Showing posts with label சங்க இலக்கியம். Show all posts
Showing posts with label சங்க இலக்கியம். Show all posts
Wednesday, 3 May 2017
Sunday, 9 April 2017
கொலை தூண்டும் கற்கள்!
குறிச்சொற்கள் :
சங்க இலக்கியம்,
மொழி,
வரலாறு,
வாசிப்பு
Wednesday, 7 October 2015
கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.
சித்ரா அக்கா எங்கள் தெருவின் தேர்ந்த கதைசொல்லி.
நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே அவருக்கு வயது முப்பதற்கு மேல் இருந்திருக்க
வேண்டும். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செய்து கொள்ளவில்லை என்பதை விட அவரையாரும்
திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மையென இப்போது தோன்றுகிறது. ஒடிசலான உடல்வாகு. கருப்பென்றாலும்
களைமிகுந்த கண்கள்.
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
சங்க இலக்கியம்,
விளையாட்டு
Friday, 31 July 2015
ஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.
‘ஆனந்த
யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன்.
இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்து இட்டதில்லை. ஆனால் இந்தப்பாடலின் கருத்தோட்டம்
தடைபட்டுவிடக் கூடாது என்பதால் தொடர்ந்து இடவேண்டியதாயிற்று. இப்பதிவுடன் அவ்வளவுதான்
இப்பாடலின் பொருள் வேட்டை என்னளவில் நிறைவுற்றது.
Tuesday, 28 July 2015
ஒரு பாடலும் சில அர்த்தங்களும்.
மணமாகிச் சில நாட்களிலேயே அவனைப் பிரிய வேண்டிய நிர்பந்தம். அவளுக்கு அவனைப் பிரிய மனமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அப்படி.. இங்கிருந்து நாம் சேர்க்கும் பொருள் வாய்க்கும் வயிற்றிற்குமே போதாது. மழைதொடங்கும் காலத்திற்குள் நாம் வாழக் கொஞ்சம் பொருள் திரட்டி வந்துவிடுவேன் என்கிறான் அவன். அவளுக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. பொருள் என்ன பெரிய பொருள்? அவனுடன் இருப்பதைவிட வேறென்ன தனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியும்?
Sunday, 26 July 2015
ஒரு பாடலும் சில நினைவுகளும்.
குறிச்சொற்கள் :
அனுபவம்,
ஆய்வு,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Sunday, 19 July 2015
தோசையின் வரலாறு.
குறிச்சொற்கள் :
அனுபவம்,
ஆய்வு,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Sunday, 28 June 2015
வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றவனின் வேதனை அனுபவம்!
சுற்றுலாவிற்கென அயல்நாடு செல்லுதலைப் போன்றதன்று பணம் சம்பாதிக்க
அயல்நாடு செல்லுதல். அதுவும் திருமணம் ஆன புதிதில் மனைவியை விட்டுச் செல்லுதல்
என்பது இன்னும் கடினம். மனைவியைப் பிரிந்து பொருள் தேடி வேற்று நாட்டிற்குச் சென்றவனின் வேதனைகள் பல நாம்
அறிந்ததும் அனுபவித்ததுமாக இன்று இருக்கலாம். ஆனால் நான் சொல்லப்போவது தோராயமாக இரண்டாயிரம்
ஆண்டிற்கு முன் வாழந்தவனின் அனுபவம்.
Tuesday, 23 June 2015
காதலுக்குப் பலியான தோழி!
Friday, 15 May 2015
கிழட்டுப்பசுவும் இளம்புல்லும்: காமத்தின் வரைவிலக்கணம் (2)
மாடு நமது மொழியில் நல்ல மாணவர்களுக்கு உதாரணமாகக்
காட்டப்படுவது. முதல் மாணவன் என்பதற்கு இலக்கணம் சொல்லும் போது இந்த மாட்டினையும் ஒன்றாகச்
சொல்வார்கள்.
மாடு புல்லை நன்றாக மேய்ந்து பின் ஓரிடத்தில்
இருந்து அசையிடுவதைப் போல ஆசிரியர் சொல்வதை நன்றாக உள்வாங்கிப் பின்
அதனை அசையிட்டுப் பார்ப்பவன் நன்மாணாக்கன் என இலக்கண நூல்கள் சொல்லும்.
Friday, 8 May 2015
காமத்தின் வரைவிலக்கணம்.
காமம்
என்னும் உணர்வு எப்படிப்பட்டது என்று கேட்டால் அதனை எப்படிச் சொல்ல முடியும்? மொழியினால்
கட்புலனாகாத உணர்ந்தறியக் கூடிய ஒன்றை எந்த அளவிற்குக் காட்சிப்படுத்த முடியும்…? நாம்
ஏற்கனவே பார்த்ததுபோல் நம் சங்க அக இலக்கியங்கள் அதனைக் காட்டப் பெரிதும் முயன்றிருக்கின்றன. இந்தப் பதிவு காமத்தைச் சங்கப் புலவர்கள் சொற்களால் எவ்வாறு வரையறுக்க முயன்றிருக்கிறார்கள் என்பதை ஒட்டிய சங்க இலக்கியப் பதிவுகளின் தொடர்ச்சியாய் அமைகிறது.
Saturday, 25 April 2015
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?
“ கண்ணைத்
திறந்து கொண்டே யாராவது குழியில் விழுவார்களா?” தன் மனக்குமுறலைக் கொட்டிய அவனிடம்
நண்பன் கேட்ட கேள்வி இது.
