்பட்டன. சுவாரசியமானவை.
தெரிந்த விடைகளுக்கு விடையளித்துக் கொண்டே படித்தால் கடைசியில் என் பெயரும் ......!
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டும் என்பதில்லை!
கூறும் விடையாவும் சரியாக இருக்க வேண்டுவதும் இல்லை. தவறினைத் திருத்தவும் தெரியாதனவற்றைத் தெளிவுபடுத்தவும் யாவரும் வருக!
திருத்திப் பின்னூட்டமிட முத்துநிலவன் அய்யாவையே அழைக்கிறேன்.

Monday, 7 July 2014

வீழ்ந்து விட்டேன்!






மூடிக் கிடந்த கதவினுளே – பெரும்
     மோனத் தமிழ்ந்(து) இருந்த எனைத்
தேடிப் பிடித்துன் நினைவலையால் – நிதந்
     தேடிக் கனவிலுந் தெருட்டுவையோ?

Friday, 4 July 2014

பதங்கமாதல்




கண்ணிகளை
உறவுகள்மேல் விரித்து
என்னைப் பிடித்த பின்

Monday, 30 June 2014

புதையலின் வரைபடம்.



சிறு வயதில் வார்த்தைகளைக் கொண்டு விளையாடி இருப்போம். ஒரு வார்த்தையில் முடியும் சொல்லைக் கொண்டு இன்னொரு வார்த்தையைச் சொல்லுவது. பின் ஒரு பாடலில் முடியும் எழுத்தைக் கொண்டு இன்னொரு பாடலை ஆரம்பிப்பது. திரைப்படங்களின் பெயர்களைக் கொண்டு தொடர்வது. ஒரு சொல்லைக் கொண்டு பல 

Friday, 27 June 2014

இருட்டில் மறைந்த விளக்கு.





( இலக்கணம் கசக்கும் பார்வையாளர்கள் விரும்பினால் நேராக இப்பதிவின்   கடைசியில் நிறம்மாற்றிய எழுத்துரு உள்ள பகுதிக்கு   பொது வாசிப்பிற்காகச்    செல்லலாம். )
புதுக்கவிதை எனும் புயலில் பழம்மரபு அடித்துச் செல்லப்பட்ட பின் பழம்பாடல்வடிவங்களை எழுதுவோர் இல்லை என்றே எண்ணியிருந்தேன்.

Monday, 23 June 2014

கவி ஈர்ப்பு மையம்.






குழி விழுந்தவொரு யானையின்
இறுதிநாள் குறித்து,
அதீதப் பிளிறலோடு
வாசிக்கப்பட்ட மருத்துவ சாசனத்தின்

Friday, 20 June 2014

வள்ளுவக் கூத்து.





ஊர் முழுக்க அறிவித்தாயிற்று. அன்று இரவு புதிய கூத்து நடைபெற இருக்கிறது.  மக்கள் அனைவரும் கூத்துப் பற்றியும், கூத்தர் பற்றியும் பேசத் தொடங்கி விட்டனர்.

Sunday, 15 June 2014

நமனை அஞ்சோம்!






குத்திக் கிழித்தபகை! – வேர்

      கொத்திப் பறித்துக் குற்றுயி ராக்கி

எத்திச் சிரித்தபகை! – எத்

      திக்கிலும் எம்மைச் சிதற்றி யடிக்கப்

Saturday, 14 June 2014

ஆய்தம்.




     

( ஒரே ஒரு எழுத்துதான். ஆராய்ச்சி என்ற பெயரில், பத்துப்பக்கம்  நீட்டி முழக்கியிருக்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பணி இது. வறண்ட வரையறைகளுக்கு நடுவே சுவைபடச் சொல்லுதற்கு ஒன்றுமேயில்லை. தப்பித்துக் கொள்வோர் இப்பொழுதே தப்பித்துக் கொள்க!  

Thursday, 12 June 2014

நாள் எதிர்பார்த்திரு!



