tag:blogger.com,1999:blog-5838387952160133129.post512378246268407451..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32692914877728964092014-11-21T08:15:15.772+05:302014-11-21T08:15:15.772+05:30படித்ததை, படைப்பதை அடித்து விடுகிறேன்.//
ம்ம்ம் ப...படித்ததை, படைப்பதை அடித்து விடுகிறேன்.//<br /><br />ம்ம்ம் புத்தகங்களோடு வாழ்கின்றீர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளுங்களே ஆசானே! எங்களால் எல்லாம் அது முடியவில்லையே! காந்திஜி "புத்தகங்கள்தான் நண்பன்"சொன்னது போல தாங்கள் புத்தகங்களை நண்பர்களாகக் கொண்டதால் இங்கு எத்தனை நண்பர்கள், ஆர்வலர்கள்,தங்களின் எழுத்தை ரசிப்பவர்கள் என்று கூட்டம் உருவாகி இருக்கின்றது! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59000430612849554702014-11-20T06:58:39.027+05:302014-11-20T06:58:39.027+05:30உங்கள் சித்தப்பாவும் நானும் ஒத்த சிந்தனை உடையவர்கள...உங்கள் சித்தப்பாவும் நானும் ஒத்த சிந்தனை உடையவர்கள் சிவக்குமாரன். எனவே எங்களிடம் மாட்டினால் உங்கள கதி அதோ! கதிதான்... க-கம்பன், தி-திருவள்ளுவன் தானே? அப்படியெனில் சரிதான். சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7830690354595607972014-11-19T22:13:10.630+05:302014-11-19T22:13:10.630+05:30அருகதை தமிழ் பேசும் எல்லார்க்கும் இருக்கிறது அய்யா...அருகதை தமிழ் பேசும் எல்லார்க்கும் இருக்கிறது அய்யா!<br />தவறாக நினைக்க வேண்டாம். திருமுறைகளுக்கும் ஆழ்வார் பாசுரங்களுக்கும் ஓசையே பிரதானம்.<br />தெய்வ மொழி எனப்பட்ட சமஸ்கிருதத்திற்குப் போட்டியாக நிகழ்ந்த தமிழ்ப்புரட்சியே அது.<br />அதனால் தான் வைணவர்கள் பிரபந்தத்தைத் திராவிட வேதம் என்றார்கள்.<br />மந்திரத்திற்கு ஓசையின் வெளிப்பாடே பிராதனம்.<br />அதுதான் சக்தியைத் தருகிறது என்கிற நம்பிக்கை அதை எழுதியவர்களிடத்தே இருந்தது.<br />படிப்பவர்களிடத்திலே இருந்தது.<br />கேட்பவர்களிடத்திலே இருந்தது.<br />அவை ஓதப்பட்டவை.<br />கற்பிக்கப்பட்டவை அல்ல.<br />சைவமரபில் திருமுறைகளுக்குப் பொருள் எழுதக்கூடாது என்கிற எண்ணம் பலநூறாண்டுகளாகக் வேரூன்றி நின்றதற்கு அது அருளப்பட்டது, பொருளை எழுதி அதன் புனிதத்தைக் குலைத்திடக்கூடாது என்ற எண்ணம் தான் காரணம்.<br />சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தியாகராச செட்டியார் வரை இந்த எண்ணம் இருந்தது.<br />அதற்காக அவற்றுள் பொருள் இல்லை என்றல்ல.<br />மிக ஆழமான பொருள் வளம் நிறைந்தவை அவை.<br />நீச்சல் குளத்தில் பல்வேறு ஆழங்களைப் பயிற்சிபெறுவோர்க்கு<br />என அமைத்திருப்பார்களே அது போல.<br />நான் அதன் ஓசையில் விழுந்திருக்கிறேன்.<br />திருவாசகத்தின் பொருள் புரியும் முன்னே அதன் ஓசையின் வயப்பட்டு ஜி.யு. போப் விழுந்திருக்கிறான்.<br />உள்நுழைந்து பார்த்தல் அதற்கப்பறம்தான்.அது தான்கலந்து வாசிக்கும் அனுபவம் என்பார்களே அது.<br />அவரவர் ஆழத்திற்கேற்ப நீந்திக்கொள்ள வேண்டும்.<br />திருமுறைகளின் பிரபந்தங்களின் வடிவத்தை மீட்டெடுப்போமானால் இலக்கணங்கள் சொல்லாத சில அருமையான வடிவங்களை இனம் காண முடியும் என நான் கருதுகிறேன்.<br />பின் அதன் தன்மையை ஆராய்ந்து யாப்பின் ஏதேனுமோர் வடிவ சாத்தியத்தில் அதனை உள்ளடைக்கலாம்.<br />தங்களிடம் நான் வைக்கின்ற வேண்டுகோள் ஒன்று உண்டு.<br /><br />யார் சொன்னாலும் அது சரியாய் இருக்கும் என்று நினைத்துக் கூட விடாதீர்கள்.<br />ஏனெனில் அது பல நேரங்களில் நம் சிந்தனையை முடக்கிவிடும்.<br />எனது பின்னூட்டத்தில் நான் காட்டிய பாடல்கள் சித்திரக்கவி என்பதும் காளமேகப்புலவரால் இயற்றப்பட்ட்தில்லை என்பதும் என் கருத்து.<br />ஏனென்றால் ,<br />இதில் முதற்பாடல் என் பத்தாம் வகுப்பில் பாடமாய் இருந்தது.<br />நான் பெரிதும் மதிக்கும் என் ஆசிரியர்தான் இதைக் காளமேகத்தின் பாடல் எனக்கற்பித்தார். நல்ல் தமிழறிவு வாய்க்கப்பெற்றவர் அவர்.<br />பாடப்புத்தகத்திலும் அவ்வாறே இருந்தது.<br />பின் பல ஆண்டுகள் கழித்தே இது காளமேகத்தின் பாடலாய் இருக்க முடியாது என்பதை நான் தெரிந்து கொண்டேன்.