tag:blogger.com,1999:blog-5838387952160133129.post5174996548288804706..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: அந்தக் காலத்தில் காப்பி இருந்தது.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37777926225410341952014-12-01T23:45:37.379+05:302014-12-01T23:45:37.379+05:30
ஐயா வெளியிட வேண்டாம்
எட்டிபலா் - எட்டிப்பலா் எனப...<br />ஐயா வெளியிட வேண்டாம்<br /><br />எட்டிபலா் - எட்டிப்பலா் எனப் புணருமென எண்ணுகிறேன்<br />எட்டிப்பலா் என்று ஆனால் கனிச்சீா் ஆகும்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68325979425286708792014-12-01T23:42:24.245+05:302014-12-01T23:42:24.245+05:30வணக்கம்!
அடியேன் படைத்த பாடலில் முதல் அடியைக் கீழ...வணக்கம்!<br /><br />அடியேன் படைத்த பாடலில் முதல் அடியைக் கீழ் உள்ளவாரு திருத்திப் படிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.<br /><br />இனிக்கின்ற தேநீா் எனவெண்ணி வந்தேன்!<br />நினைக்கின்ற எண்ணம் நிலையோ? - பினைக்கின்ற<br />ஆக்கம் அனைத்தும் அமுதன்றோ! இவ்வலையால்<br />ஊக்கம் உறுமே உயிர்!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41697101520805192392014-11-27T19:40:30.689+05:302014-11-27T19:40:30.689+05:30வணக்கம் .. அய்யா.. எனது பெயர் ரேவதி..நான் உங்களை ஒ...வணக்கம் .. அய்யா.. எனது பெயர் ரேவதி..நான் உங்களை ஒருமுறை கணினிப் பயிலரங்கத்தில் பார்த்திருக்கிறேன். உங்களின் வலைப்பக்கத்திற்கு நீண்ட நாள்களாக வரவேண்டுமென்ற இன்றுதான் நிறைவடைந்தது..இனி என்றும் உங்கள் பதிவுகளைத் தொடர விருப்பம்.. ஆனால் உங்கள் வலைப்பக்க முகவரியைக் காப்பி அடிக்கும் வழி தேடியும் எனக்கு கிடைக்கவில்லை..தாங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் உங்கள் வலைப்பக்க முகவரியை எனக்கு சொல்வீர்களா? Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-45268445621647921952014-11-24T19:02:45.330+05:302014-11-24T19:02:45.330+05:30எந்தப் பெருந்தன்மையும் இதில் இல்லை அய்யா!
இது எங்க...எந்தப் பெருந்தன்மையும் இதில் இல்லை அய்யா!<br />இது எங்களின் தொழில்.<br />தங்களின் கருத்துகளையும் மதிக்கிறேன்.<br />மீள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-86061844733098465932014-11-24T16:34:46.120+05:302014-11-24T16:34:46.120+05:30நம்முடைய அனுமதியோடு நம் படைப்புகளை பயன்படுத்தினால்...நம்முடைய அனுமதியோடு நம் படைப்புகளை பயன்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் அது திருடப்படும்போது மனம் சஞ்சலப்படும். நீங்கள் வருத்தப்பட மாட்டேன் என்று சொல்வது உங்களுடைய பெருந்தன்மையை காட்டுகிறது. எல்லோருடைய மனமும் இம்மாதிரியான பக்குவம் அடைந்திருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா. <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23625450393398850342014-11-24T14:13:14.777+05:302014-11-24T14:13:14.777+05:30அய்யா,
