tag:blogger.com,1999:blog-5838387952160133129.post676366403285295020..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்கள் – இது சங்க காலம்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5180605743683507642023-03-15T13:03:53.389+05:302023-03-15T13:03:53.389+05:30திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்? | Thiruma...<a href="https://puthiyathagaval.com/thirumana-porutham-in-tamil/" rel="nofollow">திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்? | Thirumana Porutham in Tamil</a>Aradhyahttps://www.blogger.com/profile/08732642558033708261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54200448026081249412015-04-05T14:11:05.433+05:302015-04-05T14:11:05.433+05:30பித்துக்கண் சித்தத்தில் தித்திக்கும் வித்துக்குள்
...பித்துக்கண் சித்தத்தில் தித்திக்கும் வித்துக்குள்<br />மொத்தக்கா டுற்றுத்தீ பற்றுங்கால் - பத்துப்பா<br />டற்றுப்போம் முத்தத்தில் ஒற்றும்போ திற்றுந்தேன்<br />பற்றிச்சொல் பற்றுமிப் பாட்டு<br /><br />நன்றி அய்யா!!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38994001486634878532015-04-05T13:55:14.797+05:302015-04-05T13:55:14.797+05:30ஹ ஹ ஹா!
நன்றி அய்யா!ஹ ஹ ஹா!<br /><br />நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13552370780925848052015-04-03T00:10:35.951+05:302015-04-03T00:10:35.951+05:30" பத்துப் பொருத்தமும் ஒத்துப்போகிறதா :)))??? ..." பத்துப் பொருத்தமும் ஒத்துப்போகிறதா :)))??? "<br /><br />ஆமாம் !!! காதல் திருமணத்தில் இல்லையென்றாலும் இந்த பத்து பொருத்தங்களையும் விரும்பும் பெற்றோர் இன்னும் உள்ளனரே... !!!<br /><br />" ....சுவாரசியமாய் இருக்காது அல்லவா...? "<br /><br />ஆக சங்க இலக்கியத்திலும் மசாலா ?!!! ( நான் இம்சை அரசன் என்பது இப்போதுதான் நீங்கள் புரிந்து கொண்டீர்களே ! )<br /><br />ஆனால் சொல்லமுடியாதே:))....<br /><br />இனி வரப்போகும் டேட்டிங்கின் டேடை சொன்னால்தான் பிரச்சனை... டேட்டிங்கை பற்றி சொல்லலாம் !!!<br /><br />நன்றி<br /><br />( எல்லை மீறீயதாக தோன்றினால் பிரசுரிக்க வேண்டாம் ஜோசப். )saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56652736140995768432015-04-01T08:16:23.435+05:302015-04-01T08:16:23.435+05:30
வணக்கம்!
பத்துப் பொருத்தங்கள் பாடும் இலக்கணத்தைக...<br />வணக்கம்!<br /><br />பத்துப் பொருத்தங்கள் பாடும் இலக்கணத்தைக்<br />கொத்து மலா்கொண்டு கும்பிடுவார்! - இத்தரையில்<br />என்போன்ற நெஞ்சம் இவைஏற்கா! காதலுக்கு<br />அன்பொன்றே வேண்டும் அகத்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88639924511604713622015-03-31T19:47:31.014+05:302015-03-31T19:47:31.014+05:30நிறுத்தக் காமவாயில், அருள், உணர்வு இவை போதுமோ? இவை...நிறுத்தக் காமவாயில், அருள், உணர்வு இவை போதுமோ? இவை இருந்தால் திரு அமைந்துவிடும் என்று நினைக்கிறேன்.