tag:blogger.com,1999:blog-5838387952160133129.post6854455822143706919..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: பகவானின் பொருள் தெரியுமா ஜி ?ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54217337594455819622015-05-22T18:20:16.547+05:302015-05-22T18:20:16.547+05:30கலம்பகம் பெயர் விளக்கம் அறிந்தேன். தலைப்பைப் பார்...கலம்பகம் பெயர் விளக்கம் அறிந்தேன். தலைப்பைப் பார்த்துவிட்டு பகவான்ஜி பற்றிய பதிவோ என நினைத்தேன். கவிஞர் முத்துநிலவன் ஐயா சொன்னது போல் படம் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை பதிவுக்கான படம் போலவே எனக்கும் தோன்றியது. புதிய செய்திகளை நாங்கள் அறியத் தரும் பதிவுக்கு மிகவும் நன்றி. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13209227731794311212015-05-22T17:53:18.082+05:302015-05-22T17:53:18.082+05:30ஐயா வணக்கமும் தனிப்பதிவாகும் அளவிற்கு நிறைந்த செய்...ஐயா வணக்கமும் தனிப்பதிவாகும் அளவிற்கு நிறைந்த செய்திகளுடன் ஒரு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றியும்.<br /><br />பாட்டியல் நூல்களை நான் பார்க்கவில்லை.<br />பார்த்திருக்க வேண்டும்.<br /><br />கலம் என்னும் சொல் 12 என்பதைக் குறித்து வருதல் தமிழில் இல்லை.<br />பகம் என்னும் சொல் ஆறு குணங்களைக் காட்டிற்று.<br /><br />யாரோ ஒரு செல்வாக்கான புலமையாளர் தம் கைச்சரக்கைக் காட்ட, அது இன்றைய தமிழ் மாணவர்களுக்கான அறிவாகக் கொடுக்கப்படுவதுதான் வேதனை.<br /><br />இக்கற்பிதம் இன்றல்ல நானும் இப்படித்தான் படித்தேன்.<br /><br />நீங்கள் சொல்பதைப் பார்க்க இந்தப் பன்னிரண்டு ஆறு என்னும் பிரிவினால் வந்த பெயர் என்கிற விளக்கம் தவறென்னும் என் ஊகம் உறுதிப்படுவதாகக் காண்கிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10832061050981627052015-05-22T17:52:26.677+05:302015-05-22T17:52:26.677+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு யாழ்ப்பாவாணன் அவர்களே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39031591216108693272015-05-22T16:12:14.284+05:302015-05-22T16:12:14.284+05:30
கலம்பகம் என்றொரு சொல்லிட்டு
பதினெட்டு என்றொரு பொர...<br />கலம்பகம் என்றொரு சொல்லிட்டு<br />பதினெட்டு என்றொரு பொருளிட்டு<br />அறிஞர்களை பொருள் விளக்கவிட்டு<br />தங்கள் பக்கம் வந்து தமிழ் கற்றிட்டு <br />செல்ல வசதியாக நல்லதோர் பதிவிது!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4721068097477902962015-05-22T06:54:36.430+05:302015-05-22T06:54:36.430+05:30ஐயா வணக்கம்!
கலம்பகம் விளக்கம் கண்டேன். மிக மகிழ்...ஐயா வணக்கம்!<br /><br />கலம்பகம் விளக்கம் கண்டேன். மிக மகிழ்வுற்றேன். அறிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளீர். <br /><br />கலம்பகம் என்பதைக் கலம்+பகம் என்று பிரித்துக் கலம் என்பது 12, பகம் என்பது அதில் பாதி 6, இரண்டும் சேர்ந்து 18. கலம்பகம் 18 உறுப்புகளைக் கொண்டிருப்பதால் இதற்குக் கலம்பகம் என்று பெயர் வந்தது என்பர். ஆனால் பன்னிரு பாட்டியல் 14 உறுப்புகளையும், வெண்பாப் பாட்டியல் என்ற வச்சனந்திமாலை 19 உறுப்புகளையும், பிரபந்த மரபியல் 19 உறுப்புகளையும், சிதம்பரப் பாட்டியல் 20 உறுப்புகளையும், தொன்னுால் விளக்கம் 16 உறுப்புகளையும் கூறிச் செல்வதால் 18 உறுப்புகளால் பெயர்பெற்றது என்ற கூற்றுப் பொருந்துவதாக இல்லை.<br /><br />விருந்தே தானும் புதுவது கிளந்த<br />யாப்பின் மேற்றே [தொல்.பொருள் 237]<br /><br />என்ற தொல்காப்பிய நுாற்பாவின் உரையில் பேராசிரியர் "புதுவது கிளந்த யாப்பின் மேற்று" என்பது என்ன எனின் புதியதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்து வரச் செய்வது. அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க. கலம்பகம் முதலாயினவும் சொல்லுப என்று கூறுவதால் கலம்பகம் புதிய இலக்கிய விருந்து.<br /><br />புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்<br />போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி<br />கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்<br />களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த<br />அலங்கலந் தொடையல்கொண்டு அடியிணை பணிவான்<br />அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா<br />இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்<br />எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! <br />[திருப்பள்ளியெழுச்சி 5] <br /><br />என்னும் பாடலில் தொண்டரடிப் பொடியாழ்வார், பல மலர்களால் புனைந்த மாலையைக் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கல் அம்தொடையல் என்று கூறுவதைக் காண்கிறோம். அந்த மாலையைப்போல் பல்வகை உறுப்புகளும் பல்வகைப் பாக்களும் கலந்து வருவதால் இந்தச் சிற்றிலக்கியம் கலம்பகம் என்று பெயர்பெற்றது.<br /><br />கற்போர் களிப்புறும் வண்ணம் பதிவளித்தீர்!<br />சொற்போர் புரிந்து சுவையளித்தீர்! - பற்றாய்க்<br />கலம்பகம் கொண்ட கருத்தினை ஆய்ந்து<br />நலமுறத் தந்தீர் நயந்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23700972857090876992015-05-21T23:11:55.342+05:302015-05-21T23:11:55.342+05:30வாருங்கள் ஐயா!