சொல்லின் செல்வர் என்றொருவர் ஏற்கனவே இருப்பத...அய்யா,<br />சொல்லின் செல்வர் என்றொருவர் ஏற்கனவே இருப்பதால் சொல்வேந்தர் தாங்கள்தான்!<br />சந்தேகமென்ன?<br />உங்களின் மீள்வருகைக்கு<br />நன்றி நன்றி!<br />கலம்பகம் பாடினால் பாடும் ஆசிரியர் இறந்துவிடுவார்???????<br />எனக்குத் தெரிந்து அப்படி இல்லை அய்யா!<br />கலம்பகம் பாடியோரோ பாடப்படுபவரோ இறப்பதில்லை.<br />அது “ அறம் பாடுதல் “<br />அதற்குத் தனியே இலக்கணம் இருக்கிறது.<br />பாடினால் பாடப்படுபவன் ( யார் மேல் பாடப்படுகிறதோ அவர்) இறந்துவிடுவான் என்பது நான் அறிந்தது.<br />தன் மீது ஒரு புலவர் அறம் பாடுகிறார் என்பதை அறிந்தும் அத்தமிழுக்காக நந்திவர்மன் அதை அனுமதித்தான்.<br />நந்திக் கலம்பகம் பாடி முடிக்கப்பட்டதும் அவன் இறந்து போனான்.<br />அறம் பாடுதலுக்குக் கலம்பக இலக்கணம் வேண்டும் என்பதில்லை.<br />அதற்கிலக்கணம் தனியே இருக்கிறது.<br />நானும் முயன்றிருக்கிறேன். ( முடிவு என்ன ஆச்சு என்பது இரகசியம் )<br />நந்திவர்மன் இறந்ததும், அவனது தமிழ்ப்பற்றை நினைத்து அந்தப் புலவர் பாடியதாக,<br /><br /><br />“வானுறு மதியை அடைந்ததுன் வதனம் <br /> மறிகடல் அடைந்ததுன் கீர்த்தி<br />கானுறு புலியை அடைந்ததுன் வீரம்<br /> கற்பகம் அடைந்ததுன் கரங்கள்<br />தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்<br /> செந்தழல் புகுந்ததும் தேகம்<br />யானுமென் கலியும் எவ்விடம் புகுவேம்<br /> நந்தியே யெந்தயா பரனே“<br />என்று ஒரு பாடல் வழக்கில் இருக்கிறதால்லவா?<br />உண்மையில் அறம்பாடுதலின் முடிவு, பாட்டுடைத் தலைவனின் இறப்பிற்குக் கையறு நிலை பாடுவதாக அமைக்கப்படவேண்டும் என்ற இலக்கணத்தின் படி அமைக்கப்பட்டதே அது!<br />அடுத்து,<br />நான் குறிப்பிட வந்தது இதல்ல. <br />தம் படைப்புகளை வாழச் செய்யத் தங்களைப் பலியிட்ட கதை அறிய ஒரு பதிவு காத்திருங்கள்!<br /><br />கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் சங்க இலக்கியத்தின் கற்பனையை அப்படியே காப்பி அடித்துக் கம்பன் ஆண்டிருக்கிறான்!<br /><br />எந்த இடம் அந்த இடமென்பதற்கான விடையைக் கண்டுபிடித்தீர்களா?<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74244033636108298182014-11-24T13:59:38.317+05:302014-11-24T13:59:38.317+05:30அய்யா,
பல பதிவர்களின் பதிவுகளை விடப் பின்னூட்டங்கள...அய்யா,<br />பல பதிவர்களின் பதிவுகளை விடப் பின்னூட்டங்களைப் பார்த்து வருகிறேன்.<br />கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.<br />அநேகமாக ஒரு நாள் அவகாசம்.<br />வாக்குப்படி அடுத்த பதிவு... பின்னூட்டம் பற்றியதுதான்!<br />காப்பி கொஞ்சம் ஆறட்டும்!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54479197931065853032014-11-24T13:57:15.991+05:302014-11-24T13:57:15.991+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
