Tuesday, 11 April 2017
Sunday, 9 April 2017
கொலை தூண்டும் கற்கள்!
குறிச்சொற்கள் :
சங்க இலக்கியம்,
மொழி,
வரலாறு,
வாசிப்பு
Wednesday, 5 April 2017
இது நியாயமா?
வகுப்புகள்
முடிவடைந்து ஆண்டு இறுதித்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பும் நிகழ்வு நேற்று. பிரச்சினைகள்
நிறைந்த வகுப்பு அது. மாணவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சி, அதற்கான அவர்களின் பாவனைகள், பொறுத்துக் கொள்ள முடியாத அவர்தம் பழக்க வழக்கங்கள்..! வகுப்பறைக்குள் நுழைந்தாலே ஏதேனும்
பஞ்சாயத்து இல்லாமல் தொடங்கியதில்லை.
Tuesday, 25 October 2016
ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்
ஆசீவகர்
பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது?” என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட
வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.
Sunday, 23 October 2016
Friday, 21 October 2016
நாம் பேசும் சொற்களா இவை?:உங்கள் தமிழைத்தெரிந்து கொள்ளுங்கள்-19
நாம்
அன்றாடம் பேசிட எழுதிட எத்தனையோ சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
நாம்
பயன்படுத்தும் சொல்லுக்கு நாம் குறிக்க விரும்பும் பொருளன்றி வேறு பொருளும் இருக்கலாம். அல்லது நாம்
குறிப்பிட்ட சொல்லுக்கு உரிய பொருளை அறியாமல் அதனைப் பயன்படுத்தவும் செய்யலாம்.
சில சொற்கள் நாளடைவில் தம் நுண்ணிய பொருள்
வேறுபாடு மறைந்து ஒரே பொருளாய்ப் போய்விடலாம்.
பயன்பாட்டில்
உள்ள மொழியின் தன்மை இது.
பேசுதல்
என்கிற பொருளைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உண்டு.
அறைதல்,
இயம்புதல், இசைத்தல், உரைத்தல், கூறுதல், சாற்றுதல், நவிலுதல், நுதலுதல், பகர்தல்,
பறைதல், பன்னுதல், புகலுதல், புலம்புதல், மாறுதல், மொழிதல், என்பன அவற்றுள் சில.
ஆனால்
பேசுதலுக்கும் அதற்கு இணையாக வழங்கப்படுகின்ற இச்சொற்களுக்கும் நுண்ணிய வேறுபாடுண்டு
எனக் காட்டுகிறார் தேவநேயப்பாவாணார்.
இதோ
அவர்தரும் பொருள்:
பேசுதல்
– ஒருமொழியிற் சொல்லுதல்.
அறைதல்
– ஓங்கிப் பேசுதல், வன்மையாகச் சொல்லுதல்
இயம்புதல்
– இனிமையாகச் சொல்லுதல், இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்
இசைத்தல்
– கோவையாகச் சொல்லுதல்
உரைத்தல்
– நூலுக்கு உரைகூறுதல், விளக்கிச்சொல்லுதல்
கூறுதல்
– பாகுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல்
– பலரறிய நல்லுரை கூறுதல்
நவிலுதல்
– நாவினால் ஒலித்துப் பயிலுதல்
நுதலுதல்
– சொல்லித் தொடங்குதல்
நுவலுதல்
– நூலுரைத்தல், நுண்பொருள் கூறுதல்.
பகர்தல்
– பண்டங்களின் விலை கூறுதல்.
பறைதல்
– உரத்துச் சொல்லுதல்.
பன்னுதல்
– பணிக்காய் ( விவரமாய் )ச் சொல்லுதல்.
புகலுதல்
– விரும்பிச் சொல்லுதல்
புலம்புதல்
– தனிமையிற் சொல்லுதல்.
மாறுதல்
– திருப்பிச் சொல்லுதல்., மறுமொழி கூறுதல்.
மொழிதல்
– சொற்களை நன்றாய்ப் பலுக்கிச் சொல்லுதல்.
(
பக்.33., சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு )
வாருங்கள்
நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.
( பேரறிஞர்களின் பேருழைப்பால் தொகுக்கப்பட்ட தமிழ்லெக்சிகனில்
உள்ள குறைகளைச் சான்றாதாரங்களுடன் பட்டியலிட்ட பாவாணரின் தமிழறிவும், அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்த அந்நாள் தமிழறிஞர்களும் பற்றிய
அவலச்சுவை மிகுந்த முன்னுரை ஒன்று இந்நூலில் உண்டு. குறைந்தபட்சம் தமிழார்வம்
மிக்கவர்களேனும் பார்க்க வேண்டும் என்பது என் பரிந்துரை )
படஉதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
Wednesday, 19 October 2016
Monday, 17 October 2016
Sunday, 16 October 2016
Thursday, 13 October 2016
Wednesday, 12 October 2016
Tuesday, 11 October 2016
100 வயது வரை பல்விழாமல் தடுக்கும் பற்பொடி! -1898ஆம் ஆண்டு விளம்பரப்படம்.
1898ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூலின் இறுதிப்பக்கத்தில் வந்த விளம்பரம் இது.
Monday, 10 October 2016
இவளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? – கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசாம்!
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
மொழி,
வாசிப்பு,
விளையாட்டு
Saturday, 8 October 2016
Wednesday, 5 October 2016
Tuesday, 4 October 2016
Monday, 26 September 2016
கூட்டம் மயக்கும் கலை – அது இப்படித்தான்!
Sunday, 25 September 2016
கூட்டம் மயக்கும் கலை.
Saturday, 24 September 2016
இதனால் சகலமானவர்களுக்கும்………!
Thursday, 14 January 2016
மன்னியுங்கள்! இது ஒரு வலி மிகுந்த பதிவு!
பிரபல
வலைப்பதிவரும் நண்பருமான இதழியலாளர், திரு. எஸ். பி . செந்தில்குமார் அவர்கள் எனது
பதிவின் பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்த கேள்வியும் அதற்கான பதிலும்தான் இந்தப் பதிவின் சாரம். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் என் மனம் விரும்பாத பதிவு எது என்றால் அந்தப் பதிவினைத்தான் சொல்வேன்.
Subscribe to:
Posts (Atom)