கலம்பகம் என்பதன் பகுப்புப் பொருள் ...வாருங்கள் ஐயா!<br /><br />கலம்பகம் என்பதன் பகுப்புப் பொருள் குறித்துச் சொன்னது எனது ஊகம்தான்.<br /><br />ஆனால், பகவான் என்பதன் பொருளைப் பகம் என்ற வடசொல்லின் மூலத்தில் இருந்து வந்தது என்று சொன்னது என் ஊகமன்று. அது முன்சொல்லப்பட்டதே!<br /><br />பகம் என்பது ஆறு குணங்களைக் குறிப்பிடுகிறது என்கிறது தமிழ் லெக்ஸிகன்.<br />““. The six attributes, aicuvariyam, vīriyam, pukaḻ, tiru, āṉam, vairākkiyam;<br />ஜசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற அறுகுணங்கள். (பாரதவசனம். அநுசா.பக். 935.)“““<br /><br />ஆதிபகவன் என்னும் திருக்குறள் முதல் குறளுக்கான விளக்கத்தில், பகவான் என்னும் சொல் பகம் என்னும் குணமுணர்த்தும் வடசொல்லினடியாகப் பிறந்தது என்கிறார் திருக்குறள் உரை விளக்க வந்த வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார். <br /><br />இவை கருதித்தான் பகம் என்கிற சொல் ஆறைக் குறித்து வருவதற்கு வேறு ஆதாரங்கள் இல்லாததால் இவ்வடசொல்லில் இருந்து பெறப்பட்டிருக்கலாமோ என்றெழுதினேன்.<br /><br />எனவே பகவானில் உள்ள பகம் என்பது எனது ஊகக் கோட்பாடில்லை.<br /><br />கலம் பகம் என்பது பன்னிரண்டு ஆறு என்று இருக்க வாய்ப்பில்லை என்பது முற்றிலும் எனது ஊகமே...!<br /><br /><br />வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3072189102556315352015-05-21T21:38:45.916+05:302015-05-21T21:38:45.916+05:30கலம்பகம் என்பது சிற்றிலக்கியம் என்பதும் நந்திக்கலம...கலம்பகம் என்பது சிற்றிலக்கியம் என்பதும் நந்திக்கலம்பகம் ஏதோ கொஞ்சம் படித்த நினைவு. இருவரும் வேறு ஏதேனும் கற்றது நினைவுக்கு வருகின்றதா என்று தேய்த்துக் கொண்டோம்...ம்ஹூம் ...ஒன்றும் வரவில்லை. தங்கள் விளக்கம் எல்லாம் புதியதே. அறியாதவற்றைத் தங்களிடமிருந்து நிறைய தெரிந்து கொள்கின்றோம் ஆசானே! மிக்க நன்றி!<br /><br />அது சரி ஏன் உங்களை தமிழ்நாடு பாடத்திட்ட தமிழ் நூல் தொகுப்பிற்கு உதவச் சொல்லலாமே! ஆனால் முதலில் நமது அரசுஏற்க வேண்டும்....அதில்தான் ஊழலே. அதன் பின் நீங்கள் அப்படியே தொகுப்பிற்கு உதவினாலும்....அதைக் கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் வேண்டுமே! ம்ம்ம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-31290699880980334832015-05-21T19:19:43.556+05:302015-05-21T19:19:43.556+05:30திகைக்க வைக்கும் தகவல்!
