Friday, 31 October 2014

தீ உறங்கும் காடு


எங்கேனும் ஓருள்ளம் என்‘எண்ணம் உணராதோ
           என்றென்றன் நெஞ்சம் ஏங்கும்!
       எடையிட்டுப் பார்த்துப்பின் உடைபட்டுப் போகின்ற
           ஏக்கத்தில் அஞ்சித் தேங்கும்!

Sunday, 26 October 2014

சிதைக்கப்பட்ட சித்திரங்கள்



எட்டாம் வகுப்பில் எங்கள் தமிழாசிரியர் கண்அறுவை சிகிச்சைக்காய் ஒருமாத காலம் மருத்துவ  விடுப்பில் இருந்தார். அவருக்குப் பதிலி ஆசிரியராக ஒருவர் வந்திருந்தார்.  தனது சுயவிவரங்களை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டதாக நினைவில்லை. அதனால் அவர் பெயர் தெரியவில்லை. முப்பது வயது இருக்கலாம். தலையை அடிக்கடிக் கோதிக்கொள்ளும் அளவிற்கு நிறைய முடியும் , பேன்ட், இன் செய்த சர்ட், ஷூ, கேட்டவரை வசீகரிக்கும் குரல் எனப் பார்த்த உடனே என்னைக் கவர்ந்துவிட்டார். உண்மையில் அதுவரை தமிழாசிரியரை மட்டுமல்ல எந்த ஆசிரியரையும் அவ்வளவு நேர்த்தியாக உடையுடுத்தி நான் பார்த்ததில்லை. புறத்தோற்றத்தில் யார் பார்த்தாலும் உடனே மதிப்பு வந்துவிடும் அவர்மேல்.

Monday, 20 October 2014

கிழவிப்பாட்டு



என் பள்ளிப்பருவத்தில் என் அத்தையின் வீட்டிற்குப் போகும் போதெல்லாம் வீட்டின் எதிரே சாலையின் மறுபுறத்தில் நெடுநாட்களாய் அடைத்துக் கிடந்த அந்தத் தையலகத்தின் வாசலில் உரிமை கோருவார் யாருமற்றுக் கிடக்கின்ற இரண்டு மூட்டைகளைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் நான் அங்குச் செல்லும் நேரம் மாலை மயங்கிய இரவு நேரம் என்பதால் அதைப் பெரிதாகக் கவனித்ததில்லை. அன்று  புறப்படும் போதே மழை பெய்யத் தொடங்கியிருந்து. சைக்கிளில் தொப்பலாய் நனைந்தபடி அத்தையின் வீடடைந்து முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தேன். அழைப்பு மணியை அடித்துக் காத்திருந்த கணத்தில் அந்தத் தையற்கடையின் வாசலில் இருந்த இரு மூட்டையுள் ஒரு மூட்டை சற்று அசைவதுபோலத்தோன்றியது. வானம் பொதிந்த இருளைக் கிழித்தெரிந்த மின்னல் ஒன்றின் ஊடாகப் பார்த்த போதுதான் அது ஒரு மனித உருவம் என்பது  புலனாயிற்று. கண்கள் இருட்டைப் பழகிக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய போது அந்த உருவத்தின் அசைவிற்கேற்றவாறு அங்குமிங்குமாய் ஒரே போல் நகர்கின்ற கொசுப் பந்தொன்று அவ்வுருவத்தைச் சுற்றிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. விரட்ட வழியற்று உடல் மறைக்க ஒற்றைச் சேலையைச் சுற்றியடி மழையிலும் கொசுக்கடியிலும் யாராலும் வேண்டப்பெறாத மனித உயிரொன்று கிழிந்த சாக்கில் உடல்கிடத்தி இயற்கையின் ஆவேசத்தில் நடுங்கி நடத்தியஉயிர்ப்போராட்டமாய் அக்காட்சி என் கண்முன் விரிந்தது.

Tuesday, 14 October 2014

இரட்டைவால் குரங்கும் இருபதுகால் ஆடும்.



மொழியில்  உள்ள ஒரு சில புதிர்களை, விந்தையான விஷயங்களைக் காணும் போது முதலில் வியப்பு தோன்றும். என்ன சொல்லியிருக்கிறார்கள் அல்லது என்னதான் சொல்ல வருகிறார்கள் நம்மைக் குழப்ப வேண்டுமென்றே கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டிருப்பார்களோ இந்தப் புலவர்கள் என்றெல்லாம் நினைத்தாலும் அந்தப் புதிரை அவிழ்க்கும் சூக்குமம் பிடிபட்டுவிட்டால் தோன்றும்

Saturday, 11 October 2014

சம்மனசு டீச்சரும் மயில் டாலர் செயினும்.