என...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!<br />என்னுடைய பதிவுகள் திருடப்பட்டாலும் நிச்சயமாய் ஒரு போதும் நான் வருத்தப்பட மாட்டேன்.<br />வருத்தப்பட்டதும் இல்லை.<br />நீங்கள் ஆசானே என்று அழைத்தீர்கள் அல்லவா?<br />உண்மையில் அவனது அறிவு அவனுக்குச் சொந்தமானதில்லை.<br />அது அடுத்தவர்க்கே உரிய அவனது மூலதனம்.<br />கொடுத்தாலும் நிறைவின்றிக் குறைவுறாத ஒரே செல்வம் அதுதானே?<br />எவர் எடுத்துப் பயன்படுத்தினும் பயன்பட்டால் மகிழ்ச்சிதானே!<br />ஒரு சுவாரசியத்திற்காகவே காப்பி என்று கூறினேன் அய்யா!<br />மற்றபடி,<br />நன்னூலுக்கு முன்பே சொல்லப்பட்ட கருத்து இது என்பதையும், நூலுக்கு அழகு, குற்றம் எனச் சொல்லப்பட்டவற்றையும், முன்னோர் எடுத்து மொழிதலுக்கு வைத்திருந்த மரபையும் விளக்குதலே என் நோக்கம்!<br />//தங்களது படைப்புகளை வாழச்செய்யத் தங்களைப் பலியிட்டனர்.//"<br />உண்மையில் இது எவ்வளவு கொடுமையானது, காப்பி அடிப்பதைவிடவும் மோசமானது கேவலமானது என்பதை அறியக் காத்திருங்கள்.<br />இடையில் ஒரு பதிவு மட்டும்!<br />மணவையாருக்காக..!<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3879570890754166292014-11-24T06:26:25.060+05:302014-11-24T06:26:25.060+05:30வணக்கம் ஆசானே,
தங்களுடைய பதிவுகளை படிப்பதற்கு அவர...வணக்கம் ஆசானே,<br /><br />தங்களுடைய பதிவுகளை படிப்பதற்கு அவருக்கு பொறுமை இல்லை. அதனால் தான், தங்களின் பதிவுகள் திருடப்படாமல் பாதுக்காக்கப்பட்டிருக்கிறது. <br /><br />காப்பிக்கும் இலக்கணம் இருக்கிறது என்பதை புரிய வைத்துவிட்டீர்கள். <br /><br />"//தங்களது படைப்புகளை வாழச்செய்யத் தங்களைப் பலியிட்டனர்.//" - யூகிக்க முடியாமல் காத்திருக்கிறேன். <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79542126475228203492014-11-24T06:23:55.060+05:302014-11-24T06:23:55.060+05:30நல்ல காரியம் செய்தீர்கள் நல்ல காரியம் செய்தீர்கள் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39450225872422901572014-11-24T05:47:54.606+05:302014-11-24T05:47:54.606+05:30அய்யா வணக்கம்..!
‘சொல்வேந்தரா..?..யாரது..?.
“தான்...அய்யா வணக்கம்..! <br />‘சொல்வேந்தரா..?..யாரது..?.<br />“தான் பேசப்படாவிட்டால் கூடப் பரவாயில்லை, தன்னுடைய படைப்புகளாவது பேசப்பட வேண்டும் என்று நினைத்த அவர்கள் செய்தது வேறொன்றுமில்லை.தங்களது படைப்புகளை வாழச்செய்யத் தங்களைப் பலியிட்டனர்.”.....கலம்பகம் பாடினால்,பாடும் ஆசிரியர் இறந்துவிடுவார் என்பது, இலக்கிய உலகின் நம்பிக்கையாக அன்று இருந்தது! தான் மறைந்தாலும்,தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கட்டும் என்று, ’நந்திக்கலம்பகம்’..பாடினாரே..அதைத் தானே தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்..?!<br />மூன்றாம் நந்திவர்மன் மீது கலம்பகம் பாடிய அந்த ஆசிரியர்,தன உயிரையும் பெயரையும் அல்லவா தியாகம் செய்து, தமிழில் ‘கலம்பகம்’ என்ற புது இலக்கியவடிவம் தோன்றச் செய்திருக்கிறார்.! <br /><br />Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72254150786734673242014-11-23T22:54:25.995+05:302014-11-23T22:54:25.995+05:30அன்புள்ள அய்யா,
நான் கேட்டதற்கு...அன்புள்ள அய்யா,<br /><br /> நான் கேட்டதற்கு .பின்னூட்டம் எப்படி இருக்க வேண்டுமென தமிழ் இலக்கணம் ஏதும் சொல்லி இருக்கிறதா? உடனேயே பதில் சொல்லி விடுங்களேன்....அறிய ஆவலாக உள்ளேன்.<br /><br /> நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-84493917443802672342014-11-23T21:07:49.860+05:302014-11-23T21:07:49.860+05:30சொல் வேந்தரே வணக்கம்.