ஆனால் ஐயா! பகவான் எனும் ச...திகைக்க வைக்கும் தகவல்!<br /><br />ஆனால் ஐயா! பகவான் எனும் சொல்லுக்குத் தாங்கள் இங்கு கொடுத்திருக்கும் விளக்கமும் ஊகக் கோட்பாடுதானே! அந்த வகையில்தான் தாங்கள் இதை வெளியிட்டிருக்கிறீர்கள் இல்லையா? ஆக, அதன் அடிப்படையில் இதைத் தவறு எனக் கூற முடியுமா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3771832191840090902015-05-21T17:36:30.907+05:302015-05-21T17:36:30.907+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனை...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74203229618157048082015-05-21T17:35:13.680+05:302015-05-21T17:35:13.680+05:30ஆறாத மனினால்தான் சிக்கலே :)
நன்றி டிடி சார்.ஆறாத மனினால்தான் சிக்கலே :)<br />நன்றி டிடி சார்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78778990374766272532015-05-21T17:34:32.305+05:302015-05-21T17:34:32.305+05:30நன்றி தோழர்.நன்றி தோழர்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23713130775531312202015-05-21T17:29:09.272+05:302015-05-21T17:29:09.272+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு பாண்டி...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு பாண்டிராஜ்ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56051320708434861412015-05-21T17:28:41.178+05:302015-05-21T17:28:41.178+05:30வடமொழிக்கும் தமிழுக்கும் உறவிருந்த காலம் ஒன்று உண்...வடமொழிக்கும் தமிழுக்கும் உறவிருந்த காலம் ஒன்று உண்டு சகோ.<br />அது இணக்கமானதும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்ததுமாய் இருந்தது.<br />ரிக் வேதத்திலேயே தூய தமிழ்ச்சொற்கள் உண்டு.<br /><br />அதனைப் புனிதப்படுத்தித் தேவ பாஷை என்றும், மற்ற மொழிகள் இழிந்தன என்றும் கற்பிக்கப்பட்டதைத் தமிழறிஞர்களே வழி மொழிந்த போதுதான் பிரச்சனை நேர்ந்தது.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-43323931773127112472015-05-21T17:25:43.373+05:302015-05-21T17:25:43.373+05:30ஐயா வணக்கம்.
அறிய வகையற்ற பள்ளிக் குழந்தைமீதான அற...ஐயா வணக்கம்.<br /><br />அறிய வகையற்ற பள்ளிக் குழந்தைமீதான அறிவார்ந்தவர்களின் ஆக்ரமிப்பாக இது போன்ற பிழைகளைக் கருதினேன் .<br /><br />கூகுளில் தேடிய போது இப்படம் அதன் உருவகமாகப் பட்டது.<br /><br />தங்கள் கண்களிலோ கருத்திலோ காட்சிப்பிழையில்லை.<br /><br />என் பார்வையில் வேண்டுமானால் கோளாறிருக்கலாம்.<br /><br />தங்களின் பாராட்டிற்கு நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30570966783334509812015-05-21T13:50:32.596+05:302015-05-21T13:50:32.596+05:30விளக்கம் அழகு விஜூ.
படம்தான் உதைக்கிறதோ?
பெண்ணின் ...விளக்கம் அழகு விஜூ.<br />படம்தான் உதைக்கிறதோ?<br />பெண்ணின் மீதான பாலியல் கொடுமைக்கான படம்போல் தெரிகிறதே?<br />என் கண்ணில் (அ) கருத்தில்தான் பிழையா?<br />காட்சிப்பிழைதானோ? கொஞ்சம் பாருங்களேன்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27897930975919765042015-05-21T11:15:54.121+05:302015-05-21T11:15:54.121+05:30கலம்பகம் பற்றிய பதிவுக்கு சுவாரஸ்யமா நம்ம பகவான்ஜி...கலம்பகம் பற்றிய பதிவுக்கு சுவாரஸ்யமா நம்ம பகவான்ஜி பாஸ் பெயரும் கோர்த்து கலக்கீடீங்க அண்ணா:) இப்படி வடமொழியை தமிழோடு இணைக்கும் அரும்பணியை செய்த அந்த அறிஞர்களை பாராட்டத்தான் வேண்டும்:(((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-589132439527174642015-05-21T08:42:39.232+05:302015-05-21T08:42:39.232+05:30அறியாமையின் ஆழத்தில் தத்தளிக்கும் முன்னாள், இன்னாள...அறியாமையின் ஆழத்தில் தத்தளிக்கும் முன்னாள், இன்னாள் மாணவர்கள்...படம் அருமை, மறைமுக உவமை......Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-47097540809995647182015-05-21T08:20:52.360+05:302015-05-21T08:20:52.360+05:30அய்யா வணக்கம்,
தங்களின் கருத்தினோடு எனக்கு உடன்பாட...அய்யா வணக்கம்,<br />தங்களின் கருத்தினோடு எனக்கு உடன்பாடுதான்.<br />எந்த கருத்தோடு,,,,,,,,,,,,,,,,,,,,,<br />தாங்கள் வைத்து இருக்கும் பட்டியலை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்தால் மாணவச் சமுதாயம் நலம் பெறும் என்பது என் சிறிய அவா, இல்லை ,,,,,,,,, <br />நிறைய தவறுகள் உண்டு, மாற்ற வேண்டிய பொரும் தமிழ் தலைகள் மாறினால் தான் உண்டு.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90361168018321771542015-05-21T08:06:31.611+05:302015-05-21T08:06:31.611+05:30கலம்பகத்தின் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்
தொடர்கி...கலம்பகத்தின் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் <br />தொடர்கிறேன்.<br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65864716959580776372015-05-21T07:58:32.907+05:302015-05-21T07:58:32.907+05:30அருமையான விளக்கங்கள்...