அதை இப்பொழுதே நிரூபிக்கவும் முடியும்.<br />என் ஆசிரியர் கூறியது சரி என்று விட்டிருப்பேனாகில்,<br />இன்றும் தவறான புரிந்துகொள்ளலோடுதான் இருந்திருப்பேன்.<br />நான் சொல்வதெல்லாம் சரியல்ல என்ற நினைப்பில் எக்கருத்தையும், இக்கருத்தையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.யார் சொல்வதிலும் மெய்ப்பொருள் காணவேண்டுமென்துதானே குறளுணர்த்தும் பாடம்.<br />இது எல்லார்க்குமான என் வேண்டுகோள்!<br /><br />தங்களின் மீள் வருகைக்கு நன்றி அய்யா!!!!!!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64511993613334521012014-11-19T20:20:06.692+05:302014-11-19T20:20:06.692+05:30எனக்குகவிதை பற்றியும் யாப்பு பற்றியும் பேசும் அருக...எனக்குகவிதை பற்றியும் யாப்பு பற்றியும் பேசும் அருகதை இல்லை. பலரும் பொருள் தெரியாமலேயே அருணகிரியாரின் “முத்தைத்திரு” என்னும் பாடலையும் ஔவையாரின் விநாயக அகவலையும் படிக்கிறார்கள்/ஓதுகிறார்கள். பொருள் தெரிந்து வேண்டினால் நன்றாயிருக்குமே என்னும் ஆதங்கத்தில் இவ்விரு பாட்டுகளுக்கான பொருளை நான் அறிந்து பதிவாயிட்டேன். அந்தத் தேடலில் சிக்கியதே இந்தக் காது காத்த பாடல் மற்றபடி பின்னூட்டத்தைப் படித்த போது எழுந்த ஐயமே கேள்வியாயிற்று. நீங்கள் சொன்னால் சரியாய்தான் இருக்கும். நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41917559647437810672014-11-19T19:37:31.053+05:302014-11-19T19:37:31.053+05:30தொலை தூரக்கல்வி என்றெல்லாம் சொல்லி என்னைத் தொலைத்த...தொலை தூரக்கல்வி என்றெல்லாம் சொல்லி என்னைத் தொலைத்துக் கட்டிவிடாதீர்கள்.<br />நானும் தங்களைப் போலத்தான் ஆசானே!<br />பெரிய விற்பன்ன்ரெல்லாம் இ்லலை.<br />படித்ததை, படைப்பதை அடித்து விடுகிறேன். அவ்வளவே!<br />தங்களின் வருகையே மகிழ்ச்சி தானே?<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5559349134905385802014-11-19T19:30:49.583+05:302014-11-19T19:30:49.583+05:30அண்ணா,
வெண்பா இலக்கணம் இந்த அளவு முக்கியத்துவம் பெ...அண்ணா,<br />வெண்பா இலக்கணம் இந்த அளவு முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் அதுவே யாப்பின் அரிச்சுவடி.<br />அதைக் கையாள கற்றுக் கொண்ட ஒருவன் யாப்பின் சகல வடிவங்களையும் ஒருகை பார்த்து விட முடியும்.<br />புதிர் பொருளைப் பார்க்காதீர்கள் அண்ணா!<br />இது சித்திரக் கவி.<br />புதிரை விடுவிக்கும் சாவியை அது தன் உடல் மீது போர்த்தியிருக்கிறது.<br />உங்களிடமிருப்பது கிரீடங்கள் அல்ல.<br />நீங்கள் சொன்னது போல் கவசகுண்டலங்கள்.<br />அவற்றைக் கேட்க நான் கிருஷ்ண பரமாத்மா அல்ல.<br />சாதாரணனே!<br />நன்றி அண்ணா!!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68693306100729112602014-11-19T19:26:31.520+05:302014-11-19T19:26:31.520+05:30ஸ்ரீராம்,
நீங்கள் வருவதும் கருத்தொன்றைப் பதிந்து ச...ஸ்ரீராம்,<br />நீங்கள் வருவதும் கருத்தொன்றைப் பதிந்து செல்வதும் மகிழ்ச்சியே.<br />உங்களைப் போலத்தான் நானும் பலவிஷயங்களில் இருக்கிறேன்.<br />தமிழ்த்தட்டச்சுச் செய்வோரைக் கண்டு ஆறுமாதத்திற்கு முன்பு வரை நான் அதிசயித்ததுண்டு.<br />இப்பொழுது அவர்களால் என்னால் போட்டி போட முடியும்.<br />இது ஆறு மாதத்திற்குள் சாத்தியமானது.<br />இந்த அனுபவத்திலிருந்து என்னால் ஒன்றைச் சொல்லமுடியும்.<br />தமிழ் , தட்டச்சுக் கற்பதைவிடவும் எளிமையானது.<br />இனிதானதும் கூட.<br />தேவை முயற்சியும் ஆர்வமும் மட்டுமே!<br /><br />வாருங்கள் இணைந்து கற்போம்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57734316153550118072014-11-19T19:20:41.751+05:302014-11-19T19:20:41.751+05:30ஆமாம்.
அவர்கள் வார்த்தையில் வியப்பதை நாம் வெண்பாவி...ஆமாம்.<br />அவர்கள் வார்த்தையில் வியப்பதை நாம் வெண்பாவிலேயே அமைத்துவிட்டோம்.<br />அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே!!!<br />வருகைக்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11819156700738734782014-11-19T19:19:13.893+05:302014-11-19T19:19:13.893+05:30சகோதரி,
நீங்கள் சொன்னது சரிதான்.