நான் பத்துக்குற்றத்துக்குப் ...சொல் வேந்தரே வணக்கம்.<br />நான் பத்துக்குற்றத்துக்குப் பொருள்விளக்கவே இல்லையே!<br />ஒரு வேளை அதனைச் சுட்டுவதற்காகத்தான் இவ்வளவு எளிமையாய்ப் பொருள் புரியும் படி (?) என்று சுட்டிச் சென்றீர்களோ?<br /><br />அப்பறம் இலக்கியத்தில் காப்பி என்பதற்கு இப்படியெல்லாம் நீங்கள் சான்றுகளைத் திரட்டி அளித்தால் நான் அடுத்த பதிவிடுவதா வேண்டாமா?<br />ம்ம்..!<br />அருமை அய்யா!<br />இவ்வளவு விஷய ஞானத்தை வைத்துக் கொண்டு ஏன் பதிவுகள் வெளியிடத் தாமதம் செய்கிறீர்களோ?<br />உங்களின் வாசிப்புப் பிரமிப்பூட்டுகிறது!<br />தங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்.<br />( நல்ல வேளை இலக்கியக் காப்பிக்காக வைச்சிருந்த நம்ம கைச்சரக்கைக் காலி பண்ணிடுவிங்களோன்னு ஒரு நிமிஷம் பயந்திட்டேன். இல்லைன்னதும் தான் நிம்மதியாச்சு.)<br />நன்றி அய்யா!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18217979814040697232014-11-23T20:11:52.861+05:302014-11-23T20:11:52.861+05:30ஆம் அய்யா!
தைரியம் வேண்டும் தான்!
அடியேன் கூறித்தா...ஆம் அய்யா!<br />தைரியம் வேண்டும் தான்!<br />அடியேன் கூறித்தான் அன்னாரைப் படிப்போரின் எண்ணிக்கைக் கூட வேண்டும் என்பதில்லை அய்யா! ( சிலர் இடித்ததாகவும் கேள்வி!!)<br />ஏற்கனவே அவரது தளம் கொடிகட்டிப் பறக்கிறது.<br />என்ன..<br />என் பதிவைப் போட்டிருந்தால் சுட்டி தந்திருப்பேன்.<br />போடாததால் என் பங்குக்கு அவரைத் தெரியாதவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்பவில்லை.<br />இந்தக் கோபம் விரைவில் தீருமா என்ன..!<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-80149170171082545562014-11-23T20:07:38.032+05:302014-11-23T20:07:38.032+05:30அய்யா,
வணக்கம். மன்னிக்க வேண்டும். ஏற்கனவே ஒரு பின...அய்யா,<br />வணக்கம். மன்னிக்க வேண்டும். ஏற்கனவே ஒரு பின்னூட்டமிட்டு அதற்குப் பதில் தராத நிலையில் மீண்டும் வந்திருக்கிறீர்கள்.<br />தங்களைத் தெரிந்தமையால் பின்பு கருத்திடலாம் என்று நினைத்தேன்.<br />தெரிந்தவர்கள் என்பதால் வரும் அலட்சியம் கொடுமையானது.<br />மீண்டும் மன்னிப்பு.<br />தண்டனையாய் ( எனக்கா..பதிவினைப் படிக்கப் போகும் உங்களுக்கா..?) காப்பியைக் கொஞ்சம் ஆற்றும் நேரத்தில் அடுத்த பதிவு,<br />பின்னூட்டம் பற்றித் தமிழ் இலக்கணம் சொல்லி இருப்பதைப் பற்றித்தான்!<br />( ஒரு பேச்சுக்காகத் தமிழ் எல்லாவற்றிற்கும் இலக்கணம் சொல்லியிருக்கிறது என்றேன் அய்யா..அதற்காக எல்லாவற்றிற்கும் வரிசை கட்டி இலக்கணம் சொல்லுங்கள் என்று கேட்டுவிடாதீர்கள்!!)<br />இனிமேல் நிச்சயமாய் நீங்கள் பின்னூட்டம் இட்ட உடனேயே பதில் சொல்லி விடுவேன்!<br />நன்றி!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41535843934023783802014-11-23T20:01:56.550+05:302014-11-23T20:01:56.550+05:30தமிழ்ப்புலமை ஒன்றுமில்லை தோழரே!
