Wednesday 28 October 2015

அது போதும்.


இடியெடுத்துவெளி மழையுதிர்த்துவளர் கடல்கலக்கவருந் தும்பியை
   இரையெடுத்துநுரை பறையொலித்துமலர் கரைதெளிக்கவரு வெள்ளலை!
படமெடுக்கஒளி வடிவெடுத்தபகல் நொடியுகுத்தகுறு மின்னலைப்
    பரிந்தெடுத்துமுடி இழைபிரித்ததலை செறிவுறுத்துமிருள் வெண்ணிலா!
அடியெடுத்துமலை தடதடக்கவிழ துடிதுடித்துருகும் ஓடைகள்!
   அதையெடுத்தருவி பதைபதைப்புடனே விதைதெளிக்கவெழும் ஆறுகள்!
வடிவெடுத்தமுகில் கொடிபிடித்துநட மிடவிழித்துளிகள் தேடுமே!
     வசமிழந்தமனப் பசிவிரட்டதமிழ் இசையொலித்துவரக் கூடுமே!

சிகைகலைந்ததென இலைபொழிந்துதுயர் நிலைகலங்கியழு மாவனம்!
    சினைபிடிக்கமழை சிதைகெடுக்கவெழும் முனைஉயிர்த்துகளின் சேகரம்!
முகைமடித்துமலர் இதழ்கடிக்கவெழில் முடைகரத்திடையில் கானகம்
      முகம்தெளித்தபனி பகலெழுப்பிவிட முடம்களைந்துதொடர் நாடகம்!
குகையொளிந்தஇருள் பகைபொதிந்தகனல் குறைசலித்துநிறை வேடமும்
      குழிவிழுந்தவிதை மழைவலைச்சிறகில் எழுந்திறம்‘அறிந்த பாடமும்
மிகைகளைந்ததமிழ்க் கவிபடிந்தகுறு  நகைபிறந்தெழுக நாதமே!
       மிதமுணர்ந்தமொழி பதமறிந்தமனம் இதமறிந்திடுதல் போதுமே!

படம் - நன்றி-http://www.netanimations.net/Animated-moving-cinemagraph-of-heavry-storm.gif

       
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

59 comments:

  1. தமிழ் இசையொலித்து வருகிறது ஐயா... அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்கள் முதல் பின்னூட்டமும் பாராட்டும் காணப் பெருமகிழ்வு.

      நன்றி.

      Delete
  2. நீண்ட நாட்களின் பின் மழைப் பெருக்கில் நனைகிறேன். மீண்டும் வருகிறேன் நனைந்தெளுந்து மிக்க நன்றி பதிவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. பலதடவை பாடி மகிழ்ந்தேன். சொல்லாடலும் கற்பனையும் தித்திப்பே.

      மிகைகளைந்ததமிழ்க் கவிபடிந்தகுறு நகைபிறந்தெழுக நாதமே!
      மிதமுணர்ந்தமொழி பதமறிந்தமனம் இதமறிந்திடுதல் போதுமே!

      ஆஹா என்ன சொல்வேன் எத்தனை அழகு தமிழ் எத்தனை நுணுக்கங்கள்.
      மொழியின் இதம் பதம் அறிந்தளிக்கும் ஆற்றலும் அற்புதம் ஐயனே!
      நன்றி நன்றி! நன்றி! கற்க முடியாவிட்டாலும் ரசிக்கவாவது மேலும் தாருங்கள்.

      Delete
    2. வாருங்கள் அம்மா!

      இங்கும்மழைதான்.

      தங்களின் வருகையும் ஊக்கப்படுத்துதலும் காண ஒரு புறம் மகிழ்ச்சி.

      இதைக் கற்பது கடினமா என்ன?

      சிலநிமிடங்கள் ஆகாதே உங்களுக்கு..!!!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    துடிதுடிப்புடனே கவிபடைத்திடவே அடியெடுத்துவைத்த தாயவள்

       துணையிருப்பவளாம் இயற்கையன்னையவள் வரமனைத்தையுமே தந்தவள்!


    அருமை.

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      உங்கள் முயற்சி சிறப்பானது.

      நன்றி

      Delete
  4. சிறப்பான கவிதை மழை.

    நன்றி.

    கோ

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் நன்றி கோபி ஐயா.

      Delete
  5. இசையொலித்து வரும் மழைப் பொழிவெனப் பாடல் கண்டேன்!
    அருமையாக இருக்கின்றது கவிநடை!

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!

      தங்களைப் போன்ற பாவலர்களின் வாழ்த்து இன்னும் நன்கெழுதத் துணைசெய்யும்.