இது அந்தச் சித்தி...சகோதரி,<br />நீங்கள் சொன்னது சரிதான்.<br />இது அந்தச் சித்திரக்கவியின் வகைதான்.<br />ஆனால் இது மாலையோ பாம்போ தேரோ இல்லை.<br />வேறு.<br />இந்த முயற்சி இருக்கிறதே அது போதும் . நீங்கள் முன்னேற!<br />அது சரி விக்கி...?!<br />அங்கே என்னவெல்லாம் கிடைக்கும்?<br />இதையெல்லாம் சொல்லி யிருப்பார்களா?<br />உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன்.<br />வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி!<br />பதில் வந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.<br />பதிலில் கண்டிப்பாய் ஒரு வியப்பு இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாய்க் கூற முடியும்!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38942735521010947202014-11-19T19:15:18.807+05:302014-11-19T19:15:18.807+05:30“சொல்லிய யாரிடத்தும் சொலல்வேண்டா! மற்றவரின்
வெல்வி...“சொல்லிய யாரிடத்தும் சொலல்வேண்டா! மற்றவரின்<br />வெல்விடை காண்போம் விரைந்து“<br /><br />சும்மா இருந்தாலும் வெண்பாவால் விளாசுகிறீர்களே அய்யா!<br />கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும்!<br /><br />வருகைக்கு நன்றி மணவையாரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37233043362447653262014-11-19T19:12:22.042+05:302014-11-19T19:12:22.042+05:30அய்யா,
வணக்கம். தங்களை விட வயதிலும் பதிவனுபவத்திலு...அய்யா,<br />வணக்கம். தங்களை விட வயதிலும் பதிவனுபவத்திலும் மிக இளயவன்நான்.<br />உங்கள் பதிவில் நீங்கள் காட்டிய பாடலை நான் கண்டதில்லை.<br />தங்கள் தளம் வருவதும் தொடர்வதும் தற்பொழுதே!<br />இது மதுரகவி இல்லை அய்யா!<br />மணவையாரின் கேள்விக்குப் பதிலாய் நான் இட்டிருந்த தொடர்புடையது இது. இது சித்திரக்கவி.<br />இலக்கணத்தில் இது “ ஓரினத்தெழுத்தால் உயர்ந்த பாட்டு“ என வகைப்படுத்தப்படுவது.<br />காளமேகப் புலவரால் இயற்றப்பட்டதாய்ப் பெரிதும் சொல்லப்படுகின்ற, அவரது காலத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் இலக்கண நூலில் சான்று காட்டப்பட்ட<br /><br />“"காக்கைக்காகாகூகை கூகைக்காகாகாக்கை<br />கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்<br />காக்கைக்குக் கைக்கைகா கா!"<br /><br />என்னும் பாடலும்<br /><br />“தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி<br />துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி<br />தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த<br />தெத்தாதோ தித்தித்த தாது“<br /><br />எனும் இருபாடல்களுமே இந்தச் சித்திரக்கவிதையின் பால் அடங்குபவை.<br />பொருளைவிட வடிவத்திற்காய்ப் பேசப்படுபவை.<br />தங்களின் மறு வருகைக்கு நன்றி!!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-31238123650840813172014-11-19T18:53:54.665+05:302014-11-19T18:53:54.665+05:30அதைத் தங்களைப் போன்றோர்தான் இது போன்ற விவாதங்களால்...அதைத் தங்களைப் போன்றோர்தான் இது போன்ற விவாதங்களால் சரிசெய்ய வேண்டும். <br />இலக்கியத்திற்கு இலக்கணங்களை உருவாக்குவதற்கும் பரிபாடல் அழிந்து போனதற்கும் தாங்கள் கூறிய காரணங்களை மனங்கொள்கிறேன். <br />//முன்னோர் கண்டுணர்ந்த பா வகைகளிலும் இனங்களிலும் ஒரு சீரைக் கூட்டியோ ஒரு சீரைக் குறைத்தோ புதிய பாவை உருவாக்கக் கூடாது. அது சிறப்பாகவும் இருக்காது. தேவையுமில்லை என்பதே என் கருத்து.//<br />பாவகைகளில் அப்படி மாற்றம் செய்ததால் தானே அய்யா பாவினங்கள் தோன்றின.<br />//முன்னோர் கண்டுணா்ந்த வகை, இனம் கோட்பாடுகளை நன்குணா்ந்து புதிய வகையையோ இனத்தையோ உருவாக்கலாம்.//<br />நானறிந்தவரை அது முடியாதென்றே தோன்றுகிறது. இன்றைய புதுக்கவிதை உட்பட கவிதைசார் வடிவத்தின் எல்லா இலக்கணத்தையும் யாப்பு தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. இனியெழும் எவ்வகைமையையும் அதனுள் இருக்கும் இலக்கணத்தின் உள்ளடக்க இயலும்.<br />//யாப்பின் கட்டுப்பாடுகள் நிறைந்த வெண்பா வகைகளை நாம் எழுதிக் குவிக்கின்றோம். //<br />தாங்கள் காட்டிய வீரபத்ரமுதலியாரின்,“தமிழிலக்கண அறிவு மிகக்குறைந்த அளவே உள்ள, தமிழ் யாப்பிலக்கணம் அறிந்த ஒருவர் சர்வ சாதாரணமாய் வெண்பாவை எழுதிவிட முடியும்(( பக். 3 ,விருத்தப் பாவியல்)“ எனும் கூற்று எனக்கும் ஏற்புடையதுதானய்யா!!<br /> //இலக்கணம் இருந்தாலும், இலக்கணப் பிறழ்ச்சியில் அமைந்த பா இனம் காலத்தால் ஆளுமையின்றிக் குறையும். அல்லது மறையும்.//<br />அப்படித் தோன்றவில்லையே அய்யா! பாவினத்தைத் தாங்கள் இலக்கணப் பிறழ்ச்சியாகக் கொண்டால், ஆசிரியப்பாவின் இனமான விருத்தத்தின் செல்வாக்குக் குறையவோ மறையவோ இல்லையே! இதை இலக்கணப்பிறழ்ச்சி என்பதைவிட இலக்கண நெகிழ்ச்சி எனக் கொள்ளுதல் சரி என்பதே என்கருத்து.<br />//ஈற்று அடியில் முச்சீா் வந்து, வாய்பாட்டுச் சீரில் முடிவனவற்றை வெண்பாவின் வகையாக முன்னோர் கொண்டனா். இந்த அடிப்படைக் கோட்பாட்டிற்குப் நீங்கள் எழுதிய பாடல் பொருந்தாமல் இருப்பதால் வெண்பா வகையாக ஏற்க முடியாது.//<br />அளவடி நான்கில் இரண்டாம் அடியில் ஐந்துசீர் வருகின்ற, ஈற்றடி நான்கு சீரால் ஆகிய, ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஈரசைச்சீராய் உகரத்தில் முடியாத முன்னோரின் வெண்பா ஒன்றை என்னால் சான்று காட்ட முடியும். இலக்கணங்கள் அப்படிப் பாட அனுமதி தருமானால், மேலும் உதாரணத்திற்கு, வெண்பா மரபென நாம் கொண்டிருக்கும் ஈற்றடிக்கே மூன்று சீர் என்பதை மீறி, இரண்டாம் அடியில் மூன்று சீர் மட்டுமே வரும் அளவடி வெண்பாவையும் சான்று காட்டினால் இப்பதிவின் பாடலை வெண்பா என்றல்ல, நான்கு சீர்களைக் கூட இறுதி அடியில் இருக்க அனுமதிக்கும் ( வெண்செந்துறை) வெண்பாவின் ஏதேனும் ஓர் இனத்திலேனும் உட்படும் என்று ஏற்பீர்களா அய்யா?<br /><br />//தளையும் சீரும் எல்லாம் முற்றிலும் மாற்றிக் கொண்ட அதன் இனத்தினுள்ளும் இதை ஏற்க முடியாது. ஏன் என்றால் உங்கள் பாடல் முற்றிலும் மாறாமல்,99 விழுக்காடு வெண்பா யாப்பைப் பெற்றுள்ளது.