எனது இரண்டாம் வகுப்பில் சம்மனசு டீச்சரிடம் படித்தேன்.குட்டையானவர். கொஞ்சம் குண்டுதான். மாந்தளிரின் நிறம். பெரிய சோழியின் தட்டைப் பகுதி போலக் கண்ணாடி , அதன் நடுவே உள்ள கீறல் போன்ற சிறு கண்கள். அருகில் வரும் போதெல்லாம்  வீசும் குட்டிக்குரா பவுடரின் வாசனை. அதற்குப் பின் எங்கே அந்த வாசனை வந்தாலும் மனம் ஒரு முறை சம்மனசு டீச்சரைத் தேடிப்பார்க்கும் .

Monday, 6 October 2014

ஏங்கும் ஒரு கூடு



நினைவாலே நீ‘என்னில் நானாகி எனில்வாழும்
           நனைவுகள் காய வில்லை!
     நெருக்கத்தில் உனைக்கண்டும் நீடிக்கும் மௌனத்தில்
           நிற்கின்ற வலிமை இல்லை!

Tuesday, 30 September 2014

தமிழ்க் கைம்மா நல்லா இருக்குமா?


பண் இசைத்துப் பாடுபவன் பாணன். அவன் மனைவி பாணி. பாட்டுப்பாடி கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதுதான் அவர்கள் தொழில்.
அவர்களை வாழவைத்த தர்மப்பிரபுக்களும் அன்று இருந்திருக்கிறார்கள்.
தன் வறுமையைப் போக்க ராமன் என்கிற வள்ளலைப் பார்த்துப் பரிசில் பெற்று  வீட்டுக்குள் வருகிறான் அந்தப் பாணன்.
பாணி தன் கணவன் என்ன வாங்கி வந்திருப்பான் என்ற ஆவலில் அவனிடம் கேட்கிறாள்.

Friday, 26 September 2014

காலக்கணிதம்.



கணிதம் பற்றிய பதிவுகளைச் சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் தளத்திலும் நண்பர் அ பாண்டியன் அவர்கள் தளத்திலும் காண நேர்ந்த போது கணக்கதிகாரம் என்றொரு நூலும், தமிழில் காளமேகத்தின் பின்னம் பற்றிய பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்தன. தமிழில் உள்ள நான்கு கவிகளில் ஆசுகவி என்போர் ஏதேனும் எழுத்தையோ சொல்லையோ பொருளையோ கொடுத்தால் உடனடியாகப் பாடும் வல்லமை பெற்றவர்கள். அதற்கான சோதனையும் அவைக்களங்களில் நடப்பதுண்டு.
அப்படிக் காளமேகத்திடம்,முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்னும் எட்டு அளவைச் சொற்களும் அமையுமாறு கச்சியில் உறையும் ஏகாம்பரநாதர் மேல் ஒரு வெண்பா பாடுமாறு கேட்கப்பட்டதாகக் கூறுவர். காளமேகம் பாடிய பாடலைக்

Tuesday, 23 September 2014

சொல் விளையாட்டு



புலவர்களும் வறுமையும் உடன்பிறந்தவைதான். அந்தக்காலப் புலவர்களுக்கு எழுதுவதுதான் தொழில். அவர்களது தேவைகளை அரசு கவனித்துக் கொள்ளும். அல்லது அவர்களின் தரமறிந்து கொடுக்கும் மனம் கொண்டு ஆதரிப்போர் கவனித்துக் கொள்வர். புலவர்களும் புலமைச் செருக்கோடுதான் வலம் வந்துள்ளனர்.
ஔவை பாடியதில் எனக்குப் பிடித்த வரிகள் இவை.
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
       விரைந்தழைப்பார் யாவருமிங் கில்லை

Monday, 22 September 2014

துன்பக் கேணி.


 இராமச்சந்திர கவிராயர் என்றொரு கவிஞர் மிகச்சுவையான பாடல்களை எழுதியிருக்கிறார். நகைச்சுவையும் அவலமும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல்களாய் அவை இருக்கின்றன.   ஒருவனுக்குத் துன்பம் எப்படி அடுக்கடுக்காய் வரமுடியும் என்பதற்கு இவர் எழுதிய

Monday, 15 September 2014

கவிஞர்.கி.பாரதிதாசன் கண்ணன்விடு தூது


                        






                                    


                               


      
 















                                  காப்பு 

பண்ணில் தமிழ்பாடும் பாரதி தாசர்மேல்

கண்ணன் விடுதூது கட்டுரைத்துக் - கொண்டுசெல

மாலைவரு மாலைதிரு மாலைபெற மாலடியார்

காலைதொழுங் காலையவர் காப்பு.


