Showing posts with label சங்க இலக்கியம். Show all posts
Showing posts with label சங்க இலக்கியம். Show all posts

Wednesday, 3 May 2017

ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3


பல மாதங்களுக்கு முன் எழுதத் தொடங்கிய ஒரு தொடர்பதிவை, நீண்ட இடைவெளிக்கும் வேறுவேறு பதிவுகளுக்கும் பின் தொடரும்போது சில சங்கடங்கள் இருக்கின்றன.

Sunday, 9 April 2017

கொலை தூண்டும் கற்கள்!



ஒருவரைக் கொல்லவோ அல்லது தன்னுயிரைப் போக்கிக்கொள்ளவோ சாதாரண நிலையில் மனிதன் விரும்புவதில்லை. ஆனால் சில சூழ்நிலைகளில் இச்செயல்களை மனிதன் மேற்கொள்ள நேர்கிறது.

Wednesday, 7 October 2015

கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.




சித்ரா அக்கா எங்கள் தெருவின் தேர்ந்த கதைசொல்லி. நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே அவருக்கு வயது முப்பதற்கு மேல் இருந்திருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செய்து கொள்ளவில்லை என்பதை விட அவரையாரும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மையென இப்போது தோன்றுகிறது. ஒடிசலான உடல்வாகு. கருப்பென்றாலும் களைமிகுந்த கண்கள்.

Friday, 31 July 2015

ஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.




‘ஆனந்த யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன். இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்து இட்டதில்லை. ஆனால் இந்தப்பாடலின் கருத்தோட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதால் தொடர்ந்து இடவேண்டியதாயிற்று. இப்பதிவுடன் அவ்வளவுதான் இப்பாடலின் பொருள் வேட்டை என்னளவில் நிறைவுற்றது.

Tuesday, 28 July 2015

ஒரு பாடலும் சில அர்த்தங்களும்.



மணமாகிச் சில நாட்களிலேயே அவனைப் பிரிய வேண்டிய நிர்பந்தம். அவளுக்கு அவனைப் பிரிய மனமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அப்படி.. இங்கிருந்து நாம் சேர்க்கும் பொருள் வாய்க்கும் வயிற்றிற்குமே போதாது. மழைதொடங்கும் காலத்திற்குள் நாம் வாழக் கொஞ்சம் பொருள் திரட்டி வந்துவிடுவேன் என்கிறான் அவன். அவளுக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. பொருள் என்ன பெரிய பொருள்? அவனுடன் இருப்பதைவிட வேறென்ன தனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியும்?

Sunday, 26 July 2015

ஒரு பாடலும் சில நினைவுகளும்.


நாம் இரசித்த மிகச்சில பாடல்கள் இறந்தகாலத்தின் அந்தப் பாடலை அனுபவித்த  சுகமான தருணங்களைச் சட்டென மீட்டெடுக்க வல்லவை.
இரை வைக்கப்பட்ட தூண்டிலாய் ஒவ்வொருமுறையும் எங்கிருந்தேனும் வீசப்படும் அவை நம்மைச் சிக்கெனப்பிடித்து இறப்பின் கரைகளில் வீசியெறியும்.

Sunday, 19 July 2015

தோசையின் வரலாறு.


ஆம். நாம் சாப்பிடும் தோசையின் வரலாறு தான். எனக்குச் செய்யத் தெரிந்த ஒரே உணவு வகை. இன்று காலை அம்மையுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சமையல் பற்றிய பேச்சினிடையே ரொம்பப் பெருமிதமாக ‘எனக்குத் தோசை சுடத்தெரியும்.’ என்று சொல்லிவிட்டேன்.

Sunday, 28 June 2015

வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றவனின் வேதனை அனுபவம்!


சுற்றுலாவிற்கென அயல்நாடு செல்லுதலைப் போன்றதன்று பணம் சம்பாதிக்க அயல்நாடு செல்லுதல். அதுவும் திருமணம் ஆன புதிதில் மனைவியை விட்டுச் செல்லுதல் என்பது இன்னும் கடினம். மனைவியைப் பிரிந்து  பொருள் தேடி வேற்று நாட்டிற்குச் சென்றவனின் வேதனைகள் பல நாம் அறிந்ததும் அனுபவித்ததுமாக இன்று இருக்கலாம். ஆனால் நான் சொல்லப்போவது தோராயமாக இரண்டாயிரம் ஆண்டிற்கு முன் வாழந்தவனின் அனுபவம்.

Tuesday, 23 June 2015

காதலுக்குப் பலியான தோழி!