தமிழ் பேசும் எல்லா...தமிழ்ப்புலமை ஒன்றுமில்லை தோழரே!<br />தமிழ் பேசும் எல்லார்க்கும் உள்ளதுதான்!<br />என்ன இருக்கிறது என்று பார்க்கக் கொஞ்சம் கூடுதலாய்ப் படிக்கிறேன்.<br />அவ்வளவே!<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-69374738133869046102014-11-23T19:58:49.666+05:302014-11-23T19:58:49.666+05:30நன்றி அய்யா!
நானும் கற்று ஒரு மாதம் தான் இருக்கும்...நன்றி அய்யா!<br />நானும் கற்று ஒரு மாதம் தான் இருக்கும்!<br />சகோ. கிரேஸ் உதவினார்கள்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68396304711787323112014-11-23T19:46:55.101+05:302014-11-23T19:46:55.101+05:30சொல்வேந்தரே!
வணக்கம். என்ன ஒரு ஆழமான அலசல். இங்குச...சொல்வேந்தரே!<br />வணக்கம். என்ன ஒரு ஆழமான அலசல். இங்குச் சுவைக்காகக் காப்பி என்றெல்லாம் கூறியிருந்தேனே தவிர, அன்றைய இலக்கண மரபில் அது ஏற்கப்பட்ட விடயம் தான். நகலடி வேலை யல்ல.<br />எவ்விலக்கிய இலக்கண நூல்களும் சுயம்பு அல்ல. பண்டைய அறிவின் தாக்கம் அதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் சொல்வது போல் அது கருத்துத் திரட்டு. திருட்டு அல்ல.நாமெல்லாம் பெரிதும் ஆளும் உவமைகள் யாராவது ஒருவரின் கற்பனையில் உதித்ததுதானே?<br />மதிமுகம், கயல்விழி ......<br />இது முதலில் கண்டுபிடித்த ஒருவருக்குச் சொந்தமானது யாருக்குச் சொந்தமானது என்று பார்க்காமல் நாம் எடுத்தாளுவது இல்லையா?<br />அது போல் தான்.<br />காப்பியங்களில் அற நூல்களின் பாதிப்பு இருந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.<br />ஏனெனில் அறம் பொருள் இன்பம் வீடடைதல் தானே நூற்பயன்?<br />அறமில்லாவிட்டால் பொருளாலும் இன்பத்தாலும் வீடாலும் ஏது பயன்?<br />எனவே அறக்கருத்துகளை எங்கும் இருந்து வேண்டிய இடங்களில் இணைத்தல் எல்லாக் காப்பியங்களுக்கும் பொதுவாக இருக்கிறது.<br />நீதி நூல்களின் தாக்கம் இல்லாத காப்பியங்கள் இல்லை எனலாம்.<br />சரி,<br />நீங்கள் காட்டிய கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் சங்க இலக்கியத்தின் கற்பனையை அப்படியே காப்பி அடித்துக் கம்பன் ஆண்டிருக்கிறான்!<br /><br />எந்த இடம் அந்த இடம்? <br /><br />விடைகாண தங்களோடு முத்துநிலவன் அய்யாவையும் அழைக்கிறேன்!<br />தங்களின் வருகைக்கும் கருத்துமிக்க பின்னூட்டத்திற்கும் நன்றி!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36357481889769762014-11-23T19:46:34.633+05:302014-11-23T19:46:34.633+05:30உங்க எழுத்தில் ஒரு strong flavour இருக்கு அண்ணா! எ...