Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Tuesday, 25 October 2016

ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்


ஆசீவகர் பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது? என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.

Wednesday, 19 October 2016

ஆசீவகம். – காமம் எப்படித் தோன்றுகிறது?



ஆரியர்களின் வருகைக்குமுன் இந்தியப்பெருநிலத்தில் இருந்த சமயங்கள் மூன்று. அவை, ஆசீவகம், சமணம், பௌத்தம் என்பன.

Wednesday, 12 October 2016

சமணம் – சில அனுபவங்கள்..!



தமிழகத்தில் வழக்கிலிருந்த தொல்சமயங்களைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆவல் எனக்கு இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தபோது தோன்றியது.

Saturday, 8 October 2016

சமணம் – 7. தெய்வமாவது எப்படி?



மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சமணம் பற்றிய இத்தொடர் இடுகை அதன் நிறைவுப் பகுதிக்கு வருகிறது.

Tuesday, 15 December 2015

சமணம் – 6; குளிரும் சூரியனும் கொதிக்கும் வெண்ணிலாவும்!



சமணம் பற்றிய தொடர்பதிவின் ஐந்தாம் பகுதியை எழுதி ஐந்து மாதத்திற்குப் பிறகு இதன் தொடச்சியை எழுதுவதால் ஒரு பருந்துப்பார்வையில் இதற்கு முன் சமணம் பற்றிய இடுகைகளில் கூறப்பட்ட செய்திகளைத் தொகுத்துப் பார்த்துவிடலாம்.

Tuesday, 21 July 2015

சமணம் ( 5 ) – தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?



உலகத்தின் தோற்றத்திற்கு அணுக்கள் ஒன்றிணைந்து அதனோடு, காலம் ஆகாயம் எனுமிவை சேரவேண்டும் என்றும் அதே நேரம் இவையன்றி வேறு சிலவும் வேண்டுமென்பது சமணர் கருத்து என்றும் சமணம் பற்றிய சென்ற பதிவில் முடித்திருந்தோம்.

இப்பதிவு அணுக்கள், காலம் ஆகாயம் என்பதோடு உலகின் தோற்றத்திற்குச் சமணம் சொல்லும் மேலும் இரு கூறுகளைப் பற்றியது. 

Tuesday, 7 July 2015

சமணம் (4) – கடவுளின் துகள்.


உயிர்கள் எப்படி உருவாயின? உலகத்தைப் படைத்தவர் யார்.. என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்குக் கடவுள் என்று ஒருவன் இருக்கிறான். அவன் நம்மையும் இந்த உலகத்தையும் படைத்தான் என்று சொல்வது  எவ்வளவு எளிதானது...!

இந்த உலகம் எப்படித் தோன்றியது?

கடவுள் படைத்தார்.

உயிர்கள் எப்படித் தோன்றின?

கடவுள் படைத்தார்.

Friday, 3 July 2015

சமணம்-(3): இந்த உலகம் எப்படித் தோன்றியது;எப்படி அழியும்?


பெரிய விளையாட்டரங்கத்தைச் சுற்றி ஓடுவதைப் பார்த்திருப்போம். அம்மைதானத்தை ஒரு சுற்று சுற்றுவது என்பது, எங்கு ஓடத்தொடங்கினோமோ அங்கு வந்து முடிவது என்பதுதானே? 

Monday, 8 June 2015

சமணம் (2) – கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் உண்டு!


உயிரின் பெருக்கமும் சுருக்கமும் பற்றிச் சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்கான  சமணரின் விளக்கத்துடன் இப்பதிவைத் தொடர்வோம்.

Wednesday, 3 June 2015

சமணம் – உயிரின் எடை.



ஒருகாலத்தில் கல்வியையும் மருத்துவத்தையும் இருகைகளில் ஏந்தி, உயிர்களை அன்பு செய்யுங்கள் என்ற கோட்பாட்டைத் தலையில் சுமந்து நாடெங்கும் அலைந்தவர்கள் சமணர்கள்.
அகிம்சை என்றால் உயிர்களைக் கொல்லாமை என்று நாம் கூறுகிறோம்.
சமணர்களின் கருத்துப்படி உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் அகிம்சை அல்ல. அவ்வுயிருக்கு நன்மை செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.

Wednesday, 13 May 2015

உலகாயதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்.


கடவுள் இருக்கிறான் என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அதே அளவிற்குக் கடவுள் இல்லை என்ற கொள்கையுடன் அதை எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல், மிகுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் முழங்கிய கூட்டமும் பழங்காலத்தில் நம் மத்தியில் இருந்தது.

Monday, 6 April 2015

அறிவைப் பெருக்கும் வழிகள் ஆறு.

பண்டைய நூல்களை வாசிக்கும்போது சில சொற்களுக்குப் பொருள் காண்பதோ கண்டவர் வாய்க் கேட்டறிவதோ மிகக் கடினமாக உள்ளது. உரை எழுதியவன் போகிற போக்கில் அருத்தாபத்தி என்பான்... அனுமானப் பிரமாணம் என்பான். அன்றைய காலத்தில் அது புரிந்திருக்கும். ஆனால் இன்று.........?!

என் புரிதலுக்காக இவற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தபோது இவை மனிதனின் அறிவைப் பெருக்கும் வாயில்கள் எனப்பட்டதும் இவற்றின் மூலமாகத்தான் அவன் அறிவைப் பெறுகிறான் என்பதும் தெரியவந்தது. தமிழில் அவை அளவைகள் எனப்படுகின்றன. அளவைகள் என்றால்........... அறிவை அளக்கும் அளவைகள். அறிவை அளந்து நாம் பெற்றுக் கொள்ள உதவும் அளவைகள்.