<br />ஆண்மையும் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் இயற்றல் ஈட்டல் காத்தல் வகுத்தல் இருவரும் சேர்ந்து செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது, இருவரும் சேர்ந்து நான்கையும் பார்த்துக் கொண்டால் போதும். <br />ஒன்றும் இரண்டும் காதலில் பார்க்கப்படுவதில்லை என்று கருதுகிறேன்.<br /><br />இல்லாமலும் சுவையாய் இருக்கும் என்கிறது இலக்கியம் - உண்மை!<br /><br />அருமை அண்ணா! த.ம.19தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87193808831236688002015-03-31T19:35:16.451+05:302015-03-31T19:35:16.451+05:30தமிழர்களின் ஆதி முதல் பெருஞ்சொத்து தொல்காப்பியம்! ...தமிழர்களின் ஆதி முதல் பெருஞ்சொத்து தொல்காப்பியம்! ஆனால், அஃது இலக்கண நூல். காதல் என்பது உணர்வு சார்ந்தது. எனவே, காதல், மணம் ஆகியவையெல்லாம் எப்படி இருக்க வேண்டும் எனக் கூறும் தகுதி இலக்கியங்களுக்குத்தான் உண்டே தவிர, தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் ஒன்றுக்கு எப்படி இருக்க முடியும்?! எனவே, தொல்காப்பியரே! எங்கள் முதலாசிரியரே! மன்னியுங்கள்! நாங்கள் இதை ஏற்க முடியாது! ;-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16308851502753283772015-03-31T18:33:23.348+05:302015-03-31T18:33:23.348+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66659717827454879322015-03-31T18:32:43.683+05:302015-03-31T18:32:43.683+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு. வே . நடனசபாபதி அவர்களே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85947666343575111752015-03-31T18:31:58.405+05:302015-03-31T18:31:58.405+05:30அம்மாடி இவ்வளவு கேள்விகளா.............?!!!
இதற்கா...அம்மாடி இவ்வளவு கேள்விகளா.............?!!!<br /><br />இதற்கான பதில்கள் நீங்கள் அறியாததா சகோதரி.!!!!<br /><br />நீங்கள் அல்லவா எம்மனோர்க்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்,!!!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br />பதிவுகளைப் படித்துக் கருத்திட்டுவிட்டேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-55718878883855047422015-03-31T18:28:06.432+05:302015-03-31T18:28:06.432+05:30அன்புச் சகோதரி,
நான் கூறியவற்றை ஒரு ஓரத்தில் வைத்த...அன்புச் சகோதரி,<br />நான் கூறியவற்றை ஒரு ஓரத்தில் வைத்துவிடுங்கள். உங்களைப் போன்றவர்கள் உள்நுழைந்து சரியா என்று பார்க்க வேண்டும். அது எல்லார்க்கும் ஆதல் அரிது. நான் கூறுவதனால் மட்டும் இதை உண்மை என ஏற்றிட வேண்டாம்.<br />சங்க இலக்கிய மகளிர் நிலை பற்றி உயரிய கருத்துகளே நிலவுகின்றன.<br />இங்கு இப்படிச் சொன்னதற்கே யாராவது ஏதேனும் கேட்பார்கள் என்று நினைத்தேன்.<br />யாரும் கேட்கவில்லை.<br />நன்னூலைத் தெரியாததில் என்ன வெட்கக் கேடு வேண்டி இருக்கிறது என்று உண்மையாகத் தெரியவில்லை.<br />இலக்கணம் என்பது நமக்குச் சுவையாகப் போதிக்கப்பட்டதில்லை.