      நன்றி

      Delete
  6. மழைக்கவி அருமை !

    ReplyDelete
  7. நிறுத்தி நிதானமாக இரண்டு முறை வாசித்து ரசித்தேன். எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும். எப்படி எழுதுகிறீர்கள்! அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

      Delete
  8. தங்களின் கவிதையினைப் படித்து ரசிக்கும்பொழுது
    மழை பொழியத் தொடங்கிவிட்டது
    நன்றி நண்பரே
    தம+1

    ReplyDelete
    Replies
    1. அங்குமா?!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  9. ரசித்தோம் ரசித்தோம் இதைப் பல முறை வாசித்து வாசித்து உங்கள் மொழி ஆளுமையையும் ரசித்து வாய்விட்டுப் படித்து வியந்து, எப்படி எழுதுகின்றார் என்று திறந்த வாய் மூடாது அந்த நடையில் மெய்மறந்து ...வார்த்தைகள் இல்லை இதற்கு மேல்...சகோதரரே..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பினுக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. தமிழ் இசையொலித்து வந்துவிட்டதே!

    ReplyDelete
    Replies
    1. எப்படி எழுதுகிறீர்கள் என்று சிலாகித்துப் படித்தேன் பலமுறை

      Delete
    2. அங்கும் மழைபொழிவை இப்பொழுதே பார்த்தேன்.

      எழுதுதல் கடினமில்லை. எளிதே!

      நிச்சயம் நீங்களும் எழுதலாம்.

      நன்றி

      Delete
  13. அதுவும் இரு இடங்களிமே சற்று சிறிய மழை...உங்கள் வரிகள் இன்னும் அழகு சேர்த்து சில்லிட வைத்தது தூறலை...

    தூறல் ர என்றாகி விட்டதோ என்று அழித்து பின்னர் பின்னூட்டமிட்டோம்..அதனால்தான் இரு முறை..

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை தமிழென்றதால் தப்பித்தீர்கள்!

      மலையாளத்தில் இது அஸப்யம் அல்லவோ? :)

      நன்றி சகோ.

      Delete
  14. அருமை நண்பரே!
    த ம 8

    ReplyDelete
  15. "வடிவெடுத்தமுகில் கொடிபிடித்துநட மிடவிழித்துளிகள் தேடுமே!
    வசமிழந்தமனப் பசிவிரட்டதமிழ் இசையொலித்துவரக் கூடுமே!" என
    நன்றே அழகுறப் பாபுனைந்து
    எம் உள்ளம் சுவைத்திட வைத்தீர்கள்
    www.ypvnpubs.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி திரு. யாழ்ப்பாவாணன் அவர்களே!

      Delete
  16. இது போதும்...என்றே கவிமழையில் நனைந்தபடி நிற்கிறேன்.
    தொடருங்கள் ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பாவலரே!

      உங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன?


      எழுதத் தொடங்குங்கள்!

      Delete
  17. தங்களின் கவிதை மழையில் நனைந்தேன். பிரமிப்புடன் இரசித்தேன். அழகாக கவிதையில் சொற்சிலம்பம் ஆடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      இதன் ஓசை கடந்து சென்றால் பொருளின் நிறப்பிரிகையைக் காண உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் மேலான ஊக்கமூட்டுதலுக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி.

      Delete
  18. வணக்கம் ஐயா,
    சிகைகலைந்ததென,,,,,,,, ம்ம்,
    ஏற்கனவே மழையில் நனைந்து கிடக்கிறேன்,,,,
    இப்போ கவிமழையில் நனைந்து
    தொடருங்கள்,,,,,,, நனைந்தபடி நாங்களும்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பேராசிரியர்க்கு வணக்கம்!

      அடுத்த பதிவிற்குத் தலைப்புக் கிடைத்துவிட்டதுபோல..!!!

      எழுதத் தொடங்குங்கள்.

      காத்திருக்கிறோம்!

      நன்றி

      Delete
    2. வணக்கம் ஐயா,

      முன்பெல்லாம் எனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்தேன். இப்போ தான் தெரிகிறது. நான் கிணற்று தவளை என்று,,

      எழுதத் தொடங்குங்கள்.

      காத்திருக்கிறோம்!

      நன்றி

      Delete
    3. வணக்கம் ஐயா,

      முன்பெல்லாம் எனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்தேன். இப்போ தான் தெரிகிறது. நான் கிணற்று தவளை என்று,,

      எழுதத் தொடங்குங்கள்.

      காத்திருக்கிறோம்!