உங்க எழுத்தில் ஒரு strong flavour இருக்கு அண்ணா! எளிமை என்பது குறைச்சலாய் இருக்கு. ஆனா தேடித்தேடி பெறவேண்டிய எழுத்து நேர்த்தி இயல்பிலேயே இருப்பது குறை இல்லை என்பதே என் கருத்து. பின்னூட்டத்தில் இப்போதெல்லாம் அந்த இலகு நடை உங்களிடம் தெரிகிறது. அப்படி நீங்கள் உங்கள் வெகு செம்மையான எழுத்துக்களை சற்று எளிமை படுத்திக்கொள்ளவேண்டும்(என் வரையில் அவசியமில்லை என நினைக்கிறேன்) என நினைத்தால் பதிவு எழுதும் போதே அதை இனியாவிற்கோ (நான் சொன்னது J.இனியா) மைதிலிக்கோ அதை சொல்வதாக நினைத்துகொள்ளுங்கள். (பாருங்க, கருத்து தானே கேட்டிங்க, இந்த டீச்சர் புத்தி போகாம, அறைகொறைய எனக்கு தெரிஞ்சதெல்லாம் உளறுகிறேன்:(( சாரி அண்ணா!<br />---------<br />ஞானப்ரகாஷ் சகா நான் சொல்ல கரெக்டா சொல்லிட்டார்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73288672850303513672014-11-23T18:55:14.216+05:302014-11-23T18:55:14.216+05:30த.ம.(10)
விஜூ, வணக்கம்.
இப்போதுதான் தமிழ்மணத்தில் ...த.ம.(10)<br />விஜூ, வணக்கம்.<br />இப்போதுதான் தமிழ்மணத்தில் வாக்களிக்கக் கற்றுக்கொண்டேன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65637634699109354492014-11-23T17:17:59.332+05:302014-11-23T17:17:59.332+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-86118493746447040742014-11-23T17:17:37.174+05:302014-11-23T17:17:37.174+05:30நல்லது முத்து நிலவன் ஐயா! நல்லது முத்து நிலவன் ஐயா! இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62298368787144360302014-11-23T17:17:17.741+05:302014-11-23T17:17:17.741+05:30//நீங்கள் அவருக்கும் ஆசான்தானே!!// - நானா! அவருக்க...//நீங்கள் அவருக்கும் ஆசான்தானே!!// - நானா! அவருக்கா! அதுவும், 'அவருக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே! அப்படியானால் இன்னும் வேறு யார் யாருக்கெல்லாம் நான் ஆசான்? ஆகா! இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லையே! இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26422522570828187132014-11-23T17:16:53.020+05:302014-11-23T17:16:53.020+05:30தங்கள் விளக்கம் படித்தேன். இப்பொழுது புரிகிறது ஐயா...தங்கள் விளக்கம் படித்தேன். இப்பொழுது புரிகிறது ஐயா! இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76268529689404006832014-11-23T17:15:48.453+05:302014-11-23T17:15:48.453+05:30ஐயா! நாங்கள் சொல்வதைத் தாங்கள் தவறாகப் புரிந்து கொ...ஐயா! நாங்கள் சொல்வதைத் தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். தங்கள் எழுத்துத்தரம் மிகவும் உயர்வானது, அப்படிப்பட்ட நகலடிச்சான் குஞ்சுகளுக்கெல்லாம் புரியக்கூடியதில்லை என்கிற பொருளில்தான் நாங்கள் இந்தக் காரணத்தைச் சுட்டினோமே தவிர, நீங்கள் கூறும் பொருளில் இல்லை!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com