Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, 4 October 2016

மாண்டவன் நாட்குறிப்பு - 1



கசப்பின் நெடிபடர்ந்த எழுத்துகளை
அமுதசுனையூறும்
உன் எரியோடைக்குத்தான் கொண்டுவருகிறேன்  இப்போதும்….!

Sunday, 13 December 2015

ரக்ஷிதாவின் கண்களில் இருந்து.....!


வெள்ளம்
வாசம் பிடித்து வருகின்ற வேட்டை நாயைப்போல
எங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது,

Wednesday, 2 December 2015

எங்கிருந்தாலும் வாழ்க.

ஈரமுலர்ந்த  மணல்வீடொன்றின் கலைந்துதிரும் ஆயிரமாயிரம் துகள்களின்  மிச்சமிருந்தன, வனைந்த கரங்களால் இணைந்த கனவுகள். அலை ஆரத்தழுவி அத்தனையும் உட்செரித்த  பேராழங்களில் உவர்மண்ணாய்க் கிடந்தவோர் நாளில் திடீரென நினைவு வந்தது,…. அன்று அவனை அறியாமல் அகன்றுபோன அவளது பிறந்தநாள்…….!

Wednesday, 18 November 2015

தகனம்.




கொதிக்கும் நினைவென்னை வடிக்கின்றது! – வெந்து
     கிடக்கும் கனவின்னும் துடிக்கின்றது!
விதிக்கும் விளையாட்டுப் பிடிக்கின்றது! – நாட்கள்
     விடிந்தும் விழிமூடிக் கிடக்கின்றது!

Saturday, 7 November 2015

பாம்பு




விழித்துக் கொண்டது பாம்பு!
விடத்தைத் துப்ப இடமில்லாமல்
விழுங்கிக் கொண்டது தன்னுள்!
விதையில்லாத மரங்களில் ஏறி
விரட்டிச் சாய்க்குது என்னை!

Wednesday, 28 October 2015

அது போதும்.


இடியெடுத்துவெளி மழையுதிர்த்துவளர் கடல்கலக்கவருந் தும்பியை
   இரையெடுத்துநுரை பறையொலித்துமலர் கரைதெளிக்கவரு வெள்ளலை!
படமெடுக்கஒளி வடிவெடுத்தபகல் நொடியுகுத்தகுறு மின்னலைப்
    பரிந்தெடுத்துமுடி இழைபிரித்ததலை செறிவுறுத்துமிருள் வெண்ணிலா!

Monday, 5 October 2015

பழமைக்குத் திரும்புகிறேன்!



வலைப்பதிவர் படைப்பூக்கப் போட்டிகள் முடிந்தன. இனி மதிப்பீடுகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நெடுநாள் கழித்துக் கவிதை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட வரையறைகளில் எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்தது. போட்டி என்பதைக் காட்டிலும் பங்கேற்றல் என்பதே அதன் நோக்கம். போட்டியில்தான் எத்துணை எழுத்தாளுமைகள், தொழில்நுட்பப் பதிவர்கள்,  சமூகச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள், நிச்சயம்  இன்னும் மெருகேறி தமிழ் வாழும் என்கிற நம்பிக்கை என்னுள் வலுவாக வேரூன்றி உள்ளது. போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பதிவர்களின் பதிவுகளையும் படித்தவன் என்கிற முறையில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும்  வணக்கங்களும்..!

Wednesday, 30 September 2015

எங்கள் தமிழென்று சொல்!


வித்தின் அகத்துறை வீரியமே! – சிறை
     விட்டுப் புறம்வருக! – தடை
எத்திப் புறப்படும் ஏறெனவே – புகழ்
    ஏட்டில் இடம்பெறுக! – வெறும்

நிம்மதியோடிரு!


பீடுகளால் புனிதப்படுத்தப்பட்ட
ஆண்டைகளின் அரியாசனங்களின் கீழ்
நசுக்கப்பட்டுக் கிடக்கும் விரல்கள் நமதானதில்லை! -  நிம்மதியோடிரு!

Monday, 28 September 2015

இறக்க உயிர்வாழ வேண்டாம்!




கிளியின் குலம்வாழும் காட்டை – உடல்
    கொழுக்கக் கரும்பூனை காக்கின்ற தென்றால்
ஒளிரும் அறிவுள்ள தம்பி! – மனம்
    ஒப்பும் கதையாமோ? உண்மைகள் கூறித்
தெளிவை இனம்காணச் செய்வோம்! – நமைத்
    தேக்கும் பிரிவினைத் தேளை நசுக்க
அளி’உன் உயிரென்று சொன்னால்  -அதற்
    காகவே  ஆயிரம் சென்மம் எடுப்போம்!

Sunday, 27 September 2015

யாது ஊர்? யாவர் கேளிர்??




உலகளாவிய மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் - 2015. 
வகை - 4 : முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை.

கசாப்புக் கடையொன்றில் தொங்க விடப்பட்டுள்ள
தோலுரிக்கப்பட்ட என் உடலை
நிலைகுத்திய விழிகளோடு பார்த்துக் கொண்டிருக்கிறது
வெட்டப்பட்ட எனது தலை..!