//<br />தளையும் சீரும் முற்றிலும் மாற்றிக் கொண்ட என்று சொல்வதை விட பெரும்பான்மை அம்முதன்மைப் பாவின் இலக்கணம் பெற்று நெகிழ்ச்சி கொண்டிருக்கின்ற வடிவமே பாவினம் என்பதாய் நான் காணுகிறேன் அய்யா!<br /><br /><br />//ஓா் சீா் குன்றிய கலிவிருத்தமாகவும் ஏற்க வழியில்லை.<br />ஒரு சீரைக் கூட்டி அழகிய சந்தக் கலிவிருத்தமாக ஏற்க வழியுண்டு.//<br />இல்லை அய்யா. இதைக் கலிவிருத்தமாகக் கொள்ளத் தடையுண்டு. கலிவிருத்தத்தில் ஈற்றுச்சீர் நான்கடிக்குக் குறைந்து வருதல் இல்லை.<br />இன்னுமோர் முக்கிய வேறுபாடு, கலிவிருத்தம் வெண்பாவின் தளைகளில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.<br />சான்று,<br />“கூகா வென்று குரைப்பதல் லாற்சமன்<br />வாவா வென்னின் வரேமென வல்லீரே!<br />தேவே சன்பயில் தில்லையின் எல்லையில்<br />சேர்வி ரேலது செய்யவும் வல்லீரே“ ( சிதம்பரம் செய்யுட் கோவை-75)<br /><br />ஐயா, மீண்டும் என் கேள்வியை முன்வைக்கிறேன். இதை வெண்பாவின் இனங்களில் கொள்ள வழியுண்டா? <br />இப்பின்னூட்டமே இவ்வளவு நீண்டுவிட்டதால் இதை வெண்பாவின் இனமெனக் கொள்வதற்கு என்தரப்பு நியாயங்களைத் தனிப்பதிவாக இடலாமா?<br />இப்பின்னூட்டத்திற்குத் தங்களின் மாற்றுக் கருத்தினை வேண்டி நிறைகிறேன். நன்றி<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44193798579776519562014-11-19T18:53:02.070+05:302014-11-19T18:53:02.070+05:30//நீங்கள் எழுதிய பாடலை ஈற்றுச் சீா் குறைந்த கலிவிர...//நீங்கள் எழுதிய பாடலை ஈற்றுச் சீா் குறைந்த கலிவிருத்தம் என்று நான் சொல்லவில்லை.//<br />மன்னிக்க வேண்டும் அய்யா! நீங்கள் “கலிவிருத்தத்தின் ஈற்றுச்சீரைக் குறைத்து விட்டேன்“ என்றே கூறி இருந்தீர்கள்.<br /><br />//கலிவிருத்தத்தில் ஈற்றடியில் ஒரு சீரைக் குறைத்துவிட்டு வெண்பாவின் புதிய இனம் என்று நீங்கள் சொல்கின்றீா்.என்று எழுதியுள்ளேன்.//<br />என் பதிவின் எந்த இடத்திலும் கலிவிருத்தம் என்ற சொல்லையே நான் கையாளவில்லை அய்யா! இது உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் கூறியிருப்பதே!<br />//வெண்பா இனமாக ஏற்போம் எனில், முன்னோர் படைத்த வெண்டளையால் அமைந்த பாடல்கள் அனைத்திலும் ஒரு சீரைக் கூட்டியோ குறைத்தே புதிய வகைக்கும் இனங்களுக்கும் வழிதரும் நிலை ஏற்படும்.//<br />முன்னோர் இப்படி ஒரு சீரை கூட்டியோ குறைத்தோ கொள்வதைத்தானே அய்யா இனங்களின் பாற்படுத்தினர்.?. முத்து நிலவன் அய்யாவின் பின்னூட்டத்தில் இதைக் குறிப்பிட்டேன்.<br />ஒரு அடியில் ஒரே சொல்லைக் கொண்ட வெண்பா கூட, முன்னோர் மரபில் இருக்கிறது.<br /> “உதுக்காண், <br />சுரந்தானா வண்கைச் சுவரன்மாப்பூதன்<br />பரந்தானாப் பல்புகழ் பாடி - இரந்தார்மாட்<br /> டின்மை அகல்வது போல இருணீங்க<br /> மின்னும் அளித்தோ மழை“ ( தொல்- இளம்- 356.மேற்.)<br />ஒரு அடியில் ஐந்து சீர் கொண்ட வெண்பாவையும், ஈற்றடி அல்லாமல் இடையே மூன்று சீர் வருகின்ற வெண்பாவையும் முன்னோர் மரபிலிருந்தே என்னால் காட்ட முடியும். புறனடையென்றோ விதிவிலக்கென்றோ நீங்கள் அதைச் சொல்வீர்களாயின் அவ்வடிவம் இருந்திருக்கிறது. இலக்கண நூல்கள் அதற்கும் அமைதி கூறி இருக்கின்ற என்பதையும் ஏற்க வேண்டிவரும்.<br /><br />//ஈற்றயலடியில் முச்சீா் பெற்றுவரும் நேரிசை ஆசிரியப்பா போன்று, இரண்டாம் அடியில் மட்டும் முச்சீா் பெற்றுவரும் புதிய ஆசிரியப்பாவை நாம் உருவாக்கலாமா? முன்னோர் செய்துள்ளனரே! நாம் செய்தால் என்ன? பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.//<br />பதிலை நான் எப்படி அய்யா சொல்வது?<br /><br />“சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே<br />பெரியகட் பெறினே<br />யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே<br />சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே<br />பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே<br />என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே<br />அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே<br />நரந்த நாறுந் தன்கையாற்<br />புலவு நாறு மென்றலை தைவரு மன்னே<br />அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ<br />இரப்போர் கையுளும் போகிப்<br />புரப்போர் புன்கண் பாவை சோர<br />அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்<br />சென்றுவீழ்ந் தன்றவன்<br />அருநிறத் தியங்கிய வேலே<br />ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ<br />இனிப் <br />பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லைப்<br />பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்<br />சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்<br />றீயாது வீயு முயிர்தவப் பலவே.“<br />இது அதியமானைக் குறித்து அவ்வை பாடிய புறநானூற்றுப்பாட்டு. இதில் இரண்டாம் அடியில் இரண்டு சீர் வருகிறது. ஆசிரியத்தின் வரம்பு கடந்து ஐந்து சீர்கள் வருகின்றன. ஒரே சீர் மட்டுமே கொண்டு ஒரு அடி வருகிறது. இது ஆசிரியப் பா வகைமையாகவே ஏற்கப்பட்டும் இலக்கண நூல்களால் எடுத்துக் காட்டப்பட்டும் வருகிறது. இரண்டாம் அடியில் இரண்டு சீரைக் கொண்டும் ஆசிரியப்பாவை முன்னோர் ஆக்கித் தந்துள்ளனரே அய்யா?<br />//அழகான பாதையை மேடு பள்ளங்களாக ஆக்குவதா? அழகான சந்தத்தில் அமைந்த கருவிளம்+தேமா+கருவினம் +தேமா கலிவிருத்தத்தில் ஈற்றில் ஒரு சீரை உடைத்துவிட்டுப் புதிய வெண்பா இனம் என்று சொல்வதா?//<br />தொல்காப்பியன் வகுத்தளித்த பாதை அழகானதுதான். அதிலேயே பயணித்துக் கோண்டிருந்தவன் தான் கல்லும் முள்ளும் திருத்தி அழகான பாதையைக் கண்டான். விருத்தி எழுந்தது. அதைவிட அழகாகக் காரிகை எழுந்தது. தொல்காப்பியனை நினைத்துக் கொண்டே புதிய பாதையில் நாம் பயணத்தை மாற்றிவிட்டோம். இது மேடு பள்ளமாக இருக்கலாம். ....ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-55601423389832245062014-11-19T18:52:14.347+05:302014-11-19T18:52:14.347+05:30அய்யா வணக்கம்.
