Saturday 30 May 2015

அளப்பதற்கு இது கதையல்ல!-உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.(8)


சென்ற பதிவு ஒரு கேள்வியோடு முடிந்திருந்தது. அதற்கான விடை எளிதானதுதான். இதெல்லாம் ஒரு கேள்வியா இதற்குப் பதில் வேறு சொல்ல வேண்டுமா எனப் பலரும் நினைத்திருக்கலாம்.

கேட்டுச் சிலநாள் ஆனதால், கேள்வியை மீண்டும் நினைவு படுத்திக் கொள்கிறேன்.

Monday 25 May 2015

நொடிப்பொழுதில் என்ன நடக்கிறது?; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.(7)


இந்தப் பதிவை நீங்கள் படிக்க நொடிப்பொழுதிற்குச் சற்று அதிக நேரம் ஆகலாம். ஆனாலும் இங்குப் பகிரப் போவது நொடியின் அளவில் என்ன நடக்கிறது என்பது குறித்தே..!

Friday 22 May 2015

நாட்டு மருத்துவத்தின் நான்கு கூறுகள்: இவை இப்போதும் பொருந்தும்!


நவீன மருத்துவம் எவ்வளவுதான் வந்தாலும் இந்த நான்கு கூறுகளும் இல்லாமல் உலகில் எந்த மருத்துவமும்  எப்போதும் இருந்ததில்லை. வீட்டில் விஷம் செய்வதற்கான குறிப்பு என்ற சென்ற பதிவின் தொடர்ச்சிதான் இந்தப் பதிவு என்பதால் அந்தப் பதிவைப் பார்க்காதவர்கள் அதைப் படித்துவிட்டு இந்தப் பதிவைத்  தொடர்வது புரிதலுக்கு உதவும்.

Thursday 21 May 2015

13 ஆம் நூற்றாண்டின் வீட்டில் விஷம் செய்வதற்கான குறிப்பு.


முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இதை நீங்கள் இப்போதே செய்து பார்க்க முடியும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. இது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட குறிப்புத்தான்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

Wednesday 20 May 2015

பகவானின் பொருள் தெரியுமா ஜி ?


வெகுகாலமாக நாம் நினைவில் பதிந்து வைத்திருக்கிற அல்லது கற்றிருக்கின்ற ஒன்று தவறென்று அறியும் போதோ அல்லது அது பற்றிய கூடுதல் செய்தி ஒன்றை அறியும் போதோ  மனம் அடையும் உற்சாகம் பல நேரங்களில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

Tuesday 19 May 2015

ஈறு கெடுவது எப்படி ?: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்- (6)


மொழியைக் கற்பிக்கும்போது குறிப்பாக இலக்கண வகுப்புகளில் பல சுருக்கு வழிகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. புரிந்துகொள்வதில் மாணவருக்குச் சிரமம் இருக்கும் போதோ ( புரியும்படி ஆசிரியருக்குச் சொல்லித்தர முடியவில்லை என்பதுதான் இதில் உண்மை ), அரிதான தருணங்களில் ஆசிரியருக்கே அவ்விடயம் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கும் போதோ இந்தச் சுருக்குவழிகள் கை கொடுக்கும்.
அப்படி ஒரு சுருக்கு வழிதான்,

Friday 15 May 2015

கிழட்டுப்பசுவும் இளம்புல்லும்: காமத்தின் வரைவிலக்கணம் (2)



மாடு நமது மொழியில் நல்ல மாணவர்களுக்கு உதாரணமாகக் காட்டப்படுவது. முதல் மாணவன் என்பதற்கு இலக்கணம் சொல்லும் போது இந்த மாட்டினையும் ஒன்றாகச் சொல்வார்கள்.

மாடு புல்லை நன்றாக மேய்ந்து பின் ஓரிடத்தில் இருந்து அசையிடுவதைப் போல  ஆசிரியர் சொல்வதை நன்றாக உள்வாங்கிப் பின் அதனை அசையிட்டுப் பார்ப்பவன் நன்மாணாக்கன் என இலக்கண நூல்கள் சொல்லும்.

Wednesday 13 May 2015

உலகாயதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்.


கடவுள் இருக்கிறான் என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அதே அளவிற்குக் கடவுள் இல்லை என்ற கொள்கையுடன் அதை எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல், மிகுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் முழங்கிய கூட்டமும் பழங்காலத்தில் நம் மத்தியில் இருந்தது.