( ஈற்றிரண்டடிகள் மடக்கு. . இதன் பொருள் : மாலைவரு மாலை -மாலை வேளை வரும் திருமாலை, திருமாலை பெற - மேன்மைபொருந்திய மாலையைப் பெற்றுவரத் தூதாய் அனுப்ப, மாலடியார்  - மாலடியார்களாகிய ஆழ்வார்களின், காலை தொழுங்காலை -  திருவடிகளைப் பணியுங்காலை, அவர்காப்பு -  அவர்களே இந்நூலினைக் காத்தமைவர்)

Tuesday, 9 September 2014

பூக்கள் நோகும்.


தெளிவிற்கும் மனதில்‘உன் தெளியாத நினைவிற்கும்
     தேக்கங்கள் என்றும் இல்லை! – என்றன்
ஒளிவிற்கும் நான்செய்த ஓராயிரம் கவிக்கும்
     ஒளிசேர்க்க நீயும் இல்லை!

Wednesday, 3 September 2014

மலைத்தேன்.

 
வண்டோடு மலர்பேச வானோடு மரம்பேச
       வளர்ந்தோங்கு கொல்லி மலைமேல்
     வருகின்ற இருள்கொல்லும் வாள்தன்னைக் கரமேந்தி
        விடியலினை உலகு நல்கக்
கொண்டாடும் ஒளியோடு கொல்லிமலை கீழ்திசையில்
        கதிரோனும் உதய மானான்!
      குயில்கூவ மயிலாடக் கண்திறந் திவ்வுலகத்
        துயில்நீங்கத் தேரில் வந்தான்!

Sunday, 31 August 2014

கண்ணோடு நின்ற கனவு.




............................ கலிவெண்பா
...............................

நெஞ்சள்ளும் பேரழகால் நித்தம் எனைவென்று
அஞ்சி நடந்தென்னை ஆள்கின்றாய்! கொஞ்சிடச்செய்
கிள்ளை மொழியாய்க் குயிலொலியாய் ஏழிசையாய்ப்
பிள்ளை மழலையெனப் பேசுகிறாய்! நெஞ்சம்
நினைந்துரும் வண்ணம் நிழல்போல வந்தாய் !

Thursday, 28 August 2014

வாராயோ கண்மணியே!












முத்தை விளைத்தெடுத்த மோகப்பூஞ் சித்திரமே!
தத்தை குரல்கற்கும் தங்க ரதவடிவே!
குளத்தில் தாமரையும் கூம்பி‘இதழ் விரிப்பதுபோல்
உளத்தில் மலர்ந்தென்னுள் உயிரான மெய்ப்பொருளே!

Monday, 25 August 2014

வீழும்வரை போதும்!















கிள்ளையிலும் இல்மொழியை மெல்ல‘அவள் சொல்லமனம்
       அள்ளுமிவள் உள்ளழகில் ஆழும்! – என்னைக்
கொள்ளைகொண்டு போகுமிவள் கள்ளவிழி வீச்சழகில்
       உள்ளம்பனி வெள்ளமென வீழும்!

Thursday, 21 August 2014

சொல்லாக் கவி சொல்வாய்!



 


வெட்டும்விழி கொட்டும்கணை ஒட்டும்‘எனை நாடும்!
விட்டும்பிடித் திட்டும்‘எனைத் தொட்டும் சுகம்தேடும்!
பட்டும்‘உள மொட்டும்மதி கட்டும்‘உணர் வாடும்!
கிட்டும்‘எனச் சுட்டும்நிலை கெட்டும்‘உனைப் பாடும்!

Monday, 18 August 2014

எனக்குத் தெரியாது!




 






சென்னைக் கிறித்தவக்கல்லூரியில் விரிவுரையாளருக்கான நேர்காணலுக்கு வந்திருந்த மறைமலை அடிகளிடம் பரிதிமாற் கலைஞர் கேட்டதாகச் சொல்லப்படும் கேள்வி
“குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்திற்கும் எடுத்துக்காட்டுத் தருக“
மறைமலையடிகள் சொன்ன பதில்
“ எனக்குத் தெரியாது “

Saturday, 16 August 2014

நீ என்னை ஆள்க!


ஓங்கும் மலையாகி
     உன்னை நான்மறக்கத்
தூங்கும் வானாய்நீ
     தோன்றமனம் தோற்குதடி!

Monday, 11 August 2014

சொல் வேட்டை!



பழைய இலக்கியங்களைப் பனையோலையில் இருந்து பிரதி எடுக்கும் போது சில சொற்கள் அழிந்திருக்கும். சில எழுத்துக்கள் தெளிவில்லாமல் இருக்கும்.
சில நேரங்களில் இடையே இருக்க வேண்டிய ஓலைச்சுவடிகள் சில இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட இலக்கியங்களுக்கு வேறு பிரதி இருந்தால் ஒப்பு நோக்கித் திருத்தம் செய்யலாம். அந்தப் பாடல்கள் எங்காவது யாராவது மேற்கோளாக எடுத்துக் காட்டி இருந்தால் அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவ்வளவுதான்!