தங்களின் மறுமொழி என்மேல் உள்ள அன்பை...அய்யா வணக்கம்.<br />தங்களின் மறுமொழி என்மேல் உள்ள அன்பையும் தங்களிள் யாப்பறிவையும் காட்டுகிறது. பொதுவாக இப்பதிவின் அறிஞர்களின் கருத்துரைகளுக்குப் பதிலளித்துப் பின்னூட்டமிட்டு, மாற்றுக் கருத்துகளின் போது மீண்டும் அதற்குப் பதிலளித்து இதை வளர்த்த வேண்டாம் என்றே கருதி வளாயிருந்தேன்.<br />ஆனால் தங்களின் வெண்பாவின் ஈற்றடி “ இன்னும் இசைப்பீர் இனித்து “ என்றிருப்பதால் ஒரு வேளை தங்களின் கருத்துக்குக் மறுமொழி கூறுமாறு சொன்ன கட்டளையாய் அது இருக்குமோ என்றெண்ணியே தங்களின் மறுமொழிக்குப் பதில் சொல்லத் துணிகிறேன். நல்ல விவாதங்கள் என்னை நல்வழிப்படுத்தும் என்று நம்புகிறேன்.<br />இப்பின்னூட்டம் இன்னொரு பதிவாகும் அளவிற்குப் பெரிதாய் அமையும் என்றெனக்குத் தோன்றுவதால் பின்னூட்டங்கள் துண்டுதுண்டாவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.<br />//யாப்பின் வகைகளையும் இனங்களையும் எழுதும் நுட்பம் அனைத்தும் அறிந்து தெளிந்த சிறந்த புலவா்களால் புதிய வகை மரபுக் கவிதையை உருவாக்க முடியும். என்போன்ற குறைந்த அளவு யாப்பிலக்கணத்தைக் கற்றவர்களால் முடியாது // <br />என்று தாங்கள் சொல்லியிருப்பது என்னைக் குறித்தானது எனவே நான் கொள்கிறேன். நீங்களோ பலவாயிரம் பாடல்களை யாப்பில் படைத்தவர். நான் இன்னும் அதில் தேர்ச்சி பெறாது பெற முயன்று கொண்டிருப்பவன். என் துறையும் அதுவன்று. எனக்குள்ள யாப்பிலக்கணப் பயிற்சி மிகக் குறைவானதே! தமிழிலக்கியப் பெரும்பரப்பில் நடக்கின்ற மிகவிரைவு ஓட்டத்தில் நான் கடந்த சில நொடிப்பார்வை மட்டுமே எனக்கு மரபின் மீது உண்டு. நீங்கள் கூறியது போல் புதியவகை மரபுக்கவிதையை உருவாக்குவதில் இங்குச் சிக்கலில்லை.( என் கருத்து, பழைய யாப்பிலக்கண மரபே புதுக்கவிதை உட்பட எல்லா வடிவங்களுக்கும் இடம்கொடுத்து நிற்கிறது என்பதே) சிக்கல் பழைய மரபு வடிவங்களுள் ஒன்றில் இதை உட்புகுத்துவது.. அதிலும் எந்த வடிவங்களில் இதனை உட்புகுத்துவது என்பதில்தான்!<br />நான் இதை வெண்பாவின் இனங்களுட்படுத்தலாமா என்று கேட்டதற்கான நியாயங்களை இந்தப் பின்னூட்டத்தின் இறுதிப்பகுதியில் கூற நினைக்கிறேன். அதற்கு முன் தங்களின் கேள்விகளுக்குள் செல்ல நினைக்கிறேன்.<br />//கூவிளம்+மா+ மா அரையடிக்கு என்ற முறையில் நான் புதிய விருத்தத்தை உருவாக்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம். நான் உருவாக்கிய புதிய வகை விருத்தம் முன்னே உள்ள விளம் +மா+ தேமா என்ற வகைக்குப் பிழையாக எழுதப்பட்டது என்றே கற்றோர் கருதுவார்.//<br />நிச்சயமாக அவ்வாறு கருதமாட்டார்கள் என நான் கருதுகிறேன்அய்யா.<br />அது அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தினை எழுதுவதற்கான இன்னொரு வாய்பாடு. அதன் சிறப்பும் சிறப்பின்மையும் இரண்டாம் கட்டத்தில் ஆராயப்படும். முதலில் அறுசீர் விருத்தத்தை அமைப்பதற்கான இன்னொரு வாய்பாடு என்றவரை அது சரிதான். வெறும் வாய்பாட்டை விட அத்தகு வடிவத்தில் அமைந்த பாடல் ஒன்றைக் கொண்டே நீங்கள் இதை விளக்க முடியும் என்பதால் அப்பாடலின் ஓசை அழகு இவற்றை உளங்கொள்வோர் அதை ஏற்கவோ மறுக்கவோ செய்வர். ஆகவே அதைப் பிழை என எப்படிக் கருத முடியும்?<br />வெண்பாவின் இனங்களை ஏற்க மறுத்த நச்சினார்க்கினியரின் கூற்றினொடு தங்களுக்கும் உடன்பாடில்லை என்பதால் தொல்காப்பிய மரபினையொட்டி<br />யும் அதனை மீறியும் எழுந்த யாப்பருங்கலவிருத்தியும் காரிகையும் , தாங்கள் மேற்கோள் காட்டியிருந்த விருத்தப்பாவியல் வரையான யாப்பிலக்கண நூல்களின் அடிப்படைகளை ஏற்கிறீர்கள் என்று கருதி இதைத் தொடர்கிறேன்......<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88217648303125016062014-11-19T11:42:11.770+05:302014-11-19T11:42:11.770+05:30ஊமைக் கனவுகளுக்கு நான் மீண்டும் வருவேன் என்று எதிர...ஊமைக் கனவுகளுக்கு நான் மீண்டும் வருவேன் என்று எதிர் நோக்கி இருக்க மாட்டீர்கள். என்ன செய்வது ?