<br />கேட்கும்போதே கசப்பின் ருசியைச் செவிகளில் சேர்க்கிறது அந்த வார்த்தை.<br />இத்தனைக்கும் விதிமுறைகளைவிட அதன் பயன்பாட்டை நாம் அறிந்தே இருக்கிறோம்.<br />அன்றாட வழக்கிலிருந்தும் தற்காலச் சூழலில் இருந்தும் இலக்கணத்துள்ளும் இலக்கியத்துள்ளும் நுழைந்து பார்க்க வேண்டும்.<br /><br />இன்னும் ” கேண்மியா, சென்மியா“ க்களை ஒலித்துக் கொண்டிருக்கின்ற வகுப்பறைகளும் அதை உருபோட்டுப் படிக்கும் மாணவர்களையும் கொண்டிருக்கின்றன நம் தமிழ் வகுப்பறைகள்.<br />வாழ்க்கையிலிருந்தும் அதன் நடைமுறைகளிலிருந்தும் நாம் இலக்கணத்தைப் பிரித்து வைத்திருக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று.<br />ஆதலால், நல்ல பல நூல்களின் வாசிப்புப் பயிற்சி பெற்ற நீங்கள் நன்னூலைப் படிக்காதது ஒருபோதும் வெட்கக் கேடில்லை.<br />அதற்கான தேவை இருக்கும் போது, உங்களின் ஆர்வம் அதன்பால் திரும்பும் போது நிச்சயம் உங்களால் அதனைப் படிக்க முடியும்.<br />நன்னூலை நான் முற்றோதியவன் இல்லை.<br />ஒரு பருந்துப் பார்வையில் அதன் உள்ளீடுகளைப் பெயரளவில் நினைவில் வைத்தும் தேவையானவை எங்கிருக்கிறது என மீட்டெடுத்தும் போகின்றவன்.<br /><br />அது போதுமென்று நினைக்கிறேன்.<br /><br />தங்கள் வருகைக்கும் தொடர்கருத்துகளுக்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85955173467246554142015-03-31T04:41:48.356+05:302015-03-31T04:41:48.356+05:30சங்க காலத்தில் காதலிப்பவர்களுக்கு வேண்டிய பத்துப் ...சங்க காலத்தில் காதலிப்பவர்களுக்கு வேண்டிய பத்துப் பொருத்தங்கள் பற்றிய தங்கள் விரிவான பதிவுக்கு மிகவும் நன்றி. பத்துப் பொருத்தங்களை விடவும் தொல்காப்பியப் பாடலுக்கான முன்னுரையும் பின்னூட்டங்கள்வழி பகிரப்பட்ட பின்னுரையும் கூடுதல் தகவல் களஞ்சியம். ஆண்மையின் இருவேறு பொருள்தரும் பகுப்பாய்வு ஆள்+மை, ஆண்+மை குறித்த வேறுபாடு அறிந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68595208821386882782015-03-30T23:31:32.468+05:302015-03-30T23:31:32.468+05:30
அன்புச்சகோ,
வணக்கம். இன்று புதிய செய்திகள் பலவற்...<br />அன்புச்சகோ,<br />வணக்கம். இன்று புதிய செய்திகள் பலவற்றை அறிந்து கொண்டேன். <br />பண்டைத் திருமண நிகழ்வுகள் குறித்து விளக்கும் அகநானூறு பாடல்களை இனிதான் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்,. முடிந்தால் இதைப் பற்றி நீங்கள் எழுதிய இணைப்பைக் கொடுக்கவும்.<br />நாளும் கோளும் பார்த்துச் சொல்பவர் கணியர் என்று தெரிந்து கொண்டேன், <br />சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்றுப் பாடல்கள் இயற்றும் திறன் பெற்றிருந்தமையால் அவர்கள் நிலை அன்று மிகவும் உயர்வாக இருந்தது என்றும் பிற்காலத்தில் தான் அவர்கள் நிலை மோசமானது என்றும் இத்தனை நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்று உங்கள் பதில் விளக்கியது.<br />நன்னூல் எழுத்து சொல் இலக்கணம் மட்டுமே கூறுகிறது. பொருள் இலக்கணம் கூறவில்லை. (இது கூட இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்திருக்கிறேன்! .