Saturday, 26 September 2015

புறப்படு வரிப்புலியே!




கண்ணிற் சிறுபொறி! மின்னும் அறிவுடன் கையிற் பெருவலியும்
   கரையுற் றிடுகடல் திரைகற் றிடும்படி காத்திர முயற்சிகளும்
விண்ணிற் கனவுகள் வெல்லும் மனதினுள் வீரத் தினவுடனே
    வாளிற் றிடும்வளர் தோளிற் றமிழினும் வாழ நடையிடுவாய்!!

Saturday, 15 August 2015

கிளிப்பாம்பு


கொஞ்சு மனக்கிளிகள் கூவு மொருபெயராய்க்
     கோடை மழைப்பெருக்கின் கோப முகக்குறியாய்ப்
பிஞ்சு உயிர்துடிக்கப் பேணு பிறைமடியாய்ப்
     பித்த னெனைப்பிடித்துப் போனவுன் மாயமென்ன?

Wednesday, 12 August 2015

உயிர் ஓலம்




ஒடித்துக் கண்சிறை உருக்கிக் கொண்டெனை
     ஒறுத்துக் கொன்றிடா துடைக்க ஐம்புலன்
இடித்து நெஞ்சிடம் இறுக்கி என்கரை
     இறைக்கும் உன்முகம் இனிக்க என்‘உலை

Friday, 24 July 2015

நான்.


என் பால்யத்தின் சிறுபிள்ளைத்தனமான வாசிப்பில் எல்லாவற்றையும் நிறைய அறிந்ததாக எண்ணி, ஏதோ ஒரு பெரிய ஒளிவட்டம் என் தலைக்குப் பின்னே இருப்பதான செருக்கில் ஒரு கிணற்றுத் தவளையில் வெற்றுத் தலைக்கனத்தோடு அலைந்து கொண்டிருந்த காலம் அது.

Wednesday, 1 July 2015

ஆதலினால் காதல் சுகம்.


சின்ன விழிக்குருவி செல்லச் சிறகசைக்கத்
தின்ன உயிர்கொடுத்துத் தீர்வதனால் – கன்னமிட்டுப்

Sunday, 10 May 2015

காத்திருப்பின் நீட்சி...!




நாடகங்கள் தொடர்வதுவும் யாருமறி யாமல்
    நாம்நடித்துக் கொள்வதுவும் மேடைகளும் இன்றி
வீடகத்தும் வெளிப்புறத்தும் வீதிநெடு கெங்கும்
     விரட்டுகின்ற ஞாபகத்தின் வேதனைக ளோடு

Thursday, 16 April 2015

நான் தோற்ற க(வி)தை


நமக்கும் நாலு எழுத்துத் தமிழில் பிழையின்றி எழுதத்தெரியும் என்றும் நாம் எழுதுவது எல்லாம் கவிதை என்றும், காதலைப் பற்றியும் தமிழைப்பற்றியும் எழுதுவதே தமிழ்க்கவிதை மரபென்றும் துள்ளித் திரிந்த காலத்தில் எழுதப்பட்டு, கவிதைப் போட்டியில் போராடித் தோற்றுப் போன கவிதையின் ஒரு பகுதி இது. உண்மையில், இதை எழுதும் போது நிறைய உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன்  என்பது தெரிகிறது. இதை இன்று தட்டச்சுச் செய்யும் போதும் கூட இறந்த காலத்தில் நான் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட தமிழ்க்களங்கள் நினைவுக்கு வருகின்றன.

இக்கவிதை நிராகரிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன.

நான் எழுதியது அல்ல என்பது ஒன்று. ( பிறகு இது மிகுந்த பரிசீலனைக்கும் சோதனைக்கும்  பிறகு ஒருவாறாக ஏற்கப்பட்டது. )

இன்னொன்று இதில் இருக்கின்ற நாகரிகமற்ற, கவிதையின் புனிதத்தை அசுத்தப்படுத்தியதாகக் கருதப்பட்ட ஒரு சொல்லாட்சி.

அன்றும் எனக்குப் பரிசு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இல்லை. இன்னொருவருடையதைத் திருடி எழுதினேன் என்ற  குற்றச்சாட்டில் இருந்து மீண்டேனே என்ற மகிழ்ச்சிதான் இருந்தது.

Monday, 23 March 2015

மறைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து…. (2)



 எனும்முந்தைய பதிவின் தொடர்ச்சி.

இருவில்லும் இல்லை கொடுவாளும் இல்லை
     இதயத்தின் உள்ளே இறங்க
ஒருபார்வை போதும் தடுமாறுந் தாளம்
     உடல்மேளம் கொட்டி முழங்கும்!

Thursday, 19 March 2015

மறைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து……!

( ஒரேயடியா சீரியஸா போய்க்கொண்டிருந்தா எப்படி…… என்பதால் இறந்தகாலத்தில் இருந்தெழும் இந்த  இடைநிரப்பிப் பதிவுகள்…!  )





களிகொண்டு துள்ளும் கயல்வண் டிரண்டும்

         கணையொன்றில் என்றன் நிழலை

வெளிகொண்டு வந்து வெறிகொண்ட அன்பு

         வினையாலே என்னை இறுக்கி