பொருள் தெரிய முடியாத கவி ஒன்று இயற்றிப் பலரது காதுகளை ரட்சித்தாராம் அருண கிரியார். இந்தப் பாடல்தான் அது. <br /><br /> திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா<br />திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா<br />திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து<br />திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!<br /><br />இது குறித்து ஒரு பதிவு நவம்பர் 2012-ல் எழுதி இருந்தேன். இதுவும் ஏதாவது விதிகளுக்கூட்பட்டதாகத்தானே இருக்கும். உங்கள் பின்னூட்டத்திற்கான மறு மொழி பார்த்தபின் மதுரகவி யோ என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள். <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-548903920466809452014-11-19T07:18:18.506+05:302014-11-19T07:18:18.506+05:30அன்புள்ள அய்யா,
செவிவழியே செய்த...அன்புள்ள அய்யா,<br /><br /> செவிவழியே செய்தியைச் சொல்லிய வெண்பாக்<br /> கவிஞருக்கு நன்றி உரித்து.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5706055248843405722014-11-19T07:04:49.255+05:302014-11-19T07:04:49.255+05:30சித்திரகவியின் மாலைமாற்று பாடல் ஒன்றை கேட்டிருகிறீ...சித்திரகவியின் மாலைமாற்று பாடல் ஒன்றை கேட்டிருகிறீர்கள் என்றே கருதி கீழ் காணும் விடையை உங்கள் முன் வைக்கிறேன்:)<br /><br /><br />திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன.<br /><br />கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று.<br /><br /> யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா<br /> காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா <br />இருட்டில் மறைந்த விளக்கு பதிவில் சித்திர கவியின் மற்ற வடிவங்களை கேட்டிருந்தீர்கள் இல்லையா<br />எழுத்துவர்த்தனம் என்பது சித்திரக்கவி வகைகளில் ஒன்று. பாடலில் எழுத்தின் விரிவு வளரும்.<br /><br />எடுத்துக்காட்டு<br /> மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும்,மற் றொன்று<br /> நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் – நிரப்பிய<br /> வேறோர் எழுத்துய்க்க வீரரா சேந்திரனாட்(டு)<br /> ஆறாம் எனவுரைக்க லாம்.<br />அட்டநாக பந்தம் என்பது ஓவியப்பா வகைகளில் ஒன்று.<br />எட்டு நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும்.<br />பாடல் (கவிதை) ஒன்று அந்தப் பிணைப்பினூடே நுழைந்து படிக்கும்போது பாடல் பொருந்தி வருமாறு ஓவியப்பா அமைந்திருக்கும்.<br />பாடலைப் பாம்பின் தலையில் தொடங்கி வால் வரையில் சென்று படித்துக்கொள்ள வேண்டும்.<br /><br />சொல்வளம் மிக்கவர் இதனைப் பாடுவர். ஓவியப் பாவைச் சித்திரக்கவி என்பர்.<br />இதனைப் பொருத்திப் பார்த்து அறிந்துகொள்க<br /><br /> நாரணனை நாடு<br /> பூரணனைக் கொண்டாடு <br /> ஒரு disclaimer <br />சத்தியமா இது எல்லாம் wiki யில் சுட்டது. ஆனா முயன்றேன் அதைமட்டும் சொல்கிறேன். இப்போகூட இதை தான் கேடீங்கலானு தெரில:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2778789891751200572014-11-19T06:34:06.091+05:302014-11-19T06:34:06.091+05:30அட!! இங்கிலீஷ் ல கூட palindromes என சொல்வோமே அதை த...அட!! இங்கிலீஷ் ல கூட palindromes என சொல்வோமே அதை தான் சொல்லிருகீங்க!! இப்போ நிலவன் அண்ணா சொன்ன மாதிரி ஒரு வாசான்கோலி. இருங்க கொஞ்ச நேரத்தில் வருகிறேன்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65112053419264902552014-11-19T06:24:02.448+05:302014-11-19T06:24:02.448+05:30//பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும்போது “உனக்...//பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும்போது “உனக்கென்ன இங்கு வேலை” என்று என்னுள் கேள்வி எழுகிறது. இருந்தாலும் பண்டிதப் பெருமக்கள் பதிவுலகில் கொடி கட்டிப் பறக்கிறார்கள் என்றும் தெரிகிறது//<br /><br />ஜி எம் பி ஸாரின் இந்த வரிகள்தான் எனக்கும் தோன்றியது. ஒன்றும் தெரியாமல் நான் என்ன பின்னூட்டம் இட?<br /><br />பதிவையும், பின்னூட்டங்களையும் ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77085893263615600012014-11-19T00:58:47.272+05:302014-11-19T00:58:47.272+05:30
ஐயா வணக்கம்!