வெட்கக்கேடு!) <br />முலைக்கூலி பற்றி இப்போது தான் அறிந்தேன். ஆண்கள் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும். இப்போது நிலைமை தலை கீழாக அல்லவா மாறிவிட்டது?<br />முலைக்கூலி கொடுக்காமல் ஏறுதழுவும் ஆணுக்குப் பெண் கொடுக்கும் முறைமையும் தெரிந்து கொண்டேன். அகம் 90 வது பாடலை முழுமையாகப் படிக்க வேண்டும். மதிப்பிற்குரிய இ.பு.ஞானப்பிரகாசனாரின் ஏறுதழுவுதல் மேற்கத்திய பண்பாடா?. 1 <br />எனும் பதிவை வாசித்தேன். <br />துவக்கத்தில் காட்டிலிருந்த ஆநிரைகளை அடக்கியவர்கள் பின்னர் அதையே ஏறுதழுவுதல் விளையாட்டாக ஆக்கியிருக்கலாம் என்ற உங்கள் கருத்தையும் வாசித்தேன். மொத்தத்தில் புதிய செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொண்ட திருப்தி எனக்கு. <br />உங்களுக்கு என் நன்றி உரித்தாகுக!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15608754150428748612015-03-30T16:39:23.984+05:302015-03-30T16:39:23.984+05:30எட்டாவது பொருத்தமான ஒருவரிடத்து உள்ள குறைகளைப் பெர...எட்டாவது பொருத்தமான ஒருவரிடத்து உள்ள குறைகளைப் பெரிது படுத்தாது நிறைவே கண்டு செலுத்தும் அன்பு தான் மிக முக்கியமான பொருத்தம் என்பேன். அது பொருந்தாவிடில் வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமையாது என்பது திண்ணம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40382413502674295842015-03-30T12:21:55.494+05:302015-03-30T12:21:55.494+05:301.உயர்ந்த சாதி,,,,,,,,,,,, ?
2. நல்ல குடி சரியா? ந...1.உயர்ந்த சாதி,,,,,,,,,,,, ?<br />2. நல்ல குடி சரியா? நல்ல பண்புகள் ஒகே,,,,,,<br />3. இயற்றலும் ஈட்டலும் தலைவற்கு ஆளுமை. காத்தலும் வகுத்தலும் தலைவிக்கு ஆளுமை, அருமை.<br />4. இன்றைய வரை சரியே, கால மாற்றம் தெளிவு எனவே வயது உயர்ந்தது<br />5. அழகா இருப்பவர் அழகா,,,,,,,,,, புற அழகைக் கண்டு வரும் காதலா?<br />6.உண்மைக்காதல் இதில் உண்மையே,,,,,,,,,,,<br />7. இன்று வரை தொடர்கிறது.<br />8. அய்யா இது இப்ப இல்லையே, பெரிதுபடுத்தாமல் இருக்கிறார்களா?<br />9.மனதில் இருப்பதை சொல்லாமலே புரிந்துக்கொள்வது, ஆனால் சொல்லியும் புரியவில்லையே இப்போ,,,,,,,,,,<br />10.இது இப்பவும் உண்டு. சூப்பர் சோடி,,,,,,,,,,<br /><br />பொருத்தம் பார்த்துக் காதல் அமைந்து இருக்குமா ?<br />பொருத்தம் பார்த்து திருமணம் சரி, காதல்?<br />இலக்கியத்தில் இப்படி இருந்தால் சுவையாய் இருக்கும் என்கிறது இலக்கணம்.<br />இல்லாமலும் சுவையாய் இருக்கும் எனக் காட்டுகிறது இலக்கியம்.<br />அருமையான வரிகள்,<br /><br />நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் <br /> பாடல்சான்ற புலனெறி வழக்கம் <br />நாடக வழக்கு என்றால் என்ன?<br />உலகு வழக்கு என்றால் என்ன?<br />தாங்கள் பார்க்கும் கோணம் அத்துனையும் சிறப்பு,<br />புதிய செய்திகள் அறிந்துக்கொண்டேன்.<br />அத்துனையும் அருமை, <br />தொடர்ந்து என் பதிவினையும் படிக்கவும்.