Monday, 6 October 2014
Tuesday, 30 September 2014
தமிழ்க் கைம்மா நல்லா இருக்குமா?
பண் இசைத்துப் பாடுபவன் பாணன். அவன் மனைவி
பாணி. பாட்டுப்பாடி கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதுதான் அவர்கள் தொழில்.
அவர்களை வாழவைத்த தர்மப்பிரபுக்களும் அன்று
இருந்திருக்கிறார்கள்.
தன் வறுமையைப் போக்க ராமன் என்கிற வள்ளலைப்
பார்த்துப் பரிசில் பெற்று வீட்டுக்குள் வருகிறான் அந்தப் பாணன்.
பாணி தன் கணவன் என்ன வாங்கி வந்திருப்பான்
என்ற ஆவலில் அவனிடம் கேட்கிறாள்.
Friday, 26 September 2014
காலக்கணிதம்.
கணிதம் பற்றிய பதிவுகளைச் சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் தளத்திலும் நண்பர் அ பாண்டியன் அவர்கள் தளத்திலும் காண நேர்ந்த
போது கணக்கதிகாரம் என்றொரு நூலும், தமிழில் காளமேகத்தின் பின்னம் பற்றிய பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்தன. தமிழில்
உள்ள நான்கு கவிகளில் ஆசுகவி என்போர் ஏதேனும் எழுத்தையோ சொல்லையோ பொருளையோ கொடுத்தால்
உடனடியாகப் பாடும் வல்லமை பெற்றவர்கள். அதற்கான சோதனையும் அவைக்களங்களில் நடப்பதுண்டு.
அப்படிக் காளமேகத்திடம்,முக்கால், அரை, கால்,
அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்னும் எட்டு அளவைச் சொற்களும் அமையுமாறு கச்சியில்
உறையும் ஏகாம்பரநாதர் மேல் ஒரு வெண்பா பாடுமாறு கேட்கப்பட்டதாகக் கூறுவர். காளமேகம்
பாடிய பாடலைக்
Tuesday, 23 September 2014
சொல் விளையாட்டு
புலவர்களும் வறுமையும் உடன்பிறந்தவைதான். அந்தக்காலப்
புலவர்களுக்கு எழுதுவதுதான் தொழில். அவர்களது தேவைகளை அரசு கவனித்துக் கொள்ளும். அல்லது
அவர்களின் தரமறிந்து கொடுக்கும் மனம் கொண்டு ஆதரிப்போர் கவனித்துக் கொள்வர்.
புலவர்களும் புலமைச் செருக்கோடுதான் வலம் வந்துள்ளனர்.
ஔவை பாடியதில் எனக்குப் பிடித்த வரிகள் இவை.
“ மரம்
பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
விரைந்தழைப்பார் யாவருமிங் கில்லை “
Monday, 22 September 2014
Monday, 15 September 2014
கவிஞர்.கி.பாரதிதாசன் கண்ணன்விடு தூது
காப்பு
பண்ணில் தமிழ்பாடும் பாரதி தாசர்மேல்
கண்ணன் விடுதூது கட்டுரைத்துக் - கொண்டுசெல
மாலைவரு மாலைதிரு மாலைபெற மாலடியார்
காலைதொழுங் காலையவர் காப்பு.
( ஈற்றிரண்டடிகள் மடக்கு. . இதன் பொருள் : மாலைவரு மாலை -மாலை வேளை வரும் திருமாலை, திருமாலை பெற - மேன்மைபொருந்திய மாலையைப் பெற்றுவரத் தூதாய் அனுப்ப, மாலடியார் - மாலடியார்களாகிய ஆழ்வார்களின், காலை தொழுங்காலை - திருவடிகளைப் பணியுங்காலை, அவர்காப்பு - அவர்களே இந்நூலினைக் காத்தமைவர்)
Tuesday, 9 September 2014
Wednesday, 3 September 2014
Sunday, 31 August 2014
Thursday, 28 August 2014
Monday, 25 August 2014
Thursday, 21 August 2014
Monday, 18 August 2014
Saturday, 16 August 2014
Monday, 11 August 2014
சொல் வேட்டை!
பழைய இலக்கியங்களைப் பனையோலையில் இருந்து
பிரதி எடுக்கும் போது சில சொற்கள் அழிந்திருக்கும். சில எழுத்துக்கள் தெளிவில்லாமல்
இருக்கும்.
சில நேரங்களில் இடையே இருக்க வேண்டிய ஓலைச்சுவடிகள்
சில இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட இலக்கியங்களுக்கு வேறு பிரதி இருந்தால் ஒப்பு
நோக்கித் திருத்தம் செய்யலாம். அந்தப் பாடல்கள் எங்காவது யாராவது மேற்கோளாக எடுத்துக்
காட்டி இருந்தால் அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவ்வளவுதான்!
Friday, 8 August 2014
Wednesday, 6 August 2014
படைப்பின் உயிர். (2 )- முறைவைப்பு.
மெய்ப்பாட்டுச் சுவைகளின் வரிசை முறைக்குக் காரணம் உள்ளது என்பது பற்றிச் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை முதலில் பார்த்து விடுவோம்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் ( எட்டே) மெய்ப்பாடென்ப“
( தொல்-மெய்.3.)
எனத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் இந்த வரிசை முறையில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
Monday, 4 August 2014
கேள்விக்கு என்ன பதில்?
Sunday, 3 August 2014
இமைக்கும் நொடி.
Friday, 1 August 2014
படைப்பின் உயிர்.
படைப்பாளியான நீங்கள் உங்கள் படைப்பின் வழியே படிப்பவருக்குள் நுழைந்து அவர்கள் மனத்தை
உருக்க வேண்டுமா? மகிழ்வூட்ட வேண்டுமா? சிரிக்கச் செய்ய வேண்டுமா? கண்ணீர் விடச்
செய்ய வேண்டுமா? உங்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அப்படிப் படைப்பொன்றினை ஆக்கத்
தமிழ் இலக்கணம் வழிசொல்லித் தருகிறது. படைப்பாளி எப்படித் தன்
படைப்பை வாசகனுடைய மனதை இடமாகக் கொண்டு இதை நிகழ்த்த இயலும்? தன் அனுபவத்தைப் படைப்பின் வாயிலாகப் படிப்போனின் மனத்தில் இறக்கி வைப்பது எப்படி? திரைப்படங்களில், நாடகங்களில் இது
சாத்தியப்படும். சில
உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்புகள் பாதிக்கப்பட்டவரால் பகிரப்படும் போது
நம் மனதில் கலக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால்
எழுத்து வழியாக
இதை எப்படிக் கொண்டு
செல்வது? தானுணர்ந்த அனுபவத்தை எப்படித் தன் எழுத்தில் இறக்கி வைப்பது? படிப்பவரின் மனம் படிந்து அவர்களின் உணர்வுகளை எப்படித் தொட்டெழுப்புவது? அதற்கென்றே வடிவமைக்கப் பட்டதுதான் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல்.
Subscribe to:
Posts (Atom)