கலைபடைத்தவன் களம்முடித்ததை

மலைபொறித்தவன் மரபினன்,

Tuesday, 10 June 2014

தமிழ் வருவாள்!


கட்டெறும் பேவந்து காலைக் கடித்தெமைக்

     கொன்றுவிட் டோமெனக் கொக்கரிப்போ?

Monday, 9 June 2014

முப்பாற்புள்ளி


     
சோதனை முயற்சியாக வழக்குத்தமிழில் நான் பதிவிட்ட “ உடம்பொடு புணர்த்தல் ” எனும் கட்டுரையின் முடிவில் நான் மதிக்கும் இரு தமிழறிஞர்களின் கருத்தினைக் கேட்டிருந்தேன். இருவரின் கருத்துக்களும் வெவ்வேறாயிருந்தாலும் கூட, கவிஞர். கி. பாரதிதாசன் அய்யா அவர்களின் பின்னூட்டம், எனது நடை, பொருட்குழப்பத்தை ஏற்படுத்துவதைச் சுட்டுவதாய் அமைந்தது.

Saturday, 7 June 2014

உன் பேர் சொல்லும் நேரம் !











எங்கேனும் உன்பேரைக் கண்டால்
எவரேனும் உன்பேரைச் சொன்னால்
எழுத்திற்கும் வலிக்காமல் ஏனோ
என்னுள்உன் பேர்சொல்லிப் பார்ப்பேன்!

கோடையில் சாரலின் வாசம்;
குளிர்ந்திடுந் தென்றலும் வீசும்,
என்னிலுன் பேர்சொல்லும் தருணம்,
என்னுடல் உயிர்தன்னை உணரும்!

ஒருகோடி வெண்ணிலா பெய்த
ஒளிப்பாலில் அமுதூற்றிச் செய்த,
உன்பெயர் நான்காணும் நேரம்,
உனைக்காணா கண்களுள் ஈரம்!

சூரியப் பொம்மைக்கும் உன்பேர்,
சூல்கொண்ட நிலவுக்கும் உன்பேர்,
சூட்டும்என்  மனதிற்குள் எரியும்,
சூனியம் உனக்கென்று புரியும்?

காற்றோர்நாள் சொல்லிற்(று) உன்பேர் !
கடலெங்கும் முழங்கிற்(று) உன்பேர்!
கடல்கூடி மேகப்பெண் பெற்ற
மழைப்பிள்ளை சொல்லிற்(று) உன்பேர்!

கண்ணாடி வானத்தில் நீயென்
கண்ணுக்குத் தெரிகின்றாய் இங்கே!
காலத்தைக் கழுவேற்றிக் காதல்
கைகொட்டிச் சிரித்தாடும் பார்பார்!!


Friday, 6 June 2014

உடம்பொடு புணர்த்தல்




எல்லாருக்கும் வணக்கங்க!
இலக்கணமின்னாலே எட்டுகாத தூரம் தெறிச்சு ஓடுற உங்கள மாதிரி ஒருத்தன்தாங்க நானும்...! இலக்கணம் படிச்சா நாம மொழியைப் பேசுறோம்? எழுதுறோம்? அதெல்லாம் நமக்கெதுக்குன்னு  பள்ளிக்கூடத்தில படிக்கும் போது சிரமப்பட்டு உயிர்மெய், ஆய்தம், குற்றியலுகரம், லிகரமின்னு 2 மதிப்பெண் வாங்கிறதுக்காக இதையெல்லாம் மனப்பாடம் பண்ணதோட சரி!

Thursday, 5 June 2014

இது புதிது !




இது புதிது !
என்னோடு நீபேசும் இராகம் புதிது!
எரிகின்ற தீக்குள்ளே சிரித்தல் புதிது!
கண்மூட உன்னுள்நான் விழித்தல் புதிது!
காயத்தின் வலிதேடிக் களித்தல் புதிது!
இல்லாத இதயத்தோ டிருத்தல் புதிது!
இரையாக எனைவைத்து இழத்தல் புதிது!