<br />தங்கள் மேலான கருத்தினை வேண்டி, நன்றி. வணக்கம். <br /><br /><br /><br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2112429149379918022015-03-29T21:56:36.396+05:302015-03-29T21:56:36.396+05:30அனுமதி பெற ஐந்நூறு டாலர்களை என் வங்கிக் கணக்கில் ச...அனுமதி பெற ஐந்நூறு டாலர்களை என் வங்கிக் கணக்கில் செலுத்தவும் ,முந்துபவர்களுக்கே முதலிடம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27704826329069234422015-03-29T19:40:14.846+05:302015-03-29T19:40:14.846+05:30தொல்காப்பியம் கூறும் பொருத்தங்கள் இப்படி இருந்தாலு...தொல்காப்பியம் கூறும் பொருத்தங்கள் இப்படி இருந்தாலும் சங்கப் பாடல்களின் நிலைமை வேறுமாதிரிதான் இருக்கிறது சகோதரி!<br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21974208309364174412015-03-29T19:35:57.419+05:302015-03-29T19:35:57.419+05:30அன்புச் சகோதரி,
உங்களின் மீள் வருகைக்கும் தொடர்ச்...அன்புச் சகோதரி,<br /><br />உங்களின் மீள் வருகைக்கும் தொடர்ச்சியான கேள்விகளுக்கும் முதலில் நன்றி கூறுகிறேன். ஏனெனில் இது போன்ற கேள்விகள் இன்னும் என்னைச் சிந்திக்கவும் வாசிப்பைக் கூர்மை படுத்தவும், அறியாமைகளை ஆய்ந்து தெளியவும் (குழம்பவும்) துணைபுரிவன. <br /><br />பண்டைத் திருமண நிகழ்வுகளை விளக்கப் பரவலாக எல்லோராலும் ( நானும் காட்டியிருக்கிறேன்) அகநானூற்றில் உள்ள “உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை“ ( அகம் 86 ) எனும் பாடலும் <br />“மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு<br />வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி“ ( அகம் 136 ) என்னும் பாடலும் எடுத்துக்காட்டப் படுகின்றன.<br /><br /> இவை இரண்டும் மருதத்திணைப் பாடல்கள் என்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். ஏனென்றால் கூட்டுவாழ்க்கையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு வந்த இனக்குழுவின் சடங்கில்தான் இதுபோன்ற கணியக் கூறுகள் உட்புகுந்திருக்கும் என்பதற்குச் சான்றாக இவற்றைக் கொள்ள இடமுண்டு. இவ்வளவு விரிவாக வேறு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமணத்தைக் கொண்டாடி இருப்பார்களா எனத் தெரியவில்லை. அதற்குரிய இலக்கியச்சான்றில்லை. இப்பாடல்கள் நல்ல நாளும் நேரமும் குறிக்கப்பட்டு அந்நாளில் ( மருதத்திணையில் ) திருமணம் நடந்ததை உறுதி செய்கின்றன. நாளும் கோளும் பார்த்துச் சொல்லும் கணியர் என்பார் அக்காலத்திருந்தனர். <br /><br />வைதிக மரபில் இது மேலும் விரிவு பெற்று நீங்கள் கூறியதுபோல் இன்னும் இன்னுமான கண்ணிகளைப் பெற்றிருக்கலாம். சங்க இலக்கியத்தில் இதற்குச் சான்றில்லை பின்வந்த பெரிய புராணம் போன்ற கதைகளின் வழி வாழ்வியல் கூறுகள் பலவற்றைப் புனைந்துரைக்கும் நூல்களில் இதனைத் தேடவேண்டும். தேடுகிறேன். இன்னொருபுறம் நாம் நினைப்பது போலச் சங்க கால மகளிர் நிலை அருமை பெருமை என்று பேச்சிற்கு வேண்டுமானால் சொல்லிப் புளகாங்கிதம் அடையலாம். இலக்கியத்தை வைத்துப் பார்க்கும் பொழுது அவர்களின் நிலைஎல்லாம் இன்றுள்ளதைவிடக் கொடுமைதான். அவர்கள் அச்சமும் அவநம்பிக்கையும் கொண்டவர்களாகவே பெரும்பாலான பாடல்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆணைச் சார்ந்து அவன் என்னசெய்தாலும் அவனைப் பொறுத்துப்போகும் வாழ்க்கைதான் அவர்களுடையதாய் இருக்கிறது. பெண்களில் பெரும்பான்மை இன்றும் அன்றும் துயரங்களின் சுமைதாங்கியாகவே இருந்திருக்கிறாள்.