Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, 1 May 2017

அட! இப்படியும் எழுதலாமா?


தேர்வினைக் கண்காணித்தல் என்பது சற்றுச் சுமையான அனுபவம்தான். மூன்று மணி நேரம் போவது மாணவர்க்குத் தெரியாது. ஆனால், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியருக்கு மூன்றுமணி நேரம் நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருப்பது சற்றுச் சிரமமான பணிதான்.

Friday, 28 April 2017

இருநூறாவது பதிவு – யார் இந்த ஊமைக்கனவுகள்?


வலைத்தளம் ஓர் ஊமையைப் பேச வைத்திருக்கிறது. தனிமை அடைகாத்த கனத்த கூட்டினுள் வெற்று வாசிப்புடன் முடங்கிக் கிடந்த என்னாலும் எழுத முடிகிறது என்கிற நம்பிக்கையை, நானெழுதுவதையும் வாசிக்கிறார்கள் என்ற மகிழ்வை இந்த வலையுலகின் வழி நான் அடைந்திருக்கிறேன்.

Wednesday, 5 April 2017

இது நியாயமா?


வகுப்புகள் முடிவடைந்து ஆண்டு இறுதித்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பும் நிகழ்வு நேற்று. பிரச்சினைகள் நிறைந்த வகுப்பு அது. மாணவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சி, அதற்கான அவர்களின் பாவனைகள், பொறுத்துக் கொள்ள முடியாத அவர்தம் பழக்க வழக்கங்கள்..! வகுப்பறைக்குள் நுழைந்தாலே ஏதேனும் பஞ்சாயத்து இல்லாமல் தொடங்கியதில்லை.

Sunday, 23 October 2016

தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ்.

நாஸ்டர்டாமஸ்- எதிர்காலத்தைக் கணித்து எழுதிய குறிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர். அவரது காலத்திற்குப் பின் நடந்தனவற்றை அவர் எழுதிய குறிப்புகளோடு பொருத்தி, உலகம் முழுவதும் நடக்க இருப்பதை அன்றே கணித்துச் சொன்னவர் என்ற புகழுக்குச்சொந்தக்காரர்.

Wednesday, 12 October 2016

சமணம் – சில அனுபவங்கள்..!



தமிழகத்தில் வழக்கிலிருந்த தொல்சமயங்களைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆவல் எனக்கு இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தபோது தோன்றியது.

Tuesday, 11 October 2016

100 வயது வரை பல்விழாமல் தடுக்கும் பற்பொடி! -1898ஆம் ஆண்டு விளம்பரப்படம்.

1898ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூலின் இறுதிப்பக்கத்தில் வந்த விளம்பரம் இது.

Wednesday, 5 October 2016

அம்மா பெரிதென்று….!

பதிவுலகில் நுழைந்த புதிதில் பல்வேறு தளங்களுக்கும் சென்று பலருடைய பதிவுகளையும் வாசித்து மனதிற்பட்டதைப் பட்டவாறே பின்னூட்டம் இட்டு வந்திருக்கிறேன். சில இடங்களில் மூக்குடைந்து போனதும் உண்டு.

Thursday, 14 January 2016

மன்னியுங்கள்! இது ஒரு வலி மிகுந்த பதிவு!


பிரபல வலைப்பதிவரும் நண்பருமான இதழியலாளர், திரு. எஸ். பி . செந்தில்குமார் அவர்கள் எனது பதிவின் பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்த கேள்வியும் அதற்கான பதிலும்தான் இந்தப் பதிவின் சாரம். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் என் மனம் விரும்பாத பதிவு எது என்றால்  அந்தப் பதிவினைத்தான் சொல்வேன்.

Saturday, 17 October 2015

அத்தான் வருவதே இன்பம்!


ஆசிரியப் பயிற்சியின் போது  மாணவ ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய பல நெறிமுறைகள் சொல்லித்தரப்பட்டதுண்டு. அவை அச்சிடப்பட்ட எந்தப் பாடப்புத்தகங்களில் காணக்கிடையாதன. கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தோ அல்லது சக ஆசிரியர்களின் அனுபவத்தில் இருந்தோ அறிந்து பகிர்வன.

Tuesday, 18 August 2015

பின்னோக்கிய ஓர் ஓட்டம்


தமிழின்  மரபார்ந்த அறிவோடு அனாயாசமாக இயங்கும் தமிழாளுமைகளை இணையத்துக் காணுந்தோறும், வாசிப்பின் தொடக்கப்புள்ளியில் வாய்பிளந்து நிற்கும் சிறுபிள்ளையாய் என்னைக் கற்பனை செய்து கொள்வேன்.

Sunday, 9 August 2015

பறவை வேட்டை (2)



பறவை வேட்டை தொடர்ச்சி..தங்களுக்கு வரப்போகும் எந்த ஆபத்தையும் உணராமல் இரு குருவிகளும் கூடைக்குக் கீழே இறைக்கப்பட்டிருந்த தானியப் பரப்பைக் கொத்திக் கொண்டிருந்தன. ‘இன்னும் எதற்காக இவன் காத்திருக்கிறான்?’ மெதுவாக அவன் கைகளில் இடித்தேன். அவன் சிலையைப் போல அசையாமல் இருந்தான்.