Sunday 10 May 2015

காத்திருப்பின் நீட்சி...!




நாடகங்கள் தொடர்வதுவும் யாருமறி யாமல்
    நாம்நடித்துக் கொள்வதுவும் மேடைகளும் இன்றி
வீடகத்தும் வெளிப்புறத்தும் வீதிநெடு கெங்கும்
     விரட்டுகின்ற ஞாபகத்தின் வேதனைக ளோடு

Friday 8 May 2015

காமத்தின் வரைவிலக்கணம்.


காமம் என்னும் உணர்வு எப்படிப்பட்டது என்று கேட்டால் அதனை எப்படிச் சொல்ல முடியும்? மொழியினால் கட்புலனாகாத உணர்ந்தறியக் கூடிய ஒன்றை எந்த அளவிற்குக் காட்சிப்படுத்த முடியும்…? நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் நம் சங்க அக இலக்கியங்கள் அதனைக் காட்டப் பெரிதும் முயன்றிருக்கின்றன. இந்தப் பதிவு காமத்தைச் சங்கப் புலவர்கள் சொற்களால் எவ்வாறு வரையறுக்க முயன்றிருக்கிறார்கள் என்பதை ஒட்டிய சங்க இலக்கியப் பதிவுகளின் தொடர்ச்சியாய் அமைகிறது.

Monday 4 May 2015

பிசாசு வகைகள்; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.- (5)


புது வீடு

இந்த இரண்டு சொற்களையும் பாருங்கள்.
இரண்டு சொற்களும் உ என்பதில் முடிகின்றன.
உ ஊ ஒ ஓ ஆகிய நான்கு எழுத்துகளையும் உச்சரிக்கும் போது இதழ் குவிய வேண்டும் என்று சொல்கின்றன நம் இலக்கணங்கள்.

இந்த எழுத்துகளைச் சொல்லும் போது இதழ்கள் குவிகின்றன தானே?
ஆம். எழுத்துகளின் பிறப்பிலக்கணப்படி இங்கு இதழ்கள் குவியத்தான் வேண்டும்.

Saturday 2 May 2015

நூறாவது பதிவும் கலைந்த கனவுகளும்.


பதிவர் பின்னூட்டம், பிளாகர், என்கிற சொற்களை எல்லாம் சென்ற ஆண்டில் இதே நாள் நான் அறிந்திருக்கவில்லை. வாசகன் என்ற நிலையில் சில கடிதங்களை நூலாசிரியர்களுக்கு எழுதி இருக்கிறேனே தவிர, கட்டுரை என்றும், கருத்துகள் என்றும் பெரிதாய் எதுவும் எழுதியவனில்லை. மொழியின் மாயச்சுழலுக்குள் விழுந்து போய், காலங்களை வாசிப்பினால் மிதித்துக் கடந்த தருணங்கள்தான் சென்ற ஆண்டிற்கு முன்புவரை. அவ்வாசிப்பு ஒரு போதையைப்போல முற்றிலும் எனக்கானது என்பதைத் தவிர எந்தப் பயன்பாட்டுடைமை நோக்கத்தையும் கொண்டதன்று.

Friday 1 May 2015

தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசியல் ; உங்களுக்குத் தெரியுமா?




அருள்திரு இராபர்ட் கால்டுவெல்

தமிழ் என்னும் மொழி சமஸ்கிருதம் என்னும் மொழியில் இருந்து தனித்து இயங்க இயலாது. அது சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு உட்பட்ட மொழியே என்ற சிந்தனை தமிழ்ப்பண்டிதர்களிடையே  இலக்கணவாதிகளிடையே வலிமை பெற்றிருந்த பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம்.

ஆட்சிப்பணிக்காகவும், மதம்பரப்புவதற்காகவும் வந்த ஐரோப்பியர்களுக்குத் தங்கள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைக் கொண்டாடவும் அதில் ஆய்வுகள் மேற்கொள்ளவுமான காரணங்கள் அதிகம் இருந்தன. சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்த மொழிகளே பிற இந்திய மொழிகள் என்கிற  பார்வை, சமஸ்கிருதப் பண்டிதர்கள் வழியாகவும் இந்திய மொழிகளை ஆராய்ந்த அயல்நாட்டினர் வழியாகவும் ஐரோப்பாவெங்கும் பரவி இருந்தது.