<br /><br />நன்னூல் எழுத்து மற்றும் சொல் இலக்கணம் மட்டுமே கூறிச்செல்கிறது. அது பொருளிலக்கணம் கூறவில்லை . எனவே நன்னூல் இந்த ஜாதகம் பற்றியெல்லாம் கூறவில்லை. <br /><br />அடுத்ததாய் இந்த வரதட்சிணை…………. அது இருந்தது.<br />ஆனால் அதை ஆண்கள் பெண் வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும். முலைக்கூலி என்று இது அழைக்கப்பட்டது. <br /><br />“மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி<br />இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்…..” ( அகம் 90 ) எனும் பாடல் இதனைக் குறிப்பிடுகிறது.<br /><br />ஏறுதழுவும் ஆண்மகனுக்கு இம்முலைக்கூலி பெறாமல் பெண்ணைக் கொடுக்கும் வழக்கை முல்லைக் கலி காட்டுகிறது.<br /><br />இது பற்றி மதிப்பிற்குரிய இ.பு.ஞானப்பிரகாசனாரின் <a href="http://agasivapputhamizh.blogspot.com/2015/01/is-jallikkattu-western-concept.html" rel="nofollow">ஏறுதழுவுதல் மேற்கத்திய பண்பாடா?. 1</a> <br />எனும் பதிவின் பின்னூட்டத்திலும் குறித்திருக்கிறேன்.<br />மீண்டும் என்னை எழுதத் தூண்டுகின்றமைக்கும் தொடர்கின்றமைக்கும் நன்றிகள். <br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75116659932546001732015-03-29T19:30:50.287+05:302015-03-29T19:30:50.287+05:30வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்ற...வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி சகோ!‘ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75066050989398103782015-03-29T19:30:10.568+05:302015-03-29T19:30:10.568+05:30இனி காதல் பற்றிய இலக்கணம் எழுதுவோர் கவனத்திற்கு
...இனி காதல் பற்றிய இலக்கணம் எழுதுவோர் கவனத்திற்கு<br /><br />பகவான்ஜி அவர்கள்<br />“ தோல் காப்பி யம் “ என்றொரு பெயரை உரிமை பதிவு செய்துள்ளார்.<br /><br />அவரது அனுமதி பெற்று இத்தலைப்பைப் பயன்படுத்துமாறு நூல் படைப்போர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.:))<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி பகவானே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72282065967175284932015-03-29T19:27:48.813+05:302015-03-29T19:27:48.813+05:30அதைப் பதினோராவது பொருத்தமாய்ச் சேர்த்துவிடலாம் வலி...அதைப் பதினோராவது பொருத்தமாய்ச் சேர்த்துவிடலாம் வலிப்போக்கரே..:))<br />தங்களது மீள்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வலிப்போக்கரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51362721334847327382015-03-29T19:25:54.439+05:302015-03-29T19:25:54.439+05:30வாருங்கள் அம்மா..!