ஆறு மனமே ஆறு...
அந்த ஆண்ட...அருமையான விளக்கங்கள்...<br /><br />ஆறு மனமே ஆறு...<br />அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19517228487098440512015-05-21T06:48:49.173+05:302015-05-21T06:48:49.173+05:30பகவான் என்ற சொல்லாய்வு தொடங்கி ஆழமான விவாதம். ஏதாவ...பகவான் என்ற சொல்லாய்வு தொடங்கி ஆழமான விவாதம். ஏதாவது ஒரு நிலையில் தரப்படும் சில விளக்கங்கள் தவறாக இருந்தால்கூட நாளடைவில் உண்மையாகிப் போகிறது, அல்லது உண்மையாக்கப்படுகிறது என்ற ஒரு நிலையைத் தங்களின் பதிவு தெளிவுபடுத்துகிறது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26257780989555597052015-05-20T22:17:08.263+05:302015-05-20T22:17:08.263+05:30ஆறு குணங்களா இவை எல்லாம் ?அதுவும் என்னிடமா ?எனக்கே...ஆறு குணங்களா இவை எல்லாம் ?அதுவும் என்னிடமா ?எனக்கே குழப்பமாக் கீது கில்லர்ஜி,எதுக்கும் இதை வைத்து ஒரு பதிவைத் தேற்றுங்க :)<br /> மொளி உடைத்த ..தப்பு தப்பு ...வழிமொழிந்த விஜி ஸாருக்கும் நன்றி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25230330286298114532015-05-20T21:12:52.063+05:302015-05-20T21:12:52.063+05:30கலம் என்பது பன்னிரணடு மரக்கால்கள் உடையது என்று நீங...கலம் என்பது பன்னிரணடு மரக்கால்கள் உடையது என்று நீங்கள் சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன் ஐயா. ஆனால் சான்று இல்லை.<br /><br />அப்போதும் அதனைக் கலம் + பகம் என்று பிரிக்க வேண்டும்.<br /><br />அப்படிக் கொண்டாலும் பகம் என்பதற்கு ஆறு என்பது பொருளன்று.<br /><br />அது ஆறு குணங்களைக் குறிக்கும் சொல்.<br /><br />பின் அதனை ஆகுபெயராக்கி ஆறைக் குறி்க்கிறது என்ற வலிந்து பொருள் சொல்ல நேரும்.<br /><br />கலப்பு + அகம் என்பது, பல்வேறு பாவகையும் பொருளும் உறுப்பும் கொண்டு அமைந்ததால் ஆன பெயராய் இருக்கும் என்றே தோன்றுகிறது.<br /><br />இன்னும் பார்க்க வேண்டும்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38544900851194037462015-05-20T21:03:49.648+05:302015-05-20T21:03:49.648+05:30நந்திக் கலம்பகம் தமிழில் அறம்பாடியதற்குக் கிடைத்தி...நந்திக் கலம்பகம் தமிழில் அறம்பாடியதற்குக் கிடைத்திருக்கும் ஒரே இலக்கியமாகச் சொல்லப்படுவது.<br /><br />கவிநயமுள்ள பாடல்கள் பல உண்டு.<br /><br />வாய்ப்பிருப்பின் அது பற்றிக் கொஞ்சம் பேசலாம் அம்மா.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62473146554427392612015-05-20T20:51:36.465+05:302015-05-20T20:51:36.465+05:30“கலம்பகம்” என்பதை “கலப்பு + அகம்” என்றும், பன்னிரண...“கலம்பகம்” என்பதை “கலப்பு + அகம்” என்றும், பன்னிரண்டு மரக்கால்கள் கொண்டது ஒரு “கலம்” என்றும் கருதத் தோன்றுகிறது.<br />இது என்னுடைய கருத்து. சான்று கூற இயலவில்லை அய்யா.<br />சிறந்த பதிவு.<br />நன்றி.<br />rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.com