சுருக்கம் கருதி நான் எழுதிய கருத்து...<br />ஐயா வணக்கம்!<br /><br />சுருக்கம் கருதி நான் எழுதிய கருத்துரை தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை என்று எண்ணுகிறேன்.<br /><br />//சிறந்த புதிய வகை மரபுப் பாக்களை உருவாக்குவது மிக மிகக் கடினம். முடியாது என்று கூடச் சொல்லலாம்’’// என்று கூறியிருப்பது மாறுகொளக் கூறல் அல்லவா?<br /><br />யாப்பின் வகைகளையும் இனங்களையும் எழுதும் நுட்பம் அனைத்தும் அறிந்து தெளிந்த சிறந்த புலவா்களால் புதிய வகை மரபுக் கவிதையை உருவாக்க முடியும். என்போன்ற குறைந்த அளவு யாப்பிலக்கணத்தைக் கற்றவர்களால் முடியாது என்று சொன்னேன்.<br /> <br />கூவிளம்+மா+ மா அரையடிக்கு என்ற முறையில் நான் புதிய விருத்தத்தை உருவாக்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம். நான் உருவாக்கிய புதிய வகை விருத்தம் முன்னே உள்ள விளம் +மா+ தேமா என்ற வகைக்குப் பிழையாக எழுதப்பட்டது என்றே கற்றோர் கருதுவார்.<br /> <br />//வெண்பாவின் இனங்களை ஏற்க மறுத்த நச்சினார்க்கினியரின் கூற்றினொடு தங்களுக்கும் உடன்பாடுண்டா?//<br /><br />உடன்பாடு இல்லை என்ற பதிலையே இன்றைய என்னறிவின் பதிலாக இருக்கட்டும்.<br /><br />நீங்கள் எழுதிய பாடலை ஈற்றுச் சீா் குறைந்த கலிவிருத்தம் என்று நான் சொல்லவில்லை.<br /> <br />கலிவிருத்தத்தில் ஈற்றடியில் ஒரு சீரைக் குறைத்துவிட்டு வெண்பாவின் புதிய இனம் என்று நீங்கள் சொல்கின்றீா்.என்று எழுதியுள்ளேன்.<br /><br />வெண்பா இனமாக ஏற்போம் எனில், முன்னோர் படைத்த வெண்டளையால் அமைந்த பாடல்கள் அனைத்திலும் ஒரு சீரைக் கூட்டியோ குறைத்தே புதிய வகைக்கும் இனங்களுக்கும் வழிதரும் நிலை ஏற்படும்.<br /><br />ஈற்றயலடியில் முச்சீா் பெற்றுவரும் நேரிசை ஆசிரியப்பா போன்று, இரண்டாம் அடியில் மட்டும் முச்சீா் பெற்றுவரும் புதிய ஆசிரியப்பாவை நாம் உருவாக்கலாமா? முன்னோர் செய்துள்ளனரே! நாம் செய்தால் என்ன? பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.<br /><br />அழகான பாதையை மேடு பள்ளங்களாக ஆக்குவதா? அழகான சந்தத்தில் அமைந்த கருவிளம்+தேமா+கருவினம் +தேமா கலிவிருத்தத்தில் ஈற்றில் ஒரு சீரை உடைத்துவிட்டுப் புதிய வெண்பா இனம் என்று சொல்வதா?<br /><br />இலக்கியத்திற்கு இலக்கணங்களை உருவாக்குவதில் முதன்மையாக இரண்டு வகைகளை நான் உணருகிறேன். 1. சிறந்த பாட்டிற்கு இலக்கணத்தைப் படைத்தல். 2. புலவா்களால் அதிகமாக எழுதப்பட்ட பாட்டிற்கு இலக்கணம் அமைத்தல். பரிபாடல் ஏன் அழிந்தது? ஏன் இன்று நாம் சிறப்பாக எழுதுகின்ற பாக்கள் வருங்காலத்தில் இல்லாமல் போகலாம். இதற்குக் கரணம் என்ன? இரண்டு பதில்கள் தெரிகின்றன. 1 பழையன கழிதலும் புதியன புகுதலும் 2. வருங்காலத்தில் உருவாகும் யாப்பின் எளிமையும், இனிமையும், செம்மையும்.<br /><br />முன்னோர் கண்டுணர்ந்த பா வகைகளிலும் இனங்களிலும் ஒரு சீரைக் கூட்டியோ ஒரு சீரைக் குறைத்தோ புதிய பாவை உருவாக்கக் கூடாது. அது சிறப்பாகவும் இருக்காது. தேவையுமில்லை என்பதே என் கருத்து.<br /><br />முன்னோர் கண்டுணா்ந்த வகை, இனம் கோட்பாடுகளை நன்குணா்ந்து புதிய வகையையோ இனத்தையோ உருவாக்கலாம். <br /><br />அன்று முதல் இன்று வரை, ஏன் இனிவரும் காலத்திலும், சிறந்த யாப்பின் வகைகளைக் கற்றோர் போற்றிப் பாதுகாப்பார். காலச் சூழலால் இலக்கணம் எழுதப்பட்டாலும் சிறப்பில்லாப் பா வகைகள் மறையும்.<br /><br />யாப்பின் கட்டுப்பாடுகள் நிறைந்த வெண்பா வகைகளை நாம் எழுதிக் குவிக்கின்றோம். கட்டுப்பாடு குன்றிய வெண்பா இனங்களைக் மிக மிகக் குறைவாகவே எழுதுகிறோம்.நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஒரே ஒரு குறள் வெண்செந்துறை இடம் பெற்றுள்ளதை எண்ணும்பொழுது இலக்கணம் இருந்தாலும், இலக்கணப் பிறழ்ச்சியில் அமைந்த பா இனம் காலத்தால் ஆளுமையின்றிக் குறையும். அல்லது மறையும்.<br /><br />ஓசையைக் கொண்டும், பா அடிகளைக் கொண்டும் யாப்பின் வகைகளும் இனங்களும் உருவாக்கப்பட்டன.<br /><br />ஈற்று அடியில் முச்சீா் வந்து, வாய்பாட்டுச் சீரில் முடிவனவற்றை வெண்பாவின் வகையாக முன்னோர் கொண்டனா். இந்த அடிப்படைக் கோட்பாட்டிற்குப் நீங்கள் எழுதிய பாடல் பொருந்தாமல் இருப்பதால் வெண்பா வகையாக ஏற்க முடியாது.<br /><br />தளையும் சீரும் எல்லாம் முற்றிலும் மாற்றிக் கொண்ட அதன் இனத்தினுள்ளும் இதை ஏற்க முடியாது. ஏன் என்றால் உங்கள் பாடல் முற்றிலும் மாறாமல்,99 விழுக்காடு வெண்பா யாப்பைப் பெற்றுள்ளது.<br /><br />ஓா் சீா் குன்றிய கலிவிருத்தமாகவும் ஏற்க வழியில்லை.<br />ஒரு சீரைக் கூட்டி அழகிய சந்தக் கலிவிருத்தமாக ஏற்க வழியுண்டு. <br /><br />யாப்பு வகையுணர்ந்து காப்புப் பலபோட்டேன்!<br />தோப்புக் கனிச்சுவைத் துாயவரே! - மூப்புமதி<br />மின்னும் வகையினில் பின்னிக் கருத்தளித்தீா்!<br />இன்னும் இசைப்பீா் இனித்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-84631186482458985052014-11-19T00:06:51.621+05:302014-11-19T00:06:51.621+05:30என் சித்தப்பா சுந்தரபாரதியும் தாங்கள் எழுதியது ப...