Saturday, 8 August 2015

பறவை வேட்டை






படிக்கும் காலத்தில் எனக்கொரு நண்பன் இருந்தான். பெயர் சசிகுமார். ஆறாம் வகுப்பில் அறிமுகமானவன். நான் முட்டாள்தனமாக என்ன சொன்னாலும் செய்தாலும் என்னை விரும்பி எப்பொழுதுமே வெறுத்திடாத மனது அவனுக்கு. அதனாலோ என்னமோ எங்கள் நட்பு நீடித்திருந்தது.

Friday, 31 July 2015

ஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.




‘ஆனந்த யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன். இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்து இட்டதில்லை. ஆனால் இந்தப்பாடலின் கருத்தோட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதால் தொடர்ந்து இடவேண்டியதாயிற்று. இப்பதிவுடன் அவ்வளவுதான் இப்பாடலின் பொருள் வேட்டை என்னளவில் நிறைவுற்றது.

Tuesday, 28 July 2015

ஒரு பாடலும் சில அர்த்தங்களும்.



மணமாகிச் சில நாட்களிலேயே அவனைப் பிரிய வேண்டிய நிர்பந்தம். அவளுக்கு அவனைப் பிரிய மனமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அப்படி.. இங்கிருந்து நாம் சேர்க்கும் பொருள் வாய்க்கும் வயிற்றிற்குமே போதாது. மழைதொடங்கும் காலத்திற்குள் நாம் வாழக் கொஞ்சம் பொருள் திரட்டி வந்துவிடுவேன் என்கிறான் அவன். அவளுக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. பொருள் என்ன பெரிய பொருள்? அவனுடன் இருப்பதைவிட வேறென்ன தனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியும்?

Sunday, 26 July 2015

ஒரு பாடலும் சில நினைவுகளும்.


நாம் இரசித்த மிகச்சில பாடல்கள் இறந்தகாலத்தின் அந்தப் பாடலை அனுபவித்த  சுகமான தருணங்களைச் சட்டென மீட்டெடுக்க வல்லவை.
இரை வைக்கப்பட்ட தூண்டிலாய் ஒவ்வொருமுறையும் எங்கிருந்தேனும் வீசப்படும் அவை நம்மைச் சிக்கெனப்பிடித்து இறப்பின் கரைகளில் வீசியெறியும்.

Sunday, 19 July 2015

தோசையின் வரலாறு.


ஆம். நாம் சாப்பிடும் தோசையின் வரலாறு தான். எனக்குச் செய்யத் தெரிந்த ஒரே உணவு வகை. இன்று காலை அம்மையுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சமையல் பற்றிய பேச்சினிடையே ரொம்பப் பெருமிதமாக ‘எனக்குத் தோசை சுடத்தெரியும்.’ என்று சொல்லிவிட்டேன்.

Thursday, 16 July 2015

கொஞ்சம் அருவருப்புத்தான்.


இளகிய மனம் கொண்டவர்கள்  இதனைப் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் கூடிய காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவற்றைப் பார்க்காமல் நம்மில் சிலர் தவிர்த்திருப்போம். நகைச்சுவை, வீரச்சுவை, காதல், என எத்தனையோ சுவைகளைக் கொஞ்சமாவது இலக்கியத்தில் படித்துக் கடந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு ஓர் அருவருப்பு உணர்ச்சியை இதற்கு முன் எந்தப்பாடலும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.

Sunday, 12 July 2015

புதிருக்கு விடை கண்ட கதை.


காளிதாசனைப் பற்றிய கதை எல்லாருக்கும் நினைவிருக்கும். காளிதாசன் எனக் காளியின் தாசனாய் மாறுவதற்கு முன்னால் ஒன்றும் அறியாதவனாய், இளவரசியை மணமுடிக்கப் போய்,  அவள் மௌனமாய்க் கேட்கும் கேள்விகளுக்கு, மனம் போன போக்கில், 1, 2, என விரல்களைக் காட்டிப் பதிலளிக்க, அது தனது கேள்விகளுக்கான தத்துவார்த்தமான பதில் என்று இளவரசி அவனை மணம் முடித்துக் கொள்வாள்.

Saturday, 11 July 2015

மனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்.


பொருளுக்குச் சுவையூட்டுவது பற்றிய சென்ற பதிவின் தொடர்ச்சியாக அமையும் இந்தப் பதிவிற்கும் இதன் தலைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலில் வருவது கொஞ்சம் தலைப்பிற்குத் தொடர்பில்லாத செய்தி என்பதால் நேரத்தை வீணாக்க விரும்பாதவர்கள் நேராக இதன் இரண்டாம் பகுதிக்குச் சென்றுவிடலாம்.

Friday, 12 June 2015

அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் அந்தக்கால டெக்னிக்.


பண்டைய அரசர்கள், அவர்களின் அரசவை, கோட்டை கொத்தளங்கள் பற்றியெல்லாம் பழைமையின் கற்பனை நம்மிடத்தில்  நிறைய உண்டு. அவர்களது அரசவையின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்க என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதைப் பற்றியதே இந்தப் பதிவு.