”கண்
என்று ஒன்று இருந்ததால்தான் எனக்கு இப்படி ஆனது! அது இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவோ
நன்றாயிருக்கும்” எனப் பதிலளிக்கிறான் அவன்.
“யாரோ
ஒருத்தியைப் பார்த்தேன். பார்த்த உடனே அவள்மேல் காதல் வயப்பட்டேன் என்கிறாயே..! உன்னுடைய
அறிவு எங்கே போயிற்று?
கண்போகிற
இடத்தில் எல்லாம் போக விடாமல் அதைத் தடுத்து, நன்மை எதுவோ அந்த வழியில் போகச் செய்யத்தானே
அறிவு?
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Saturday, 18 April 2015
குழியில் விழுந்த கொம்பன்.
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Sunday, 12 April 2015
புற்றைவிட வேகமாகப் பரவுவதா இந்நோய்?
அறிவைப் பெருக்கும் வழிகள் என்னும் பதிவில் என்னடா திடீரென்று தத்துவக் காற்று அடித்தது என்று அதைப்படித்தவர்கள் ஐயுற்றிருக்கலாம். காரணம் இல்லாமல் இல்லை. மனதில் தோன்றும் உணர்வுகள் இப்படி என்றும்
இன்ன தன்மையை உடையது என்றும் காட்டமுடியாதை அகம் என்று கூறுகிறார்கள். அப்புறம் எப்படி
அதைக் காட்டமுடியும்? சவாலான விஷயம்தானே அது?
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Tuesday, 31 March 2015
அவன் ‘ கொம்பன் ‘ ஆன கதை!
அவளைப்
பார்த்த அவன் நிலையைக் காமத்தின் பத்துப் படிநிலைகளில் கண்டாயிற்று. அவன் மீண்டும்
மீண்டும் அவள் இருக்கும் இடத்திற்கு வருகிறான். இருவரும் பார்க்கின்றனர். அவ்வளவுதான்.
கண்ணோடு கண்ணொக்க, வாய்ச்சொற்கள் எந்தப் பயனும் இல்லாத நோக்கு. எப்படிச் சொல்வது என்று
அவனும், அவன் எண்ணம் அறிந்தவளாய் அவளும் இருக்கக்
காலத்தை சாட்சி வைத்து நீளும் மௌன நாடகம்.
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Saturday, 28 March 2015
காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்கள் – இது சங்க காலம்.
Saturday, 21 March 2015
காமத்தின் பத்துப் படிநிலைகள் - இது சங்க காலம்.
மலை நிறையும் குளிர்.
கணப்பாய் மாறிய உடல்.
கவலைகள் அற்று அதுவரை உறங்கிய அவளது உறக்கம்
முதல் முறையாகத் தொலைவது அப்பொழுதுதான்.
இன்னொருபுறம்,
அவளது முகத்தை நினைவிற்குக் கொண்டுவர முயல்கிறான்
அவன்.
மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறான்.
அவனுக்கு முதலில் தோன்றுவது அவளது அந்தப் பார்வைதான்.
முதற்பார்வையில் அந்தக் கண்கள் அவனோடு புரிந்த
போர்.
Thursday, 12 March 2015
அவனுக்கு ‘முருகன் ‘ என்பது பெயர்.
குறிச்சொற்கள் :
ஆய்வு,
இலக்கணம்,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Tuesday, 10 March 2015
திருமணத்திற்கு முன் ஒரு தேனிலவு – இது சங்க காலம்.
அவர்
என்னுடன் பணியாற்றுபவர். தன் மகளுக்குப் பெரும் பொருட்செலவில் திருமணம் முடித்து வைத்திருந்தார்.
விடுப்பு முடிந்து பணியில் சேர வந்தததன் பின் பேச்செல்லாம் மருமகனைப் பற்றியும் திருமணம்
பற்றியுமாய்த்தான் இருந்தது.
அடுத்து
மணமக்களுக்கு ஹனிமூன் ஏற்பாடு செய்ய வேண்டும்
ஊட்டி கொடைக்கானல் என்று போனால் நல்லாயிருக்காது என்றார். வேறெங்கு அனுப்பலாம் என்று
கேட்டார்.
ஒருவர்
மூனாறு என்றார். இன்னொருவர் டாப்சிலிப் நன்றாக இருக்கும். ரிசாட் எல்லாம் இருக்கிறது
என்றார்.
மணவை
ஜேம்ஸ் அய்யா, தடாலடியாக “ அப்பப் பேசாம சுவிட்சர்லாந்த் அனுப்பி வைச்சுருங்களேன் சார்
“ என்று போட்டார் ஒரு போடு.
குறிச்சொற்கள் :
ஆய்வு,
இலக்கியம்,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Friday, 6 March 2015
அவன் - அவள் - ‘ அது ‘ -- இது சங்க காலம்.
அவள்
பின்னே பலமுறை அலைந்தவன் அவன்.
அவள்
அன்பைப் பெறுவதற்காகப் பலநாள் காத்திருந்தவன்.
நாளடைவில்
அவள் மனம் கனிகிறது.
அவளும்
அவன்மேல் அன்பு கொள்கிறாள்.
சாட்சிகள்
எவரும் இன்றி யாருமற்ற தனிமையில் அவளை அவன் திருமணம் செய்து கொள்கிறான்.
“இதேபோல்
ஒருநாள் உன்னைப் பெண்கேட்டு வந்து உன் உற்றாரும் பெற்றோரும் சூழத் திருமணம்செய்து கொள்வேன்“ என்று
உறுதி கூறுகிறான் .
Subscribe to:
Posts (Atom)