என் சித்தப்பா சுந்தரபாரதியும் தாங்கள் எழுதியது போலவே திருப்புகழை மாற்றி எழுதிக் காட்டியிருக்கிறார்கள். திருநீற்றுப் பதிகத்தைக் கேலி செய்து திருச்சோற்றுப் பதிகம் எழுதி இருக்கிறார்கள். <br />உங்கள் இருவரிடமும் மாட்டிக் க்கொண்டால் என் கதி அதோகதி தான். <br />நன்றி அய்யா நன்றி விஜூ,சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70917106864311242982014-11-19T00:01:02.481+05:302014-11-19T00:01:02.481+05:30அய்யா. நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்க...அய்யா. நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கிறேன். கண்ணீர்மல்க கைதட்டுகிறேன், ஒரு ரசிகனாய் அவ்வளவே முடியும் என்னால். வெண்பா இலக்கணம் மட்டுமே தெரியும். உங்கள் புதிர் புரியவில்லை. புரியவும் வாய்ப்பில்லை. ஒவ்வொரு முறை தங்கள் ,வலைக்கு வரும் போதெல்லாம் என் தலையில் சுமந்து கொண்டிருந்த ( நானே ஏற்றிய ) கிரீடங்களை ஒவ்வொன்றாக இறக்கிவைத்து விட்டுப் போகின்றேன். நன்றி விஜூ சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-34713339220297566232014-11-18T23:27:41.886+05:302014-11-18T23:27:41.886+05:30“பாடலைப் படித்ததே போதுண்டா ஆளைவிடு“ என்பவர்கள் இத்...“பாடலைப் படித்ததே போதுண்டா ஆளைவிடு“ என்பவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். இனி தொடர்ந்தால் ஒருவேளை என்னைத் தேடிக் கொல்லலாம் என்று நினைத்தாலும் நினைத்துவிடுவீர்கள்.//<br /><br />ஆசானே இது கொஞ்சம் உங்களுக்கே ஓவராகத் தெரியல?!!!!! என்ன ஆசானே! இப்படி எல்லாம் வேறு யார் எங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்! படித்து மண்டையில் ஏற்றிக் கொண்டிருக்கின்றோம்! ஆசானே! தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்! இதுதான் எங்களுக்குத் தமிழ் வகுப்பு! தொலை தூர, இணைய வழிக் கல்வி என்பார்களே அது போன்று! எனவே தயவு செய்து தொடருங்கள்! நாங்கள் தமிழில் விற்பன்னர்கல் அல்லர். எனவே ரசித்து கற்போமே தவிர அதைப் பற்றி விவரித்து விவாதம், விளக்கம் செய்யும் அளவு புலமை இல்லை ஆசானே! தொடருங்கள் எனபதே எங்கள் வேண்டுகோள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2553717891588893292014-11-18T21:36:32.063+05:302014-11-18T21:36:32.063+05:30அய்யா,
நீங்கள் கேட்டு நான் சொல்லாமல் இருப்பேனா?
...அய்யா,<br /><br />நீங்கள் கேட்டு நான் சொல்லாமல் இருப்பேனா?<br /><br />எடுத்துக்கொள்ளுங்கள்..<br /><br />“ ‘பருவ மாக விதோகன மாலையே<br /> பொருவி லாவுழை மேவன கானமே<br /> மருவு மாசை விடாகன மாலையே<br /> வெருவ லாயிழை பூவணி காலமே’““<br /><br />இதுவும் <br /><br /><a href="http://oomaikkanavugal.blogspot.com/2014/06/12_27.html" rel="nofollow">இருட்டில் மறைந்த விளக்கு</a> <br /><br />போல் தான் அய்யா!<br /><br /><br /><br />ஆனால் இது வேற மாதிரி!!!!<br /><br /><br />““தெரிந்தவர்கள் சொல்லுங்கள்““<br /><br /><br />( என்னடா இது திரும்பவும் மொதல்ல இருந்தாவா....?)<br /><br />உங்களுக்கு மட்டும் சொல்லி விடுகிறேன்.<br /><br />காதைக் கொடுங்கள் <br />( .......................................................................) அவ்வளவுதான்.<br /><br />விடுவிப்பவர்களுக்காக விடப்பட்ட ஒரு பின்னூட்டப் புதிராக இருந்துவிட்டுப் போகட்டுமே!<br /><br /><br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56949557072334203902014-11-18T21:10:05.238+05:302014-11-18T21:10:05.238+05:30அன்புள்ள அய்யா,
...அன்புள்ள அய்யா,<br /><br /> <br /> கேள்விக்கு பதிலெனக் கேள்வி கேட்டால் எப்படி?<br /><br /> ஏதாவது சொல்ல வேண்டாமா? என்றீர்கள்.<br /><br /> ‘இருட்டில் மறைந்த விளக்கு’ <br /> <br /> தமிழ்வெளிச்சத்தைக் கண்டேன்...<br /><br /> விட்டிலானேன்... பாவொளியில் <br /><br /> விழுந்தேனா? எழுந்தேனா? மகிழ்ந்தேனா?<br /><br /> மலைத்தேனா? களித்தேனா? மடிந்தேனா?<br /><br /> சொக்கிப்போனேன் அய்யா...<br /><br /> <br /> <br /> பாட்டுக்குப் பாட்டு....<br /><br /> உரைக்கு(ம்) உரை....தெளிவுரை...<br /><br /> இருந்தாலும் ...இருந்தாளும் ...<br /><br /> உன் தமிழாளும் ஆழம் தெரியல..!.<br /><br /><br /> அப்பா...நீ எடுத்துகாட்டிய வெண்பா கண்டு<br /><br /> மலைப்பா இருக்குதப்பா...!<br /><br /><br /><br /> ‘ கேள்வியை நான் கேட்கட்டும்மா...அல்லது நீ கேட்கிறாயா?’<br />-என்று நான் கேட்க முடியாது!<br /><br /> கேள்வி கேட்கத்தான் முடியும்...பதில் தர நீங்கள் இருக்கின்றீர்களே!<br /> ‘இப்படிப்பட்ட சுவையான சித்திர கவிகளில் பலவகை இருக்கின்றன’<br /> <br /> சும்மா சொன்னால் போதுமா? எடுத்துக்காட்டினால்தானே தெரியும்..!<br /><br />சும்மா எடுத்து விடுங்கள் அய்யா...!<br /><br />நாங்கள் படித்து இன்புறுகிறோம்....!<br /><br />நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.com