காதல் திருமணமும் நிச்சயிக்கப் ப...வாருங்கள் அம்மா..!<br />காதல் திருமணமும் நிச்சயிக்கப் பட்ட திருமணமும் முறிவதற்கு இதிற் கூறப்பட்ட சில பொருத்தங்கள் இல்லாமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.<br /><br />அப்புறம் கொக்கு......<br /><br /> <br /><br /> கொக்கினுக்கு ஒழிந்த தீம்பழம் கொக்கின்<br /> கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல்<br /> தூங்குநீர்க் குட்டத்துத் துடும்என வீழும்.<br /> என்னும் நற்றிணைப்பாடல் ஒன்றிற்கு உரை எழுதிய பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், கொக்கு வந்து அமர்ந்ததால் கிளையில் இருந்து உதிர்ந்து விழுந்த பழுத்த மாம்பழம் என்று பொருள் கூறுவார்.<br /><br />தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில்,<br /><br /> “யாதன் உருபிற் கூறிற் றாயினும்<br /> பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்<br /><br />எனும் சூத்திரத்திற்கு உரை எழுத வந்த நச்சினார்க்கினியார், <br />“கொக்கினுக் கொழிந்த தீம்பழம்” என்புழியும் கொக்கினின்று மென <br />ஐந்தாவதன் பொருளாயிற்று” <br /><br />என்பார். அதாவது கொக்கில் இருந்து விழுந்த பழம்.....<br /><br />கொக்கில் இருந்து பழம் விழுமா என்று கேட்டால்............<br /><br />பண்டைய தமிழில் கொக்கு என்பதற்கே மாமரம் என்பதுதான் பொருள் :))<br />அய்யர் மாமரத்தைப் பறக்கின்ற கொக்காக்கிவிட்டார்.<br />நான் அப்படி ஏதாவது ஆக்கிவிட்டேனோ ....?????<br /><br />நீங்கள் சொன்ன கொக்கு எந்தக் கொக்கென்று தெரியவில்லை...<br />எதுவானாலும் ஆகுக. :)<br /><br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அம்மா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16926582929340955192015-03-29T19:10:59.430+05:302015-03-29T19:10:59.430+05:30அய்யா வணக்கம்.
உங்கள் கருத்தினை மதிக்கிறேன்.
தங்கள...அய்யா வணக்கம்.<br />உங்கள் கருத்தினை மதிக்கிறேன்.<br />தங்களைப் போன்ற புலமையாளர்கள் என் தளம் வருவதும் பதிவுகளைப் படிப்பதுமே எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருவதாய் இருக்கிறது.<br />மாற்றுக் கருத்துகளைக் கூறவும், நெறிப்படுத்தவும் மற்றவர்களைக் காட்டிலும் உங்களைப் போன்ற மரபு வழிக் கல்வியில் தோய்ந்த அறிஞர்களால் முடியும் என்று நான் நம்புகிறேன்.<br /><br />நான் ஆசை பற்றி அறையலுற்றவனே தவிர... சங்க இலக்கியங்களில் போதுமான அறிவோ இலக்கண நுட்பமோ போதாதவனாகத்தான் இருக்கிறேன்.<br /><br />அதிற் புலமை பெற முடியும் என்று தோன்றவில்லை. அது எனது எண்ணமும் இல்லை.<br /><br />வெகுஜன வாசிப்பிற்குத் தடையாய் இருக்கும் நம் மரபுகளை ஓரிரண்டு பேராவது அணுகவும் வாசிக்க முயலவும் செய்யும் முயற்சியே இது.<br />நீங்கள் இங்குவந்து பதியும் கருத்துகளின் ஒவ்வொரு எழுத்தின் பின்னிருக்கும் தங்களது அன்பையும் போதாமையோடு எழுதும் என்னையும் ஊக்கப்படுத்தும் உங்கள் எண்ணத்தையும் என்னால் உணர முடிகிறது.<br /><br />அதற்காக என்றென்றும் எனது நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26685872672389246982015-03-29T19:04:05.266+05:302015-03-29T19:04:05.266+05:30வாருங்கள் ஆசானே
நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கி...வாருங்கள் ஆசானே <br />நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.<br />இவற்றுள் இன்றைக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையில்லைாததைக் கழித்துவிடலாம்.<br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32011877435246767842015-03-29T18:59:34.267+05:302015-03-29T18:59:34.267+05:30தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக...தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி டிடி சார்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com