அவன் அவளுடன் கொண்ட  உறவை ஊர் அறிந்தது. அவளது உறவினர்களும் அறிந்துவிட்டனர். “ இனி இவன் நம் ஊர் எல்லையில் கால் வைக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் வீட்டுப்பெண்ணை நீங்கள் பத்திரமாய் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என ஊர் அவளது பெற்றோர்க்கு அறிவுரை வழங்கிற்று.

Friday, 15 May 2015

கிழட்டுப்பசுவும் இளம்புல்லும்: காமத்தின் வரைவிலக்கணம் (2)



மாடு நமது மொழியில் நல்ல மாணவர்களுக்கு உதாரணமாகக் காட்டப்படுவது. முதல் மாணவன் என்பதற்கு இலக்கணம் சொல்லும் போது இந்த மாட்டினையும் ஒன்றாகச் சொல்வார்கள்.

மாடு புல்லை நன்றாக மேய்ந்து பின் ஓரிடத்தில் இருந்து அசையிடுவதைப் போல  ஆசிரியர் சொல்வதை நன்றாக உள்வாங்கிப் பின் அதனை அசையிட்டுப் பார்ப்பவன் நன்மாணாக்கன் என இலக்கண நூல்கள் சொல்லும்.

Friday, 8 May 2015

காமத்தின் வரைவிலக்கணம்.


காமம் என்னும் உணர்வு எப்படிப்பட்டது என்று கேட்டால் அதனை எப்படிச் சொல்ல முடியும்? மொழியினால் கட்புலனாகாத உணர்ந்தறியக் கூடிய ஒன்றை எந்த அளவிற்குக் காட்சிப்படுத்த முடியும்…? நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் நம் சங்க அக இலக்கியங்கள் அதனைக் காட்டப் பெரிதும் முயன்றிருக்கின்றன. இந்தப் பதிவு காமத்தைச் சங்கப் புலவர்கள் சொற்களால் எவ்வாறு வரையறுக்க முயன்றிருக்கிறார்கள் என்பதை ஒட்டிய சங்க இலக்கியப் பதிவுகளின் தொடர்ச்சியாய் அமைகிறது.

Saturday, 25 April 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?



“ கண்ணைத் திறந்து கொண்டே யாராவது குழியில் விழுவார்களா?” தன் மனக்குமுறலைக் கொட்டிய அவனிடம் நண்பன் கேட்ட கேள்வி இது.

”கண் என்று ஒன்று இருந்ததால்தான் எனக்கு இப்படி ஆனது! அது இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்” எனப் பதிலளிக்கிறான் அவன்.

“யாரோ ஒருத்தியைப் பார்த்தேன். பார்த்த உடனே அவள்மேல் காதல் வயப்பட்டேன் என்கிறாயே..! உன்னுடைய அறிவு எங்கே போயிற்று?
கண்போகிற இடத்தில் எல்லாம் போக விடாமல் அதைத் தடுத்து, நன்மை எதுவோ அந்த வழியில் போகச் செய்யத்தானே அறிவு?

Saturday, 18 April 2015

குழியில் விழுந்த கொம்பன்.



தன் கூட்டத்தை விட்டுத் தனியே பிரிந்து, மீண்டும் தன் இனத்தைத் தேடிச் செல்கிறது கொம்பன்.
தனிமையின் பதற்றத்தை உறவின் அண்மையால் அதற்கு  ஆற்ற வேண்டி இருக்கிறது.

Sunday, 12 April 2015

புற்றைவிட வேகமாகப் பரவுவதா இந்நோய்?



அறிவைப் பெருக்கும் வழிகள் என்னும் பதிவில் என்னடா திடீரென்று தத்துவக் காற்று அடித்தது என்று அதைப்படித்தவர்கள்  ஐயுற்றிருக்கலாம். காரணம் இல்லாமல் இல்லை. மனதில் தோன்றும் உணர்வுகள் இப்படி என்றும் இன்ன தன்மையை உடையது என்றும் காட்டமுடியாதை அகம் என்று கூறுகிறார்கள். அப்புறம் எப்படி அதைக் காட்டமுடியும்? சவாலான விஷயம்தானே அது?

Tuesday, 31 March 2015

அவன் ‘ கொம்பன் ‘ ஆன கதை!