      நன்றி

      Delete
    4. ஐயா
      எனக்கும் கற்றுத் தாருங்கள் கவி முடையும் கலையை
      கற்றுத் தருபதல்ல கற்பனையில் வருவது
      இதழ் மூடிய முறுவல் ஏன்,,
      பேராசை என்றா????????
      சரி தான் முடவனின் கொம்புத்தேன் ஆசை????????
      நன்றி ஐயா,,

      Delete
  19. அருமை! சொற்கோர்வையும் விவரிப்பும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் பாரட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  20. Replies
    1. தங்களின் வருகையும் கருத்தும் மேலும் நான் கவனமாக எழுதவும் மேம்பாடுறவும் துணைசெய்யும்.

      தொடர்ந்துவரவும் கருத்திடவும் வேண்டுகிறேன்.

      Delete
  21. வாய் விட்டு படித்தால் நாவுக்கு நல்ல பயிற்சி போலிருக்கே ,உங்க கட கட கவிதை :)

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் வாய்விட்டுச் சிரிக்க வைத்து நோய்விட்டுப் போக வைக்க நீங்கள் தரும் பயிற்சிக்கு ஈடாகுமா இதெல்லாம் பகவானே!

      Delete
  22. கருநிறமுகில்தம் குளிர்மிகுவலிதீர் சிறையகத்துமீளும் விண்துளி
    கலைநயமிகுநல் கவிபுனையவொரு கருவளித்துமேவும் கண்வழி
    ஐயா, தங்களின் இசை நிறை பாடல்கள் தமிழின் இனிமையை, மேலும் மேலும் மெருகூட்டுகின்றன. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      முதலில் நலந்தானே?!

      சிறிது இடைவெளிக்குப் பிறகு பதிவிட ஆரம்பித்ததும் அனிச்சையாய் உங்களைத் தேடிற்று மனது.

      அடுத்தடுத்த ஒவ்வொரு பதிவுகளிலும்.

      உங்கள் வருகையும் கருத்தும் கண்டு மனம் மிக மிக மிக மகிழ்வடைகிறது.

      இதோ,

      உங்கள் மறுமொழிக் கண்ணிகள் நான் முடித்த பதிவை இன்னும் நீட்டிக்கின்றன.

      யாரென்றறியாதபோதும் காணாமையின்போது உள்ளூரத் தேடித்தவிக்கின்ற இந்த அன்பை இப்பொழுது இவ்வலைத்தளத்தின் ஊடாகத்தான் நான் முதன்முறையாக அனுபவிக்கிறேன்.

      தங்கள் வலைப்பூவில் எழுதத் தொடங்குங்கள்.

      நன்றி

      Delete
    2. நான்வரினும் வாராமல் சென்றிடினும் அன்றாடம் நின்றாடும் நினைவு மாறா.ஐயா. தங்கள் அன்பிற்கு இன்றும் என்றும் நான் அடிமை. நன்றி.

      Delete
  23. ப்பா! ப்பா! ப்பா! உச்சம்!!!

    மழையால் என்னவெல்லாம் நிகழ்கிறது என இப்படி அக்குவேறு ஆணிவேறாய் நீங்கள் வருணித்திருக்கிறீர்கள். மழையால் இப்படியொரு பாவும் தமிழுக்குக் கிடைக்கும் என்பதை மட்டும் இந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்! உச்சம்!! உச்சம்!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete

  24. அருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என்று தனிசிறப்பு இருக்கவேண்டும். தங்களிடம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இசையுடன் கூடியதாக உள்ளது. படிப்பதற்கு இனிமை. நன்றி அய்யா. தொடர்க உமது பணி.

    ReplyDelete

  25. அருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என்று தனிசிறப்பு இருக்கவேண்டும். தங்களிடம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இசையுடன் கூடியதாக உள்ளது. படிப்பதற்கு இனிமை. நன்றி அய்யா. தொடர்க உமது பணி.

    ReplyDelete

  26. அருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என்று தனிசிறப்பு இருக்கவேண்டும். தங்களிடம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இசையுடன் கூடியதாக உள்ளது. படிப்பதற்கு இனிமை. நன்றி அய்யா. தொடர்க உமது பணி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      தொடருங்கள்.

      Delete
  27. சிறப்பான கவிதை. ரசித்தேன் ஐயா.

    ReplyDelete

  28. வணக்கம்!

    கோடை நிழலாய்க் கொடுத்த விருத்தங்கள்
    கூடைக் கனிகளின் கூட்டு!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. கூட்டுக் குறட்பாக்கள் கொண்ட பின்னூட்டம்
      காட்டும் புலமைக் கலை

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  29. ஆகா அற்புதம்

    ReplyDelete