அவளைப் பார்த்த அவன் நிலையைக் காமத்தின் பத்துப் படிநிலைகளில் கண்டாயிற்று. அவன் மீண்டும் மீண்டும் அவள் இருக்கும் இடத்திற்கு வருகிறான். இருவரும் பார்க்கின்றனர். அவ்வளவுதான். கண்ணோடு கண்ணொக்க, வாய்ச்சொற்கள் எந்தப் பயனும் இல்லாத நோக்கு. எப்படிச் சொல்வது என்று அவனும், அவன் எண்ணம் அறிந்தவளாய் அவளும்  இருக்கக் காலத்தை சாட்சி வைத்து  நீளும் மௌன நாடகம்.

Saturday, 28 March 2015

காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்கள் – இது சங்க காலம்.



கண்டதும் காதல் வரும்போது அது இருவருக்கு இடையே பொருத்தம் பார்த்தா வரும்..? நிச்சயிக்கப்படும் திருமணம் என்றாலாவது ஆள் பொருத்தமோ ஜாதகப்பொருத்தமோ பார்க்க முடியும். காதலில் மனதிற்குப் பிடித்திருந்தால் போதாதா பொருத்தம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது.

Saturday, 21 March 2015

காமத்தின் பத்துப் படிநிலைகள் - இது சங்க காலம்.



அவனுக்கு ‘முருகன்‘ என்பது பெயர் என்னும் பதிவின் தொடர்ச்சி

 மலை நிறையும் குளிர்.

கணப்பாய் மாறிய உடல்.

கவலைகள் அற்று அதுவரை உறங்கிய அவளது உறக்கம் முதல் முறையாகத் தொலைவது அப்பொழுதுதான்.

இன்னொருபுறம்,

அவளது முகத்தை நினைவிற்குக் கொண்டுவர முயல்கிறான் அவன்.
மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறான்.

அவனுக்கு முதலில் தோன்றுவது அவளது அந்தப் பார்வைதான்.

முதற்பார்வையில் அந்தக் கண்கள் அவனோடு புரிந்த போர்.

Thursday, 12 March 2015

அவனுக்கு ‘முருகன் ‘ என்பது பெயர்.


அந்தக் காலத்து அகமரபில் தலைவனது பெயரையோ தலைவியது பெயரையோ சுட்டிச் சொல்லும் வழக்கம் இல்லை. அகப்பாடல்கள் எங்கும் அவர்கள் பெயரற்றே உலவுகிறார்கள்.

செவிலி, நற்றாய், பாங்கன் (தோழன்), பாங்கி ( தோழி ) இப்படிப் பொதுப்பெயர்களால் மட்டுமே அவர்கள் சுட்டப்படுகிறார்கள்.

Tuesday, 10 March 2015

திருமணத்திற்கு முன் ஒரு தேனிலவு – இது சங்க காலம்.




அவர் என்னுடன் பணியாற்றுபவர். தன் மகளுக்குப் பெரும் பொருட்செலவில் திருமணம் முடித்து வைத்திருந்தார். விடுப்பு முடிந்து பணியில் சேர வந்தததன் பின் பேச்செல்லாம் மருமகனைப் பற்றியும் திருமணம் பற்றியுமாய்த்தான் இருந்தது.

அடுத்து மணமக்களுக்கு ஹனிமூன் ஏற்பாடு செய்ய  வேண்டும் ஊட்டி கொடைக்கானல் என்று போனால் நல்லாயிருக்காது என்றார். வேறெங்கு அனுப்பலாம் என்று கேட்டார்.

ஒருவர் மூனாறு என்றார். இன்னொருவர் டாப்சிலிப் நன்றாக இருக்கும். ரிசாட் எல்லாம் இருக்கிறது என்றார்.

மணவை ஜேம்ஸ் அய்யா, தடாலடியாக “ அப்பப் பேசாம சுவிட்சர்லாந்த் அனுப்பி வைச்சுருங்களேன் சார் “ என்று போட்டார் ஒரு போடு.

Friday, 6 March 2015

அவன் - அவள் - ‘ அது ‘ -- இது சங்க காலம்.


அவள் பின்னே பலமுறை அலைந்தவன் அவன்.
அவள் அன்பைப் பெறுவதற்காகப் பலநாள் காத்திருந்தவன்.
நாளடைவில் அவள் மனம் கனிகிறது.
அவளும் அவன்மேல் அன்பு கொள்கிறாள்.
சாட்சிகள் எவரும் இன்றி யாருமற்ற தனிமையில் அவளை அவன் திருமணம் செய்து கொள்கிறான்.
“இதேபோல் ஒருநாள் உன்னைப் பெண்கேட்டு வந்து உன் உற்றாரும்  பெற்றோரும் சூழத் திருமணம்செய்து கொள்வேன்“ என்று உறுதி கூறுகிறான் .